Sunday, February 22, 2009

காட்டாமணக்கு பயிற்சி


விவசாய அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

வரும் 26-02-2009 வியாளக்கிழமையன்று வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள உயரி எரிபருள் சிறப்பு மையத்தில், ‘காட்டாமணக்கு சாகுபடி மற்றும் பயோடீசல் உற்பத்தி’ குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. இதற்கு 150 விவசாயிகள் மட்டுமே தேர்வு செய்ய இருப்பதால் ஆர்வமுள்ள விசாயிகள் தங்கள் வருகையை முன் கூட்டியே கடிதம் மூலம் ‘ பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம், வேளாண் பறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர்-641003, தொலைபேசி- 0422 6611376’ என்ற முகவரியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செயுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(குறிப்பு- பயிற்சியின் போது மதிய உணவு, கையேடு, போக்குவரத்துச் செலவுகள் இலவசமாக வழங்கப்படும்.)

Thursday, February 19, 2009

மூலிகை தகவல் மையம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மருந்துப்பயிர்கள் வாரியம் இணைந்து மருந்துப் பயிர்கள் தொடர்பு மையம் வழியாக மருந்துப்பயர்கள் சாகுபடியாளர்களுக்கும் இதற்குத் தொடர்புள்ள நிறுவனத்தினர்களுக்கும் இடையே ஒரு பாலம் போன்று இன்று 18-02-2009 ஒரு நாள் கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் தொகுப்பு பின்வறுமாறு.

அண்ணா அரங்கில்வந்து அமர்ந்திருந்த விவசாயிகளையும், நிறுவனங்களிலிருந்து வந்திருந்த உறமையாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் துறைசார்ந்த மாணவர்களையும், சிறப்புறையாற்ற வந்த திரு ராஜ்குமார் ஐ.ஏ.எஸ்., அவர்கள், டாக்டர் வடிவேல் அவர்கள் டாக்டர் திரு. பால்ராஜ், அனைவரையும் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வரவேற்றார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கம் பற்றி விவறித்தார்.

பின் திரு ராஜ்குமார் ஐ.ஏ.எஸ்., அவர்கள் சிறப்புறை யாற்றினார். இந்தியாவில் மட்டும்தான் ஆறு வித மருத்துவங்கள் நடைமுறையில் உள்ளது அவை ஆயுர் வேதம், சித்தா, யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் மற்றும் அலோபதி மருத்துவ முறைகள் பற்றி விவரித்தார். காடுகளில் சேகறிக்கும் மூலிகைகள் குறைந்தவுடன் மூலிகைகளை வியாபார நோக்குடன் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பித்தனர். மூலிகைகளுடன் உலோகங்களையும் சேர்த்து மருந்துகள் தயார் செய்தனர் என்றும் சில மூல்லிகைகள் பற்றியும் விளக்கினார். பின் ஒரு திருமணத்தில் விடைபெரும் போது தேங்காயிக்குப் பதிலாக பழவகை நாற்றுகள் மற்றும் மூலிகை நாற்றுகள் வைத்து விருப்பமுள்ள நாற்றை அளித்துள்ளதாகச் சொன்னார். அது ஒரு நல்ல உத்தி என்றார்.

அடுத்து இயக்குனர் டாக்டர் திரு. வடிவேல் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி விவறித்தார். இறுதியாக டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் நன்றி கூறினார். தேனீர் இடைவேளைக்குப் பின் நிறுவனங்களிலிருந்து வந்திருந்தவர்கள் பேசினார்கள்.

முதலில் டாம்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் திரு பால்ராஜ் பேசினார். சுமார் 200 வகை மூலிகைகள் வாங்கி மருந்துகள் தயார் செய்வதாகச் சொன்னார். மூலிகைப் பொருள்கள் தேவையுள்ளத்தை டெண்டர் முறையில் இதுவரை வாங்கப்பட்டதாகவும் தற்போது மருந்துப் பயிர்கள் கூட்டுரவு சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், மற்றும் ஒருகிணைந்த சொசைட்டி மூலமாக டெண்டர் இல்லாமலேயே வாங்குகிறார்கள். அவை பச்சையாகவும் காய்ந்த தாகவும் வாங்கப்படுகிறது. பச்சையாக வாங்கப்டுவதை அன்று மாலையே கிடைக்க வேண்டுமாம். அதில் போக்குவரத்துச் செலவையும் கூட்டிக் கொள்ள வேண்டுமாம். பொருள், அளவு, தரம் விலை நிர்ணையம் செய்து சென்னையில் கிடைக்கும் படி செய்ய வேண்டுமாம்.

