Wednesday, November 18, 2009

பஞ்சகவ்யா.



பஞ்சகவ்யா தொடர்ச்சி

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை.

தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய தொழில் நுட்பத்தில் அனுபவம்
வாய்ந்த, இயற்கை வழிச்சாகுபடியாளர்களின் சீரிய செயல்
முறைகளின் அடிப்படையில், கீழ் காணும் மூலப்பொருட்
கள் மற்றும் உற்பத்தி முறைகளைக் கொண்டு பஞ்சகவ்யா
தயாரிக்கப்படுகிறது.

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க தேவையான பொருட்கள்.

பசுஞ்சாணம் ------------------------- 5.0 கிலோ

பசுவின் கோமையம் ------------------ 5.0 லி

பசும்பால் ---------------------------- 2.0 லி

தயிர் -------------------------------- 2.0 லி

நெய் -------------------------------- 1.0 லி

கரும்புச்சாறு ------------------------- 3.0 லி

தென்னை இளநீர் --------------------- 3.0 லி

வாழைப்பழம் ------------------------ 2.0 கிலோ


பசுஞ்சாணிஐந்து கிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு
லிட்டரைக் கலந்து, பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில்
நான்கு நாட்கள் வைத்து தினம் காலை மாலை இரு முறை
இதைப் பிசைந்து விட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற
பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண் பானை
அல்லது சிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி
யில் போட்டு நன்கு கரைத்து கலக்கி, கம்பி வலையால்
அல்லது நைலானாலான கொசுவலையை கொண்டு மூடி
நிழலில் வைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம்
காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட
வேண்டும். இது பிராணவாயுவை பயன் படுத்தி வாழும்
நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த
முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

பஞ்சகவ்யாவின் இயல்வேதிப் பண்புகளை ஆராய்ததில்
அதில் பயிருக்குத்தேவையான தழை, மணி, சாம்பல்
சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பயிர்
வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம்
மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் இருப்பது
கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யாவில் கரும்புச்சாறு
வெல்லம் ஆகியவை ஒரு பாகமாக சேர்ப்பதால்
அது அமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும்
நுண்ணுயிர்களான ஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ்
ஆகியவையும் பஞ்சகவயாவில் அதிகம் காணப்படு
கின்றன. லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங்
கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய்
எதிர்ப்புப் பொருடகளையும் உற்பத்தி செய்கிறது.
இப்பொருட்கள் நோய்க் கிருமிகளை எதிருக்கும் திறன்
பெற்றதோடு உயிர் வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல்
படுகிறது. இதோடு ஐசோபிரின் கூட்டுப் பொருட்களும்
பஞ்சகவ்யாவில் உள்ளன.

ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை உற்பத்தி செய்ய ஆகும்
செலவு சுமார் 35 முதல் 40 ரூபாய் ஆகும். மேலும்
விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளிலிருந்து
கிடைக்கும் பொருட்களிலிருந்து மிகப் பெரிய அளவில்
பஞ்சகவ்யாவை தயாரித்து பயன் பெற முடியும்.
பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகவ்யா தெளிக்கும்
முறையானது வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்க
ருக்கு பயிர்களுக்கு 3.5 லிடர்ரும், மரங்களுக்கு 4.7
லிட்டரும் ஒரு தடவை தெளிப்பதற்கு தேவைப்படும்
பஞ்ணகவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர்
தண்ணீருக்கு 30 மில்லி பச்ணகவ்யா) கலந்து 15-30
நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
பஞ்சகவ்யாவானது ஏராளமான நுண்ணூட்ட சத்துக்
களையும் வளர்ச்சியூக்கிகளையும், நுண்ணுயிர்களையும்
மற்றும் அங்கக தனிமங்களையும் கொண்டுள்ளது.
இதுவே தாவரங்களின் அதிகப்படியான வளர்ச்சியையும்
மகசுலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயர்களையும்,
மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாது
காத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, பூச்சி மற்றும்
நோய் கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் பெரும்
பங்கு வகிக்கிறது.


அடுத்து 'தசகவ்யா' தொடரும்.

Friday, November 13, 2009

பஞ்சகவ்யா.



பஞ்சகவ்யா.

கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (IFGTB)" அக்டோபர் மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் தரமான மரக்கன்று
உற்பத்தியில் 'பஞ்சகவ்யா' பற்றி திரு. பன்னீர் செல்வம் அளித்த
விளக்கம் பின்வருமாறு-
ந்மது முன்னோர்களின் அனுபவ அறிவானது மனித இனம் மட்டு
மின்றி விலங்கு மற்றும் தாவர இனத்தின் நலம் காக்கும் அறிவுப்
பெட்டகமாக திகழ்கிறது. விருக்சாயுர்வேதா என்பது அத்தகைய
அனுபவ அறிவு குறிப்புகளின் ஓர் தொகுப்பாகும். இது இயற்கை
சக்திகளான பஞ்சபூத த்தோடு (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும்
ஆகாயம்) இயைந்த விவசாய் மூறைகளை வலியுறுத்துகின்றது.
பசுமை புரட்சி என்ற பெயரில் உணவு தானிய உற்பத்தியை பெருக்க
அளவற்ற இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும்
பயன்படுத்தியதன் விளைவாக இன்று மக்கள் அனைவரும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகளைக்கும், பக்கவிளைவு
களுக்கும் ஆளாகி இன்னலுருகிறோம். இனி பக்கவிளைவுகள்
இன்றி நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று நலமாக வாழ இயற்கை
உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்துவது ஒன்றே
சிறந்த வழியாகும். இதில் பஞ்சகவ்யா மற்றும் தசகவ்யா
முக்கியமான பங்கினை வகிக்கின்றன.
'பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள்படும். பசுவிலிருந்து
கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால்
இதற்கு 'பஞ்சகவ்யா' என்று பெயர் வந்தது. கோயில்களில்
பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகின்ற பஞ்சாமிர்தம்தான்
பஞ்சகவ்யா இருவானதற்கு முன்னோடியாகும், முதலில்
பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், தயிர்
மற்றும் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்சகல்யா தயார்
செய்யப்பட்டது. பின்னர் அதனுடன் கரும்புச்சாறு அல்லது
வெல்லம், இளநீர், வாழைப்பழம் மற்றும் கள் போன்றவை
களும் சேர்க்கப்பட்டு நொதித்தல் தன்மையை அதிகப்படுத்திய
தால் தற்பொழுது பஞ்சகவ்யா ஒரு அங்கக சக்தியாகத்
திகழ்கின்றது.
பஞ்சகவ்யாவின் மூலப்பொருட்கள்.
பஞ்சகவ்யாவானது ஒரு சிறந்த இயற்கை உரமாக மட்டுமின்றி
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர்த்திரவமாகவும், பூச்சி
மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்பாற்றலை ஊக்குவிக்கும்
காரணியாகவும் விளங்குகிறது. பசுவின் கோமையத்தில் அதிக
அளவில் சோடியம் குளோரைடு, கால்சியம் சல்பேட், மக்னீ
சியம் சல்பேட், பொட்டாசியம் ஹிப்யூரேட் போன்ற தாதுக்
களும் அடங்கி உள்ளன. பசுஞ்சாணத்தில் 82% நீரும், 18%
திடப்பொருளும் அடங்கியுள்ளது. பசும்பால், சாருண்ணி
பாக்டீரியாவிற்கு சிறந்த ஊடகமாக உள்ளதோடு நச்சுயிரிக்கு
எதிர் கொல்லியாகவும் விளங்குகின்றது. பாலிலுள்ள புரதம்
கொழுப்பு, கார்போஹைட்ரேட்,அமினோ அமிலம், கால்சியம்
ஹைட்ரஜன், லாக்டிக் அமிலம் மற்றும் லாக்டோபேசில்லஸ்
பேக்டீரியா போன்றவை பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
பசு நெய்யானது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த பண்டைய
காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின் ஏ பி
கால்சியம் மற்றும் கொழுப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன.
மேலும் வெட்டுக்காயங்களில் தொற்று நோயைத் தடுக்கும்
குளுகோசைடும் இதில் அடங்கியுள்ளது. பசுமாட்டுத்தயிரில்
அதிக அளவில் நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிர்களை
ஊக்குவிப்பதன் மூலமாக நோதித்தலுக்கு உதவுகின்றது.
தென்னை இளநீரானது கைனட்டினிற்கு விலை மலிவான
மாற்றாக செயல்படுவதுடன், நெல்லில் பச்சையத்தை
அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.

தயாரிக்கும் முறை தொடரும்.

Sunday, November 1, 2009

பண்ணைச்சுற்றுலா



பண்ணைச்சுற்றுலா-பெரியகொடிவேரி.

கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (IFGTB)" கடந்த மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் இரண்டாவது
நாள் ஒரு பண்ணைச் சுற்றுலா ஈரோடு மாவட்டம் பெரிய
கொடிவேரியில் உள்ள ஸ்ரீ முருகவேல் வேளாண்மைப்
பண்ணைக்கு சுமார் 35 விவசாயிகள், விஞ்ஞானிகளுடன்
கொங்கு என்.கொளந்தசாமி அழைத்துச் சென்றார்.

