Friday, November 28, 2008

மூங்கில்.




மூங்கில்.

மூங்கில் ஒரு மரவகைப் புல். இது தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படும். உலகளவில் 1250 வகைகள்உள்ளன. இந்தியாவில் 23 ரகத்தில் 125 பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் மொத்த மூங்கில் காடு பரப்பளவு10.03 மில்லியன் ஹெக்டர் ஆகும். இது12.8 சதவிகிதம் தான். அதிகமாக மூங்கில்கள் வளரும் இடங்கள் அஸ்சாம், மணிப்பூர், மேகாலையா, மீசோராம், நாகாலேண்டு, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாட்டில் மேற்கு மலைத்தொடர், சேர்வராயன் மலை, கொள்ளி மலை, கொடைக்கானல், சிறுவாணி, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, கிழக்கு மலைத்தொடர்ச்சி போன்ற இடங்கள். உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது வியாபார நோக்குடன் தரிசு நிலங்களிலும் சம வெளிகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

மூங்கில்களில் முள்ளில்லா மூங்கில், (பேம்புசா டுல்டா, பேம்புசா நியுடன்ஸ், பேம்புசா பல்கோவா) மூள் உள்ள மூங்கில் என்று இரு வகையாகப் பிறிக்கலாம். தற்போது முள் இல்லாத மூங்கில் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறது. முக்கியமாக இருப்பது முள் மூங்கில், கல்மூங்கில், பச்சைமூங்கில், தட்டைமூங்கில், வல்காரிஸ் மூங்கில், சாப்பாட்டு மூங்கில், பெருமூங்கில், புத்தர் தொந்தி மூங்கில் போன்றவை. நடக்கும் மூங்கில் என்ற வகையுண்டு. நன்றாகத் தண்ணீர் தேவை. இதன் தூர் பக்கவாட்டில் பரவிக்கொண்டே போகும். வேகமான வளர்ச்சியுடையது. மூங்கில்களை நாற்றாக இருக்கும் பொழுது யாராலும் அதன் இனம் கண்டு சொல்ல முடியாது. பெரிதாகும் போது அதன் இலைகள், தோகை-மட்டை-கணு இடைவெளி, கணுவில் தோன்றும் வட்டங்கள் இவை கொண்டு அதன் இனத்தைக் கண்டு பிடிக்கலாம்.

கல் மூங்கில் தட்டை மூங்கில் இவை இரண்டும் 20 வருடத்திலிருந்து 60 வருடங்களில் பூக்கள் பூத்து, முதிர்ந்து, விதையாகி (மூங்கில் நெல்) அந்த மூங்கில் புதர் அத்துடன் காய்ந்து அழிந்து விடும். இதுவரை மூங்கில் இந்த ஆண்டில் தான் பூக்கும் என்று உறுதியாகக்கண்டு பிடிக்கவில்லை. பூக்காத மூங்கில்களும் உள்ளன. மூங்கில் 150 அடி உயரம் வரையில் வளரும். ஒரே நாளில் 3 மீட்டர் வளர்க்கூடிய மூங்கில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது.

மூங்கில் வடிகால் வசதி உள்ள மண் வகைகளில் வளர்க்கலாம். மூங்கிலுக்கு ஏற்ற மண் இரகங்கள் வண்டல் மண், படுகை நிலங்கள் மற்றும் இதர நிலங்களாகிய சரளை மண், கண்மாய் கரை மண், ஓடை மண், வண்டல் மண் கலந்த களிமண் பூமி மற்றும் மணற்பாங்கான நிலங்களுக்கு ஏற்றது. மழையளவு-1270 மி.மீ.-6350 மி.மீ., வெப்பளவு-உயர்ந்தளவு 42 டிகிரி முதல் 45 டிகிரி சென்டிகிரேடு வரை.

சூரிய ஒளி அதிகமாகவும் மற்றும் மழை நன்கு பெய்யும் இடங்களில் மூங்கிலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மழை குறைவாக உள்ள பகுதிகளில் நீர் பாச்சுவதின் மூலம் கூட மூங்கிலை வளர்க்கலாம். மூங்கில் மேட்டுப் பகுதிகளிலும் மற்றும் மலைச்சரிவுகளிலும் நன்கு வளரக்கூடியது. பாறை அடியில் ஆகாது, களிமண் ஆகாது, சட்டு இருக்க க்கூடாது. உவர்மண் ஆகாது.களர் மண் ஆகாது. உப்புத்தண்ணீரில் வளரும், சப்பைத்தண்ணீரில் வளராது, 5 அடி ஆழ செம்மண்ணாக இருந்தால் நன்கு வளரும்.

மூங்கில் நாற்றுத்தயார் செய்ய இரு வகையுண்டு. ஒன்று விதை மூலம் நாற்றுத்தயார் செய்து நடுதல். மற்றது விதையில்லாமல் மூங்கிலை உற்பத்தி செய்யலாம்.

1.களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.-----------------------
2. பக்கக்கிளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.--------------------
3. வேறுடன் கொண்ட களிகளைப் பயன்படுத்தல்.
4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.----------------------
5. களிகளை அகற்றி நடும் முறை. -----------------------
6. திசுமுறை வளர்ப்பு. (அடுத்த கட்டுரையில் விளகம் அளிக்கப்படும்)

மூங்கில் உபயோகம் தற்போது அதிகமாக உள்ளது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் சைனா முதலிடம் வகிக்கிறது, அதற்கு அடுத்து இந்தியாதான். மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் முடையப் படுகிறது. கைவினைப் பருள்கள் செய்கிறார்கள். மூங்கிலிலிருந்து தரமான வெண்மையான கிழியாத பேப்பர் செய்யப்படுகிறது. நாள்பட ஆனாலும் பேப்பர் பழுப்பு நிறமாக மாறாது. புல்லாங்குழல், மோர்சிங், போன்ற இசைக்கருவிகள், பலவிதமான பாய்கள், ஆண்கள் அணியும் சட்டைகள், ஊதுபத்திக் குச்சிகள், மூங்கில் பிளைவுட், வீட்டு உட்புற அழகு சாதனங்கள், ஊருகாய், சல்லடை, மூங்கில் தொட்டி, ஏணிகள் ஆகியவை செய்யப்பயன்படுகிறது. ஒருவிதமான இரண்டரை வருடமான மூங்கில் குறுத்திலிருந்து சாப்பாடு செய்யப்படுகிறது, மலைவாழ் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மூங்கில் சூப் நட்சத்திர ஓட்டல்களில் விற்கப் படுகிறது. கிராமங்களில் வீடுகட்டப் களிகள் பயன் படுகிறது. கட்டிட வேலைக்கு முட்டுக்கள் கொடுக்கப் பயன்படுகிறது. மூங்கில் மண் அறிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு இடையில் ஊடுபயிர்கள் கூட வளர்க்கப்படுகிறது. மூங்கில் நட்ட 3 ஆண்டுகளிலிருந்து லாட வடிவில் களிகளை வெட்டி விற்கலாம். பின் இரண்டுஆண்டுக்கு ஒருமுறை வெட்டிக் கொண்டே இருக்கலாம். மூங்கில் இலை கால்நடைகளுக்குத் திவனமாக் பயன்படுகிறது, மூலிகையாகவும் பயன்படுகிறது. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்
தொடரும்