பின் திரு ரவிக்குமார் பேசும் போது15 வகை மூலிகைகள் அவர்கள் நிறுவனம் (நேசனல்) வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். அவர்களது அலுவலகம் ஓசூர் தெங்கனிக் கோட்டையிலும், பெங்களூரிலும் இருப்பதாகச் சொன்னார். சிறியாநங்கை, மணத்தக்காளி, துளசி, நீர்பிரம்மி, சிறுகுறிஞ்சான் போன்றவை தண்டு, வேர், பட்டை போன்று காய்ததாக நல்ல தரம் வேண்டும் என்றார். ஒப்பந்த சாகுபடியும் உண்டாம். தெங்கினிக்கோட்டையில் 85 ஏக்கர் ஆர்கானிக் முறையில் மாடல் பாம் போட்டுள்ளார்களாம்.

லச்சுமி சேவா சங்கத்திலிருந்து டாக்டர் திரு. ஹரிகிருஷ்ணா பேசுகையில் 220 வகை மூலிகைகளை டிரேடர்ஸ் மூலம் காய்ந்த தாக வாங்குகிறார்களாம். 10 குழிக்களிடம் பச்சிலையாகவும் வாங்கி 300 வித மருந்துகள் தயார் செய்கிறார்கள். நெல்லி கிலோ
ரூ.40-00க்கு எடுக்கிறார்கள். அமுக்கிராவில் தரம் இல்லையாம், தான்றிக்காய் காயவைக்கும் போது மணல் கலந்துள்ளதால் தரம் இல்லையாம்.

எஸ்.கெ.எம். சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மெடிசன்ஸ் நிறுவனத்திலிருந்து திரு.விஸ்வனாதன் எம்.எஸ்.சி. அவர்கள் பேசினார். அவரது போன்-0420-2500590, 2501238, அலை பேசி-9443310539. அவர் 300 வகை ஆயுர் வேத மருந்துப் பொருட்கள் பச்சையாகவும், காஞ்சதாகவும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆறு குடும்பங்கள் தேவையான பச்சை மூலிகைகளைக் கொடுக்கிறார்களாம். அவை சில நிலக்கடம்பு, நிலாவரை, கரிசாலை, கண்டங்கத்திரி, துளசி, பேய் புடல், சித்தாமுட்டி, வில்வம், கொட்டக்கரந்தை, ஈஸ்வரமூலி முதலியன. மதியம் உணவு இடைவேளை 13.30 மணிமுதல் 14.30 மணிவரை இருந்தது.

பின் மர்ந்துகூர்கன் பயிரிடுதல் பற்றி அதன் நிறுவனர் திரு.பழனிவேல் பேசினார். அதில் விவசாயிகளுக்கு ஒப்பந்த சாகுபடியில் நன்மை பற்றிக் கூறுனார். ஆத்தூர் ஏரியாவில் விவசாயிகள் நன்கு பயனடைவதாக க்கூறினார். பின் சிரஞ்சீவி ஹெர்பல்ஸ் திரு.குமரேஸ் மேலும் விளக்கமளித்தார். பின் சென்னா பற்றி திரு.ராமச்சந்திரன் எடுத்துறைத்தார்.கண் வெளிக்கிழங்கு பற்றி பயிரிடுதல், மகரந்தச்சேர்க்கை செய்தல், காயவைத்தல் பற்றி விளக்கினார்கள், கள்ளிமந்தையில் அது பிறித்தெடுக்கும் யந்திரம் பற்றி ஆய்வில் உள்ளதாகச்சொன்னார்கள். அதன் விலை ஏற்றம் சரிவு பற்றிக் கூறினார்கள். ரோஸ்மேரி செடி வளர்ப்பில் பர்கூர் ஏரியாவில் விவசாயிகளுடனும், சுயுதவிக் குழுக்களும் மயிராட நிறுவனம் இணைந்து பச்சை இலையை ரூ.13-00 க்கு வாங்கி அதில் தாமரைக்கரையில் உள்ள எண்ணெய் எடுக்கும் யந்திரம் மூலம் எடுத்து கிலோ எண்ணெய் ரூ.1500-00 விற்கிறார்கள். நாற்று ஒரு ஏக்கருக்கு 16500 தேவைப்படுமாம். ஒன்றரைக்கு ஒன்றரைஅடி இடைவெளியில் நட வேண்டுமாம். மானாவாரியாகவும், தண்ணீர் பாச்சியும் நடலாம். வருடம் 4 அறுவடை செய்யலாம். நோய் வேர் புழு, இலைஅழுகல் மட்டுமே அது மழைகாலங்களில் தானாம். அதற்கு மருந்து அடிக்கிறார்கள். விசாயிகள் நல்ல லாபம் அடைகிறார்களாம்.