செவாலியர், டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி பல
வெகுமதிகள் பெற்றவர் 9443006666 மிக்க ஆர்வம்
உள்ளவர். அவரது உரவினர் குமாரசாமி மற்றும் பழனிசாமி
இருவரும் இவருக்குத் துணையாக உள்ளார்கள்.

பண்ணை ஆரம்ப வருடம் 1993, பண்ணையின் பரப்பளவு
230 ஏக்கர். தண்ணீர் பாசனம் ஏற்படுத்திய வருடம் 1998.
பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு 160 ஏக்கர். ஆரம்ப
கட்டத்தில் மஞ்ஞ்சள், மரவள்ளி, சோளம், வாழை, நெல்,
கரும்பு, ரோஸ்மேரி, பாம்ரோசா, சபேத்முசலி, கோசாப்
பழம், பாகல், புடல், பூசனி, புகையிலை மற்றும் எள்
ஆகியன பயிரிடப்பட்டன. திராச்சையும் நெல்லியும்
நீண்டகாலப்பயிர்களாக இருந்தன.

பெரிய கொடிவேரி அணைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில்
பம்பிங் செய்ய கட்டிடங்கள் அமைத்து 30 எச்.பி. உள்ள
5 சர்வீசுகள் பெற்றுள்ளார். அங்கிருந்து பண்ணைக்கு 12 அஙுகுல
எ.சி.சி. பைப் மூலம் 2000 மீட்டர் ஒன்றும் 1250 மீட்டர் பைப்
ஒன்றும் நிலத்தடியில் பதித்து பண்ணையில் உள்ள பெரிய
நீச்சல் குளம் போன்ற தொட்டிக்குக் கொண்டுவந்து அதிலிருந்து
தோட்டதுதிற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பண்ணைக்குள்
30 எச்.பி. ஒரு சர்வீசும் 10 எச்.பி. 5 சர்வீசும் அமைத்துள்ளார்.
எந்தக்காலத்திலும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை.

பயிர்கள் முக்கோண நடவுமுறை.

10'X 10' மலைவேம்பு 13 ஏக்கர்6000 கன்றுகள். 22 மாதங்கள்
13'X 13' மூங்கில் வல்காரீஸ் 5 ஏக்கர் 1400 கன்று. 18 மாதம்
15'X 15' மூங்கில் வல்காரீஸ் 8 ஏக்கர் 1600 கன்று. 6 மாதம்
5.5'X 5.5'யூகோலிப்டஸ்,லாரா.10 ஏக்கர் 16000 கன்று. 27 மாதம்
12'X 12' நாட்டு வாகை, பூவரசு 5 ஏக்கர் 800 கன்று. 18 மாதம்
8' X 8' மகாகணி, காயா. 2000 கன்று 14 மாதம்
5' பார் கரும்பு நிலத்தடி சொட்டு நீர். 22 ஏக்கர்
5' பார் கரும்பு சாதாரண முறைப்பாசனம்.10 ஏக்கர்.
----------பாப்புலர் மரம் 30 கன்று 6 வருடம்.
----------தென்னை. 3000 கன்றுகள் 105 வருடம்.
----------தென்னை பதிமுகம் ஊடுபயிர்.800 கன்றுகள் 2 வருடம்.
---------- சைமரூபா (சொர்கமரம்) 30 கன்று 6 வருடம்.
---------- சந்தனம். 6 கன்று. 2 வருடம்.

=====================================================

பயிர்கள் நேர் நடவு முறை.

15'X 15' குமழ் மூங்கிலுக்கு இடையில்.8 ஏக்கர் 1500 கன்று 6 மாதம்
5'X 5' குமிழ் தனியாக-----------அரை ஏக்கர்400 கன்று 14 மாதம்.
5'X 5' பென்சில் தனியாக-------அரை ஏக்கர் 400 கன்று 14 மாதம்.
6'X 6' பதிமுகம் தனியாக-----17 ஏக்கர் 17000 கன்று. 4 வருடம்.
5'X 5' சவுக்கு ஜுங்குலியான-----10 ஏக்கர் 18000 கன்று 27 மாதம்.
12'X 12' ஈட்டி---------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' சிசு----------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' செஞ்சந்தனம்-------------- 200 கன்று 18 மாதம்.

