Showing posts with label ..TNAU ல் பயிற்சி. Show all posts
Showing posts with label ..TNAU ல் பயிற்சி. Show all posts

Monday, November 26, 2012

அங்கக வேளாண்மை கருத்தரங்கு.




அங்கக வேளாண்மை கருத்தரங்கு.

மாநில அளவில் அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-

மாநில அளவிலான அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கம் நவ., 27 முதல் 29ம் தேதி வரை பல்கலை  பொன்விழா அரங்கில் நடக்க உள்ளது. பல பகுதிக்களிலிருந்து 250க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.  கருத்தரங்கில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், விபரங்களுக்கு 0422 6611523, 6611245, 22441031 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறைக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, September 1, 2012

தேனிவளர்ப்பு.




தேனி அடுக்கு

தமிழ்நாடு வேளாண்பல்கலையில் தேனிவளர்ப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண்பல்கலையில், தேனிவளர்ப்பு குறித்த, ஒரு நாள் பயிற்சி வரும் 6ம் தேதி அளிக்கப்படுகிறது.

தேனிகூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனிகூட்டங்க்களை சேர்த்து வளர்க்கும் முறை,  ராணித்தேனி 
உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிர்வாகம் உள்ளிட் டபயிற்சிகள், இதில் வழங்கப்படுகின்றன.

பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், செப்., 6ம் தேதி காலை 9..00 மணிக்கு, பல்கலை பூச்சியியல்துறைக்கு வரவேண்டும். பயிற்ற்சியில் கலந்து கொள்வதற்கு, 150 ரூபாய்பயிற்சிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். காலை 9..00. முதல் மாலை 5.00 மணிவரை, பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் இறுதியில், சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல்துறை, தமிழ்நாடுவேளாண் பலகலை, கோவை-641003 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
தேன் எடுக்கும் கருவி.


------------------------------------------------------------------------------------(தொடரும்)

நன்றி தினமலர்.

Monday, November 21, 2011

மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி.

TNAU.



மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்பலையில் மசாலாபொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி, வரும் 23,24ம் தேதிகளில் நடக்கிறது.

மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் மற்றும் பலவகை காய்கறி ஊறுகாய் தயாரிப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வர இயலாதவர்கள் பயிற்சிக் கட்டணத்தை வரைவோலை மூலம் முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி எனும் பெயரில், கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர் மற்றும், தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-641003 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள கடைசி நாள் நவ.22. கூடுதல் தகவல் பெற 0422-6611268 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------(தொடரும்)