Tuesday, May 17, 2011

Wednesday, January 19, 2011

வேளாண்மைத் தகவல்


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 
கோவை.
வணிகம் மற்றும் அறிவுசார் 
சொத்துரிமை துறை.
சேவைகள் 

# காப்புரிமை பெற்றுத் தருதல்.
(Patent)
# ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சி 
அளித்தல்.
# அறிவுசார் சொத்துரிமை ஆலோ
சனை வழங்குதல்.(IPR)
# வேளாண் வணிகம் சார்ந்த 
ஆலோசனை வழங்குதல்.

# பூகோள பதிவுரிமை பெற்றுத் 
தருதல். (GI)
# வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி 
 வாய்ப்பு சார்ந் ஆராய்ச்சி மற்றும் 
 அறிவுறை வழங்குதல்.

தொடர்புக்கு :- பேராசிரியர் மற்றும் தலைவர்,
வணிகம் மற்றும் அறிவுசார் 
சொத்துரிமை துறை.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர்-641003,
தொலைபேசி :- 0422-6611360, 0422-6611361.
 -------------------------(தொடரும்)



Monday, January 10, 2011

கருத்தரங்கு.


கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.

மூலிகை கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விரிவாக்க கல்வி இயக்கம் மற்றும் ஸ்ரீ அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் மையம் உதவியுடன் நடத்தும் மாதாந்திர மூலிகை கருத்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

23 வது  மாதாந்திர கருத்தாய்வு கூட்டம் நிகழ்ச்சி நிரல்.

தேதி -: 19-1-2011 புதன்கிழமை காலை 10.30 மணி.
இடம் -: தொழில்நுட்ப பூங்கா எண்-4
(முதல் கேட் வழியே உள்ளே வருக)
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
வரவேற்புரை- திரு.K.தேவராஜன் B,Sc., தலைவர்
கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம், கோவை.
தலைமையுரை- முனைவர் K.இராஜாமணி PhD, தூறைத்தலைவர், மருத்துவப்பயிர் மற்றும் மணமூட்டும் பயிர்த்துறை. TNAU.
சிறப்புரையாளர்கள்- முனைவர். K.N. செல்வராஜ் PhD,
தலைவர், வணிகம் மற்றும் அறிவியல் சொத்துரிமைத்துறை.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
பொருள்: விவசாயம் சார்ந்த வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை பதிவு செய்யும் விதிமுறைகள்.
திருமதி.  R. பார்வதி நாகராஜன் MA.,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
பிச்சாண்டிகுளம் மூலிகை பாதுகாப்பு மையம்
ஆரோவில், புதுச்சேரி-605 101
பொருள்-மூலிகை வளர்ப்பும் அதன் மதிப்புக்கூட்டி
சந்தைபடுத்துதலும் குறித்துப் பேசுவார்கள்.

காலை 10.30 மணி முதல் 1.30 மணிவரை 
கருத்தாய்வு கூட்டம்
அனைத்து விவசாயிகளும் சக விவசாய அன்பர்களுடன் கலந்து கொண்டு பயன் பெறுக. 

(தொடரும்.)

Monday, December 6, 2010

கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.


  கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் 
சங்கம்.
COIMBATORE DISTRICT HERBAL & TREE GROWERS ASSOCIATION.

மூலிகை கருத்தரங்கு.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 
விரிவாக்க கல்வி இயக்கம் மற்றும் ஸ்ரீ அவினாசிலிங்கம் 
வேளாண் அறிவியல் மையம் உதவியுடன் நடத்தும் மாதாந்திர 
மூலிகை கருத்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 
அழைக்கிறோம்.

22 வது மாதாந்திர கருத்தாய்வு கூட்டம்  நிகழ்ச்சி நிரல்.