=========================================================

பண்ணைமுழுதும் ஒறே பசுமையாக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு
மட்டும் கிச்சிடிசம்பா நெல் பயிரிட்டுள்ளார். சர்கரை ஆலையிலிருந்து
உரம் டன் கணக்கில் வாங்கி மற்ற சாண உரங்களுடன் கலந்து நல்ல
கலப்புரமாக மாற்றி இடுகிறார். எல்லா மரங்களுக்கும் சொட்டு நீர்
பாசன முறைதான் பின்பற்றுகிறார். எல்லாமே வளமாக உள்ளன.
தென்னையில் பதிமுகம் மரம் நட்டதால் பதிமுக முட்கள் உள்ளே
செல்ல முடியாமல் தடையாக உள்ளன.


பார்க்கவேண்டிய மரப்பண்ணை. வாழ்க வழமுடன்.


------------------------(விவசாயம் தொடரும்)

Thursday, October 29, 2009

வேளாண் தேசிய மாநாடு

கோவையில் வேளாண் தேசிய மாநாடு.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்
வரும் நவம்பரில் 6,7,8 ஆகிய தேதிகளில் வேளாண்மை
அறிவியல் நிலையங்கிளின் தேசிய மாநாடு நடக்கவுள்ளது.

முதல் நாள் நிகழ்சியில் தமிழக முதல்வர் கலந்து
கொளிகிறார். மத்திய வேளாண் மற்றும் நுகர்வோர்
நலம், உணவு மற்றும் பொது வினையோக அமைச்சர்
திரு சரத்பவார் வேளாண் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள்
பங்கேற்கின்றனர். மாநாட்டில் வேளாண் அறிவியல் நிலைய
விஞ்ஞானிகளின் அனுபவங்கள்,வெற்றிக் கதைகள், சிறப்பு
தொழில் நுட்ப பறிமாற்றம் குறித்த கருத்துப் பறிமாற்றம்
நடைபெறும்.

வேளாண் பல்கலை துணைவேந்தர் திரு முருகேசபூபதி
மேலும் கூறியதாவது-

தேசிய அளவில் 569 வேளாண் அறிவியல் நிலையங்கள்
இயங்கி வருகின்றன. அதில் 30, தமிழகத்தில் உள்ளன
இதில் 14, கோவை வேளாண் பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ளது. தேசிய அளவிலான 569 வேளாண் அறிவியல்
நிலையங்களின் சார்பில் விஞ்ஞானிகள் இம்மாநாட்டில்
பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் துவக்கவிழாவில், தலை
சிறந்த வேளாண் அறிவியல் நலையங்களுக்கான விருதுகள்
வழங்கப்படும். பல்கலை வளாகத்தில் 150 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழவர் இல்லம் திறந்து
வைக்கப்படும்.



------------------------(விவசாயம் தொடரும்)

Wednesday, October 14, 2009

நவீன தொழில்நுட்பங்கள்

பனிவரகு கோ.5

சாகுபடி :- இந்த ரகத்தின் சிறப்பம்சங்கள்; மிகக்குறுகிய
வயது-70 நாட்கள். அதிக தூர்கள்- 4 - 10. அதிக கதிர்
நீளம் 135 செ.மீ. அதிக ஊட்டச்சத்து கொண்டது
அதிக மகசூல். திரட்சியான மஞ்சள் நிற தானியம்.
வறட்சியைத் தாங்கும் தன்மை. பூச்சி மற்றும் நோய்
களைத் தாங்கி வளரும் தன்மை.

பருவம் :-ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்.

நிலம் தயாரித்தல் :- செம்மண் மற்றும் இரு மண் கலந்த
நிலங்கள் ஏற்றவை. கோடை மழையைப் பயன் படுத்தி
நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு
செய்ய வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம்
தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் களைகள்
கட்டுப்படுத்தப் படுகின்றன.

விதையளவு :- வரிசை விதைப்புக்கு-ஏக்கருக்கு 4 கிலோ.
தூவுவதற்கு-6 கிலோ. இடைவெளி; வரிசைக்கு வரிசை 25
செ.மீ. செடிக்குச்செடி 10 செ.மீ. கை விதைப்பு அல்லது
விதைப்பான் அல்லது கொரு கருவி கொண்டு வரிசை
விதைப்பு செய்யலாம். ஒரு ஏக்கருக்குத் தேவையான
விதையளவிற்கு ஒரு பொட்டலம் (200) கிராம் அசோ
பாசை அரிசிக்கஞ்சியுடன் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல் :- ஒரு ஏக்கர் நிலத்தில் அடியுரமாக 5 டன்
மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது
பரப்பி பிறகு நிலத்தை உழவேண்டும்.பின்னர் 8 கிலோ
மணிசத்து ஆகியவற்றை விதைப்பின் போது அடியுரமாக
இட வேண்டும். மேலுரமாக 8 கிலோ தழைசத்தை
விதைத்த 20-25 நாட்கள்கழித்து கிடைக்கும் ஈரப்பத்த்தை
பயன்படுத்தி இடவேண்டும்.

