Monday, June 17, 2013

85 நாட்களில் விளையும் புதிய மக்காச்சோளம்.

 
 
மக்காச்சோளத்தோட்டம்.
85 நாட்களில் விளையும் புதிய மக்காச்சோளம்.

அகமதாபாத்: குஜராத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்காக 85 நாட்களுக்குள்ளேயே அறுவடைக்கு தயாராகிவிடும் புதிய மஞ்சள் நிற மக்காச்சோளத்தை ஆனந்த் விவசாய பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. குஜராத்தில் 4.23 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 6 லட்சம் டன் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்குடியின மக்கள் பெரும்பாலும் சோளத்தைதான் பயிரிடுகின்றனர். இவர்கள் பயிரிடும் சோளம், அறுவடைக்கு தயாராக குறைந்தபட்சம் 120 நாட்கள் வரை ஆகின்றது.

குஜராத் மாநில பழங்குடியின மக்களுக்காக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹிஸ்ஸார் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஹை குவாலிட்டி புரோட்டீன் மைஜ்-1 என்ற பெயரில் புதிய மக்காச்சோளம் கண்டுபிடித்து அளிக்கப்பட்டது. இந்த மக்காச்சோளம் உட்பட வேறு எந்த சோளத்தையும் விட அதிகளவில் விளையக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் புதிய சோளத்தை ஆனந்த் விவசாய பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. இதற்கு குஜராத் ஆனந்த் மஞ்சள் ஹைபிரிட் மைஜ்-1 (கேயம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்ற வகை மக்காச்சோளம், ஒரு ஹெக்டேரில் அதிகபட்சமாக 1,439 கிலோ விளைகின்றது. ஆனால், (கேயம்) சோளம், ஒரு ஹெக்டேருக்கு 4,000 கிலோ வரை விளையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 85 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும் என்றும், காரீப் (குறுவை) பருவத்தில் பழங்குடியினர் பகுதியில் பெய்யும் அதிக அளவு மழையையும் இது தாக்குப்பிடிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------(தொடரும்)

Friday, June 14, 2013

மதிப்பூட்டப்பட்ட தானிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.







மதிப்பூட்டப்பட்ட தானிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.

கோவையில் மதிப்பூட்டப்பட்ட தானிய பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 24ல்  துவங்குகிறது.

மத்திய சிறு, குறு மற்றம் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தின் (எம்.எஸ்..எம்.) கோவை கிளை சார்பில், சிறு தானியங்களைக் கொண்டு மதிப்பூட்டப்பட்ட தானியப் பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி, ராம்நகர் பட்டேல் ரோட்டிலுள்ள அலுவலகத்தில், வரும் 24ல் துவங்குகிறது, ஜூன் 29ல் நிறைவடைகிறது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறைக்கை;

பயிற்சியில், தானியத்தின் முக்கியத்துவம், இயந்திரங்களைக் கொண்டு வியாபாரரீதியில் தயாரிக்கும் பல்வேறு தானியப் பொருட்களின் செயல் விளக்கம், தொழில் அங்கீகாரம் மற்றும் வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கான வழி முறைகள், உணவுத் தொழிலுக்கான வியாபார உத்திகள் குறித்த அனுபவம் முள்ளவர்களால் செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்ச்சிகள் அளிக்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்றவர்கள் வரலாம். 18 வயது மற்றும் அதற்கு மேற்ப்பட்டோர். முதலில் வருவோருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, எம்.எஸ்.எம்..,வளர்ச்சி நிலையம், 386, பட்டேல்ரோடு, ராம்நகர், கோவை-641009 என்ற முகவரியிலும் 0422-223 3956, 223 0426 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------(தொடரும்)
நன்றி- தினமலர்.