தேதி        : 16-12-2010 வியாழக்கிழமை  காலை 10.30மணி.
இடம்     : தொழில்நுட்ப பூங்கா எண்-4
(முதல் கேட் வழியே உள்ளே வருக)
தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம்,  கோவை.
வரவேற்புரை  : திரு. K. தேவராக்ஜன் B.Sc., தலைவர்.
கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். 
கோவை.
தலைமையுரை  ; முனைவர் K. இராஜாமணி Phd. துறைத்
 தலைவர், மருந்துப்பயிர் மற்றும் மணமூட்டும்  பயிர்த்துறை, 
TNAU.
சிறப்புரையாளர்கள் :
 திரு. M. முருகன் M.SC., M.Phil.,  விஞ்ஞானி
18 ஹேர்ப்ஸ் ஆர்கானிக் லேப்(பி) லிட்., 
மதுரை.
பொருள் :-மூலிகை சேகரிப்பும், மூலிகை சாகுபடி
தொழிற்நுட்பங்களைப் பற்றியும்,
திருமதி.  R. பார்வதி நாகராஜன் MA.,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
பிச்சாண்டிகுளம் மூலிகை பாதுகாப்பு  மையம்
ஆரோவில், புதுச்சேரி-605 101
பொருள்:-மூலிகை வளர்ப்பும் அதன் 
மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துதலும் குறித்துப் பைசுவார்கள்.

காலை 10.30 மணி முதல் 1.30 மணிவரை கருத்தாய்வு 
கூட்டம் அனைத்து விவசாயிகளும் சக விவசாய அன்பர்
களுடன் கலந்துகொண்டு பயன் பெறுக. (அனுமதி இலவசம்)

 -------------------------------------------(தொடரும்)

கோவை, மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் 
சங்கத்தின் 106 வது (என்று சொல்லப்படும்) கருத்தாய்வுக் 
கூட்டம் இன்று  6-12-2010 தேதி காலை 10.00 மணிக்கு மேல் 
தொடங்கிற்று. இடம் வன பாதுகாவலர் அலுவலகம், வன
மரபியல், பாரதிபார்க் ரோடு,  கோவை.

திரு தேவராஜன் சங்கத்தலைவர் வரவேற்புரை வழங்கினார். 
கூட்டத்திற்கு விவசாயிகள் சுமார் 60 க்கு மேல் வந்திருந்தனர். 
இந்தக் கூட்டத்திற்கு சிறப்புரையாளராக 
திரு.எஸ்.கே. சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ்.,  வன பாதுகாவலர்
மற்றும் துறைத்தலைவர் உயிர் பன்மயத் துறை ஐ.எப்.ஜி.டி.பி., 
கோவை அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் ‘மரம் வளர்ப்
போர் சங்கங்களின் கடமைகள்’ என்ற தலைப்பில் பேச 
ஆரம்பித்தார். அதில் அவர் பேசிய சில கருத்துக்கள் பின்
வருமாறு.