பயிர் கலைத்தல் :- விதைத்த 12-15ம் நாளில் செடிகளை
கலைத்து தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க
வேண்டும்.

களைநிர்வாகம் :- விதைத்த 18-20ம் நாள் ஒரு களை
எடுத்தல் அவசியம்.

பயிர்பாதுகாப்பு :- இந்த ரகத்தைப் பொதுவாக பூச்சிகள்
மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே பயிர்
பாதுகாப்பு செய்ய வேண்தியதில்லை.

அறுவடை :- நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை
செயுது களத்தில் காயவைத்து பின் விதைகளைப் பிரித்
தெடுக்க வேண்டும்.

தானிய மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 953 கிலோ.

தட்டை மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 2670 கிலோ.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
மற்றும் திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில்
மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றது.

(தகவல்-அ.நிர்மல்குமார், ப.தேவன் மற்றும் ரா.சத்யா,
சிறுதானியத்துறை, தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்
கழகம், கோயம்புத்தூர்-641 003. போன் 0422-24505507.)

---------------------------------(தொடரும்)

Tuesday, October 13, 2009

உயர்தர மரக்கன்று உற்பத்தி

-------------------------------(பயிற்சிமுடித்து நிழற்படம்)
உயர்தர மரக்கன்று உற்பத்தி.’

கோயம்புத்தூர், இரத்தினசபாபதிபுரம்,
கௌலிபிரௌன் சாலை அருகே
வனவளாகத்தில் ‘வனமரபியல் மற்றும்
மரப்பெருக்கு நிருவனம்’ (I.F.G.T.B.)
சுமார் 30 விவசாயிகளுக்கு மேல்
உயர்தர மரக்கன்று உற்பத்தி செய்வது
பற்றித் தொழில் நுட்பங்கள் மற்றும் பல
தகவல்கள் சென்ற 8-10-2009 மற்றும்
9-10-2009 தேதிகளில் விஞ்ஞானி
கள் வகுப்பறை விளக்கமும்,
கலந்துறையாடலும் செயல்முறை விளக்கமும்,


மரப்பண்ணை சுற்றுலாவும் சிறப்பாக அளித்
தார்கள். இந்த பயிற்சியின் இன்றி
யமையாயது குழுப்புகைப்படத்துடன் சான்றிதழும்
அளித்தது விவசாயிகளின் வாழ்வில் மறக்க
முடியாத ஒன்று. மேலும் இந்த நிறுவனத்தின்
இயக்குனர் திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ்.
அவர்கள் இந்தப் பயிற்சிக்கு மிகவும்
உருதுணையாக இருந்து பல அறிவுறைகள்
அளித்தார்கள். இந்த நிறுவனம் காரமடை
அருகே ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளது.
அதில் பல அறிய செயல்களையும் ஆராய்ச்
சிகளையும் செய்து விவசாயிகள் பலரையும்
தன்வயம் (I.F.G.T.B.பக்கம்) இழுக்கும்
என்பதில் ஐய்யமில்லை.
திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ். அவர்
கள் இந்த 2 நாட்கள் பயிற்சிக்கு தலைமை
யேற்றுத் தொடங்கிவைத்து ஆற்றிய உரையில்
சில துளிகள்.

நமது நாட்டின் பரப்பளவில் 23 சதவீதமே
வனங்களைத் தாங்கியுள்ளது. அவ்வனங்க
ளும் கால்நடை மேய்ப்பு, மரம்
வெட்டுதல், வேட்டையாடுதல், காட்டுத்தீ
போன்ற பல்வெறு விதமான இன்னல்
களுக்கிடையே வளர்ந்து வருகின்றன.
இத்தகைய காரணங்களால் நமது காடு
களின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு
ஒரு எக்டேரில் 2.1 கனமீட்டருடன் ஒப்பிடும்
பொழுது இது மிகவும் குறைந்த தாகும்.
இத்தகைய காடுகளிலிருந்து நமது தேவை
களைப் பூர்த்தி செய்வதாயிருந்தால்
அவை மேலும் நலிவடைய நேரும்.

இயற்கையான காடுகளில் இருந்து நமது
தேவைகளைக் குறைக்க ஒரு வழி வன
மரத்தோட்டங்கள் ஏற்படுத்துவதே யாகும்.
இத்தகைய தோட்டங்களை விவசாயம்
செய்ய இயலாது தரிசு நிலங்களில் உருவாக்க
இயலும். நீர் பற்றாக் குறை, ஆள் பற்றாக்குறை,
குறைந்து வரும் உற்பத்தித் திறன் மற்றும்
வருமானம் போன்று பல இன்னல்களை
விவசாயம் சந்தித்துவரும் வேளையில்
விவசாய நிலங்களிடையே மரவளர்ப்பு பெரும்
பெருமளவில் உதவக்கூடும். இவ்வாறு வனத்
தோட்டங்கள் மற்றும் விவசாய நிங்களிலே
மரவளர்ப்பு போன்ற திட்டங்கள் செயல்
பட முக்கியத் தேவை தரமான நாற்றுக்களே.
மரபுத்திறன், செயல் திறன் மற்றும் தோற்றம்
இவற்றில் சிறந்து விளங்கும் மரக்கன்றுகளை
வளர்ப்பதன் மூலம் நமது மரவளர்ப்பில்
உற்பத்தித் திறனை ஆண்டு ஒன்றுக்கு
ஒரு எக்டேரில் இருபதிலிருந்து மூப்பது கன
மீட்டர் வரை உயர்த்த இயலும். இத்தகைய
தோட்டங்கள் பெருகினாலே நமது நாட்டின்
மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்களின்
தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். மேலும்
இதனால் மரம் சார்ந்த தொழிற்சாலைகளும்
நன்கு இயங்க இயலும். இத்தகைய
தோட்டங்கள் கிராமப்புரங்களில் அமைவ
தால் ஊரக வளர்ச்சிக்கும் உதவும். மேலும்
நமது நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடு
கள் அமைய வேண்டும் என்ற கொள்கையை
அடையவும் வழிகோலும்.

இவ்வாறு வனத்தோட்டங்களின் மற்றும்
விவசாய நிலங்களிலுள்ள மரப்பயிர்
சாகுபடியின் உற்பத்தித்திறனை பெருக்கும்
நோக்கதுதுடன் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் கோவையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு 70 தலைப்பில் ஆராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன. ஆராய்ச்சியன் முடிவுகள்
சிறந்தவை கிராம மக்களுக்குச் சென்றடாய
வேண்டும் என்று கூறினார்.
--------------------------------(தொடரும்.)

Friday, August 7, 2009

கோலியஸ்.


முன்னுறை -: கோலியஸ் என்பது ஒரு மருந்துப் பயிர். இதை மருந்துக்கூர்கன் என்று தமிழில் சொல்வர். கோலியஸ் ஓமவள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைச் செடி. இது நெருக்கமான இலைகளில் தடிமனான இலைகளுடன் சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இச்செடியானது நுனிக்கொழுந்தைக் கிள்ளி நட்டு வளர்க்கப்படுவதால் ஆணிவேர் உண்டாவதில்லை. அடிக்கணுவிலிருந்து பக்க வேர்களே உண்டாகின்றன. பழுப்பு நிற வேர்களிலிருந்து ஒல்லியான கேரட் வடிவத்தில் 1 அடி நீளம் வரை கிழங்குகள் உருவாகின்றன. ஒரு செடியிலிருந்து அரைக் கிலோ முதல் ஒரு கிலோ வரை பச்சைக் கிழங்குகள் கிடைக்கின்றன. இதன் மருத்துவ குணம் -இரத்த அழுத்தத்தை சீர் செய்து இதயப் பழுவைக் குறைக்கின்றன. இது ஆஸ்த்மா, புற்று நோய், கிளாக்கோமா நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் முக்கிய மூலப்பொருளாகச் செயல்படுகிறது. தற்போது ஒரு கிலோ பச்சைக் கிழங்கின் விலை ரூ.10-00 க்கு மேல் விற்கப்படுகிறது. இதன் சாகுமடி குறித்துக் கீழே காண்போம்.

மண்வளம் -: கோலியஸ் கிழங்குச் செடிவளர பொலபொலப் பான மண் அவசியம். பொலபொலப்பான செம்மண், வண்டல்மண், வண்டல் சேர்ந்த குறுமண், சத்து நிறைந்த சரளமண் ஏற்றவை. தண்ணீர் தேங்கும் கரிசல் பூமி, களி நிலங்கள் வேண்டாம். களர் மண்ணும் கூடாது. கோலியஸ் வேர்கள் மெல்லியானவை தண்ணீர் தேங்கினால் தாங்காது. ஆகவே வடிகால் வசதியுள்ள நிலமாக வேண்டும். நீர் வடியாத இடத்திலோ நீரைப்பிடித்துக் கொள்ளும் சொதசொதப்பான மண்ணிலோ நட்டால் இளம் வேர்கள் மூச்சிவிட முடியாமல் அழுகிப்போகும். செடி வாடிப்போகும்.