சங்கத்தின் உறுப்பினர்கள் தாங்கள் விவசாயத்தில் சாதித்த 
வெற்றிக்  கதைகளை மீடியாக்களில் தெறிவித்து சங்கத்திற்கு 
நல்ல பெயரை  ஏற்படுத்த வேண்டும். முள் இல்லா மூங்கில் 
வளர்ப்பதில் புளியம்பட்டி அடுத்துள்ள விவசாயி ஒரு ஏக்கரில் 
 5 ஆண்டில் 13 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். அவர் கட்டிங் 
மூலம் பதியம் போட்டு நாற்றுக்கள்  விற்றுள்ளார். மேலும்
ஈரோடு, தாராபுரம் பகுதியில் மூலிகைகள்  போட்டு நல்ல 
லாபம் அடைந்து வருகிறார்கள். விவசாயிகளின் உற்பத்திப் 
பொருளுக்கு விற்பனையின் போது சங்கம் உதவி 
செய்துள்ளதா? வருபவர்களுக்குத் தகவல் மட்டுமே 
அளித்து வந்துள்ளது.  விவசாயிடமிருந்து கோரிக்கைகள் 
வராமல் சங்கம் முன்னிருந்து அறிந்து கொண்டு அவர்
களுக்கு உதவிகள் செய்துள்ளதா? விவசாயிகளின் சவுக்கு
மரம் வளர்ப்பதில் விற்பனையில் அரசு நிர்ணித்த ரூ.2500 
கிடைக்காமல் ரூ.1500 க்கு விற்று இழப்பு 
ஏற்பட்டதற்கு சங்கம் ஏன் உதவி செய்யவில்லை? அரசாங்கம் 
நிர்ணையம் செய்யும் விலை சங்கம் ஏன் பரிந்துறை செய்து 
ஏற்பாடுகள் செய்யவில்லை? சங்கத்திற்கேன்று ஒரு மத்திய
நாற்றங்கால் இல்லை வெளியில் அதிக விலை கொடுத்து 
நாற்றுக்கள் வாங்கும் நிலை ஏன்? சங்கத்திற்கென்று ஒரு 
பத்திரிக்கை ஏன் இல்லை? சங்கத்தின் செயல் பாடுகள், 
விலைகள், அரசு ஆணைகள், எந்தெந்த பயிர்களுக்கு 
என்னென்ன மானியம் அளிக்கப்படுகிறது போன்ற விபரங்கள் 
வெளியிட ஏன் ஒரு வெப்சைட்டு ஏற்படுத்த வில்லை? 
விவசாயிகள் தற்போது வைத்த மரங்கள் 10 வருடம் கழித்து 
விற்பனைக்கு சங்கம் முன்கூட்டியே என்ன செய்யவுள்ளது? 
உறுப்பினர்களே சாமில் வைக்க  ஏற்பாடு செய்துள்ளதா? 
சங்கத்திற்கென்று ஒரு இடம் கட்டிடம் இருக்க 
வேண்டும், அங்கு தகவல் சொல்ல போன் இருக்க வேண்டும், 
அதற்கென்று ஒரு ஆள் இருக்கவேண்டும். சங்கம் சொந்தக் 
காலில் நிற்க  வேண்டும். உறுப்பினர்களின் நிலம், சர்வே எண், 
எவ்வளவு நிலத்தில் என்ன பயிரிட்டுள்ளார்கள் என்ற முழு
விபரம் சங்கத்தில் பதிவு செய்யாதது ஏன்?  சங்கம் 3 பேர் 
கொண்ட கமிட்டி ஆரம்பிக்க வேண்டும். தனித்தனியாக 
வேலைகளுக்கேற்ப 4 கமிட்டிகள் ஏற்படுத்தி அதன் 
பொருப்புகளை  அவர்களே செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். 
சங்கத்திற்கு நிதி நிலை  ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சிக்
 குட்பட்ட  இடங்களில் மரம் வெட்டுவதைத் தடுக்க சங்கம் 
எற்பாடுகள், ஆலோசனைகள் வழங்கி தீர்மானங்கள் ஏற்
படுத்தி ஆணைகளைநிறவேற்ற வேண்டும். உறுப்பினர்
களுக்குக் கடிதம் அனுப்புவதை நிறுத்தி “Tree information center”
IFGTB கோவை மையத்தில் ஒரு ரூபாய்  கொடுத்து 
அங்கத்தினரானால் அவரவருக்குத் தகவல் வந்து சேரும். 
அங்கு உள்ளவர் பெயர் மணிமுத்து போன்- 0422 2446633.
இதற்குப்பின் உறுப்பினர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்
தார். சிலர் குறைகளையும், சிலர் மிகைப்படுத்தியும்
கூறினார்கள். முக்கியமாக 3 வருடங்களுக்குமேல் பொதுக்
 குழு கூட்ட வில்லையென்றும், வரவு  செலவுகளைக் காட்ட 
வில்லையென்றும், நிர்வாகக் கமிட்டி நபர்களை மாற்ற 
வில்லையென்றும், கூறினார்கள். சங்கம் சிறப்பாக செயல்
பட்டால்  பத்திரிக்கைக் கார ர்கள் நம்மைத்தேடி வருவார்கள் 
அனால் இன்று கூட எந்தப் பத்திரிக்கையாளரும் வரவில்லை
என்று கூறினார்கள்.
திரு.சண்முகசுந்தரம் IFS அவர்கள் திருவண்ணாமலையிலி
ருந்து  9/2008 மாதம் வந்து இந்த சங்கத்தில் பேசியபோது  இதே
தலைவருக்குச்  சில கேள்விகள் விடுத்திருந்தார் அதை 
நான் 8-9-2008 ல் எனது வலைப்பதிவில் crop-kuppu.blogspot.com 
எழுதியதை தற்போது நினைவு கூருகிறேன்.

1. இந்த சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை என்ன 
நடவடிக்ககை எடுக்கப்பட்டது?

2. இதுவரை சங்கத்திற்கு நிதி ஒதுக்கப் படவில்லை என்ன 
நடவடிக்கை  எடுக்கப் பட்டது?

3. வங்கிகளுக்கு நிதி உதவி கேட்டு எந்த பிராஜக்ட் அனுப்ப
வில்லை ஏன்?

4. வங்கிகளிடம் கடன் பெறுவது திருப்பிக் கட்டுவது குறித்த 
பிராஜக்ட்டுகள் எங்கே?