கோலியஸ் கடல் மட்டத்திற்கு 3000 அடி வரை உள்ள இடங்களில் வளர்கிறது. சூரிய வெளிச்சம் நன்கு படக்கூடிய காற்றுள்ள மலைச் சரிவுகளிலும் நடலாம். மான வாரியாகப் பயிரிட்டால் பயிர்காலமான ஆறு மாத்ததிற்குள் சுமார் 100-120 செ.மீ. மழை தேவை. அதனைப் பிடித்துவைத் திருக்கக் கூடிய மண்ணும் தேவை. நிழல்கள் உள்ள இடத்தில் இதை நடக்கூடாது.

மண்ணின் கார அமில நிலை பிச் 8.00 - 7.00 க்குள் உள்ள இடங்களிங் இதன் மகசூல் திறன் அதிகமாகக்

காணப்படுகிறது. அதாவது கிழங்குகள் நன்கு பருக்கின்றன. கிழங்ககளின் எடையும் அதிகமாக இருக்கிறது. கத்திரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்களிலும் வாழையிலும் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம். ஆகவே அப்பயிர்களிக்குப் பின்பு உடநடியாக கோலியஸ் பயிரிட வேண்டாம். நிலத்தை உழுது நன்கு காயவிட்டு, நிறைய எரு அடித்து கலந்து விட்டு, நூற்புழுத் தடுக்கும் பயிர்களைப் பயிரிட்டு, அதற்கடுத்து கோலியஸ் பயிரிடுவதே பாதுகாப்பானது. சோளத்திற்குப் பின்பு கோலியஸ் பயிரிட்டாலும் மஞ்சள் பயிரிட்டாலும், கிழங்கு மகசூல் அதிகரிக்கிறது என்பது உண்மை.

நிலத்தை உழுது எரு இட்டுப் பண்படுத்தல் :- நிலத்தை புழுதிபட உழவு செய்யவும். நடவுக்கு ஒரு மாத காலத்திற்கு மூன்பாகவே ஏக்கருக்கு 7 டன் தொழு எருவைச் சிதறி விட்டு உழவு செய்யவும். ஈரமான மண்ணில் நுண்ணுயிர்கள் எருவைச் சாப்பிட்டுப் பெருகும். அந்நிலத்தில் பயிர்கள் நட்டவுடன் துளிர்க்கும். துரிதமாய் வளரும். களை விதைகள் முழைத்திருந்தால் அதனையும் உழுது காய விட்டு பார் போட்டால் அப்புறம் அதிக களை முளைக்காது. அக்களைச் செடிகளும் மண்ணோடு மக்கி நுண்ணூட்டங்களை பயிருக்குக் கொடுக்கும்.

பாத்திகள் அமைத்தல் -: கோலியஸ் மண்ணுக்குக் கீழ்தான் கிழங்குகள் உண்டாகின்றன. மண் இருகாமல் இருக்க 15 அடிக்கு 30 அடி நீளவாக்கில் 2 அடி இடைவெளியில் கலப்பையிலோ, டிராக்டரினாலோ மண்வெட்டியாலே பார்கள் அமைக்க வேண்டும்.

நடவு இடைவெளி -: வளமான எருவிடாத நிலங்களுக்கு பாருக்குப்பார் 2 அடி X செடிக்குச்செடி 1.5 அடி. அவ்வாறு ஏக்கருக்கு 14500 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த எருவிட்ட நிலங்களிக்கு பார் 2 அடி X செடிக்கு செடி 1.25 அவ்வாறு ஒரு ஏக்கருக்கு 17000 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த சரளை மண்ணுக்கு பாருக்குப் பார் 1.75 X செடிக்குச்செடி 1.25 அடி ஆக ஒரு ஏக்கருக்கு 20,000 கன்றுகள் தேவைப்படும்.

நடவுக்கு ஏற்ற கொழுந்து -: முற்றிய பின் கொழுந்து இளம் பச்சை நிறத்திலிருந்து கரும் பச்சை நிறத்திற்கு மாறி தண்டு பகுதி கெட்டியாயிருக்கும். அதன் நுனிக் கொழுந்தை சுமார் 10 செ.மீ.நீளம் விட்டு 3 - 4 கணுக்கள் இருக்கும். அந்தக் கணுவில் ஜோடி இலைகள் இருக்கும். அதை வெட்டி எடுக்கும் போது புது பிளேடால் வெட்டி சேகரிக்க வேண்டும்.

நீர் பாச்சல் -: பாத்திப் பார்களில் தண்ணீர் விட்டு கொழுந்துகளை தகுந்த இடைவெளியில் நட வேண்டும். பின் 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாச்ச வேண்டும். 40 நாட்களி வரை வாரம் ஒரு தடவை பாசனம், 40 நாட்களிக்குப்பின் 10 நாட்களுக்கு ஒரு தடவை, அறுவடைக்கு 10 நாள இருக்கும் போதே பாசனத்தை நிறுத்த வேண்டும். செடி வாடும் போது நீர் பாச்ச வேண்டும்.

களையெடுத்தல் -: கோலியஸ் நடவு நட்ட 15 - 20 நாடகளில் முதல் களையை வேர்களுக்குப் படாமல் சுரண்டி எடுக்கவேண்டும். தாமதித்தால் கிளை வேர்கள் படர்ந்து வெட்டுப் பட நேரிடும். இரண்டாவது களை கைக்களை சிறந்தது. கதிர் அரிவாளால் தரைமட்டத்தில் அறுத்து எடுப்பது நன்று. 40 நாட்களுக்குள் இரண்டாம் களை எடுத்து மண் அணைத்து விட வேண்டும். தாமதித்தால் வேர்கள் படர்ந்து விடும். 50 நாட்களுக்கு மேலாகி விட்டால் களை எடுக்கக் கூடாது. 60 நாடகளுக்கு மேல் அனாவசியமாக பாத்திக்குள் நடக்கக் கூடாது.

உரம் இடல் -: நட்ட 50 நாளிலும், 100 வது நாளிலும், 150 வது நாளிலும் பார் மேட்டில் இரண்டு வரிசைக்கு நடுவே உரம் இட வேண்டும். உரங்களை நீரில் கரைத்து விடும் முறை. 200 லிட்டர் டிரமில் வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ, கடலைப் புண்ணாக்கு 10 கிலோ மற்றும் டெஎபி 10 கிலோ, 3-4 நாட்கள் ஊரவைத்து பாசன நீறுடன் கலந்து பாச்ச வேண்டும். நுண்ணுயிர் உரம் 50 நாட்களிக்குள் இட வேண்டும்.

நோய்தாக்குதல் -: வேர்முடிச்சு நூற்புழு வேர்களில் உள்ள செல்களைத் தாக்குவதால் வேர் அழுகல் நோய் காரணிகள் புகுந்து தாக்கு கின்றன. பார்களில் செண்டு மல்லி, கொத்து மல்லி பயிரிட்டால் அதன் வேரோடு உரசிச் செல்லும் நீர் பாய்ந்தாலே நூற்புழு கட்டுப் படுத்தலாம். வேர் அழுகல் நோயிக்கு ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோ டெர்மாவிர்டியுடன் 200 கிலோ மண்புழு உரத்தையும் கலந்து தூருக்குத்தூர் வைத்து மண் அணைத்து 25-50 நாட்களில் 2 தடவையிட்டு நீர் பாச்சினால் கட்டுப்படும்.

அறுவடை -: கோலியஸ் கொழுந்து நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பே நீர்பாச்சல் நிறுத்த வேண்டும். தரைக்கு மேல் உள்ள தண்டு பகுதிகளை அறுத்து பாத்திக்கு வெளியே பொண்டு வந்து விட வேண்டும். ஆட்களை வைத்து மண் வெட்டியால் வெட்டி பொறுக்கு சேகரிக்க வேண்டும். மகசூல் ஒரு ஏக்கருக்கு 7-10 டன் கிடைக்க வாய்ப் புள்ளது. தற்போது பச்சைக் கிழங்கின் விலை ரூபாய் 10-00 க்குப் போய்கிறது. இது பயிரிட மான்யமும் உண்டு ஒப்பந்த சாகுபடியும் உண்டு.

ஒப்பந்த சாகுபடி முறையில் கோலியஸ் மூலிகைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த நிறுவனம்-

எம்.ஜி.பி.மார்கெட்டிங் சென்டர்ஸ்,

469, மகாலச்சுமி காம்ளெக்ஸ்,

அண்ணாபுரம்,

5 ரோடு, சேலம்-4.

போன்-0427-2447143.

செல்-9842717201 அலுவலகம்.

ஜி.பழனிவேல் பி.எஸ்.சி.,

செல்- 98427 44232.

மேலே உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டுகிறேன்.

--------------------------------------------------(தொடரும்)