5. தொழில் நுட்ப திறமையாளர்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப் 
பட்டுள்ளதா?

6. கூட்டம் வனத்துறை அலுவகத்தில் நடத்தப்படுவதை 
தவிர்த்திருகலாமே ஏன்?

7. சங்கத்திற்கு மத்திய நர்சரி ஏன் ஏற்படுத்தவில்லை?

8. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு மார்கட் வசதி 
ஏன் ஏற்படுத்தவில்லை?

9. சங்கம் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுக்
கள் ஏன் அளிக்கப் படவில்லை.

10. எத்தனை பிராஜக்டுகள் அனுப்ப ப்பட்டுள்ளன?

11. சங்கம் வனத்துறைக்கு என்ன செய்கிறது?

12. சங்கத்திற் கென்று வெப்சைட் தனியாக ஏன் ஏற்படுத்த 
வில்லை?

13. கலைக்டரிடம் சங்கம் பற்றி செயல் பாடு ஏன் தெறிவிக்க 
வில்லை? விவசாயிகள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டத்தில்
ஏன் கலந்து கொள்ள வில்லை?

14. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ஏன் வழங்கப் 

 படவில்லை?

15. சங்கத்திற்கென்று கம்யூட்டர், புரொஜகடர் ஏன் வாங்கவில்லை?


மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கூற இயலாது. இவை 
ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.  இந்த வலைப் 
பதிவை பார்ப்பவர்கள் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை
பின்னூட்டத்தில் தெறிவிக்கலாம்.   (தொடரும்)  
என்று எழுதியிருந்தேன் இதில் எதுவும்  நிறைவேற்ற 
வில்லை. ஆனால் இன்று ஒரு வெப்சைட் தொடங்க 
பணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். (தொடரும்)

Friday, December 3, 2010

வேளாண் பலகலையில் சாக்லேட் தயாரிக்க பயிற்சி.



சாக்லேட் மற்றும் மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி 
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் 7,8 ம் தேதிகளில்
நடக்கிறது. இது குறித்து, வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள  
அறிக்கை-
சாகலேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் 
தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் பயிறுசி வகுப்பு,
வேளாண் பல்கலையில் வரும் 7 மற்றும் 8 ம் 
தேதிகளில் நடக்கிறது. பயிற்சியின்போது, 
கொக்கோ மிட்டாய், பருப்பு மிட்டாய் மற்றும் 
சர்க்கரை மிட்டாய் வகைகளை எளிய முறையில் 
தயாரிப்பதறிகான தொழில்நுட்ப பயிற்சி 
அளிக்கப்படுகிறது, பயிற்சிக்கான 
கட்டணம் 1,000 ரூபாய். 

இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்,
பல்கலைக்கு நேரில் வந்து பயிற்சி கட்டணத்தை 
செலுத்தி  பெயர் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 
பயிற்சிக்கான கட்டணத் தொகையை, ‘டீன், வேளாண்மை 
இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ 
என்ற பெயரில் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் 
வங்கியில் செலுத்தும் வகையில் வரைவோலை எடுத்து, 
‘பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின் சார் 
தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, 
கோவை-  641003 என்றி முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பெயர் பதிவு செய்ய வரும் 6ம் தேதி கடைசி நாள்

விபரங்களுக்கு, 0422- 6611340, 6611268 என்ற எண்களில் 
தொடர்பு கொள்ளலாம்.

---------------------------------(தொடரும்)

Sunday, November 7, 2010

தேனீ வளர்ப்புப்பயிற்சி.




Training in bee keeping at TNAU on November 8

Tamil Nadu Agricultural University(TNAU) will organize a training in bee keeping on November 8 on the university premises.

According to a university release, hands-on training will be imparted in identification of bee colonies and their rearing, artificial group rearing of bees, queen bee rearing and production techniques, identification of natural enemies of bees and their management, Italian bee rearing technique, and so on.

Interested candidates have to reach the Department of Entomology before 9a.m. A fee of Rs.150 has to be remitted.

A certificate will be given at the end of training. Candidates can call 0422-6611214; or e-mail to entomology@tnau.ac.in. for details.

Bakery products

TNAU will organize training in preparing bakery products on November 9 and 10. the training will cover the following aspects: variety of breads, burgers, cake, and cookies, pav bhaji, pizza, and pie varieties.

Those interested can attend the training by paying a fee of Rs. 1,000. For details contact 0422-6611340, 6611268, a release says.