அடுத்து சோத்துக்கத்தாழை பற்றி எட்டையபுரத்தில் யூனிட் வைத்துள்ள திரு.சவுந்திர்ராஜன் பேசினார் அதில் வாக்கு வாதங்கள் வந்தன. விவயிகள் பயிர் செய்து நட்டம் அடைந்த தாக. சிலர் ஏமாத்துவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. சோற்றுக்கற்றாழை மடல் வெட்டி 3 மணி நேரத்திற்குள் தொழிற்சாலைக்கு வந்தால் தான் அதிலிருந்து வேதியப் பொருட்கள் பிறித்தெடுக்க முடியுமாம். இவர் கிலோ ரூ.2-50க்கு எடுத்துக் கொள்கிறார். 200 கிலோமீட்டருக்குள் எடுக்கிறார்.

சீனித்துளசி ‘சிவியார்’ மறுபடியும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் கிலோ ரூ.20-00 விற்கிறதாம். ஒரு ஏக்கருக்கு 40,000 நாற்றுகள் தேவையாம், 3 வருடப் பயிர் வருடத்தில் மூன்று அறுவடை. ஏக்கருக்கு 3 - 3.5 டன் கிடைக்குமாம்.

பின் திரு.சேசாசாய் ஹைதராபாத் காரர் ‘பெஸ்டு என்ஜினீரிங் டெக்னாலொஜிஸ்’ மருத்துவ பயிர்களிலிருந்து எண்ணெய் எடுக்கும் யந்திரங்கள் பற்றி விளக்கம் அளித்து அதை விற்றபதாகச் சொன்னார். அவரது போன்-040-65908498 அலை பேசி. 09391057812.

இறுதியில் டாக்டர் திரு. ராஜாமணி காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாகச் சொல்லி வந்த அனைவருக்கும் நன்றி கூறி கூட்டம் இனிதே முடிவுற்றது.

தேசிய மருந்து பயிர்கள் வாரியம்
மர்ந்து பயிர்கள் தொடர்பு மையம்
விருவாக்க கல்வி இயக்கம்.


nmpbfc@tnau.ac.in
போன்- 6470425, 6611365, 6611284 ஆகியன.

--------------------------------------(விவசாயம் தொடரும்.)

Monday, February 16, 2009

இரங்கல் செய்தி.




அன்பார்ந்த விவசாய நண்பர்களே மற்றும் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க அன்பர்களே !



இன்று 16-02-2009 காலை 09.10 மணி அளவில் நம் சங்க அங்கத்தினர் மற்றும் மூலிகை விரிவுறையாளர் சித்தா டாக்டர் திரு.லச்சுமணன் அவர்கள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோமாக. அவருக்கு ஒரு மகனும், நான்கு பெண்களும் உள்ளார்கள். அவரது பூத உடல் கொங்கு நாடு அறிவியல் கல்லூரிஅடுத்த லெவல் கிராசிங்குக்கு முன்னால் இடது புரம் அவரது மகன் முருகன் வீட்டில் உள்ளது. நாளை 17-02-2009 காலை துடியலூர் மின் மயானத்தில் காலை 0900 முதல் 1000 மணிக்குள் எரிக்கவுள்ளார்கள் எனபதைத் தெறிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
கோவை-641037.
:9487283644
Kuppu6@gmail.com
16-02-2009.

Sunday, February 8, 2009

ஆறாம் தேதி சங்கமா, சங்கமமா?

எல்லாருக்கு வணக்கமுங்கோ. அது என்னுங்கோ ஆறாம் தேதி சங்கம்? அது என்ன ஆத்துலே ஓடர சங்கமுங்களா? சங்கனூர் பள்ளத்திலீங்களா? நொய்யலாற்றுலீங்களா? சாக்கடைதாங்க ஓடுது. எங்கெ சங்கமமாகிறது. அதோபாருங்கோ கருப்பு அம்பாசிடர் கார்லே வர்றாருங்கோ அவருதான் இந்த சங்கத்துத் தலைவருங்கோ. அவரு பேரு தேவராஜனுங்கோ. அவருசங்கோ காளப்பட்டீலே இருக்குதுங்கோ. இங்கே ஹோம்சென்ஸ் காலேஜுக்கு அடுத்த கேட்லே பாரஸ்டு ஆப்பீசுலே ஒட்டீட்டாருங்கோ. அங்கே முதல் மாடி ஆலுலே இன்னைக்குப் பத்துமணிக்கு மீட்டிங் ஆரம்பிக்கப் போராங்களாம். அங்கே போனா கூட்ட கொஞ்சமாத்தா இருந்துதுங்கோ. தலைவரு எல்லாத்தையும் பார்த்துவணக்கம் சொன்னாருங்கோ. அப்பொறோ எல்லாத்தையும் பார்த்து எல்லாரு வெளியே உள்ள ரண்டு ரிஜிஸ்டரிலும் விலாசமெழுதி, போன் நெம்பரு எழுதி கையெழுத்துப் போடுங்கோண்ணு சொன்னாறு. அங்கிருந்த பாரஸ்டர் புஸ்பாகரன் ‘யாருக்காவது அடுத்த வருச நாத்து என்ன எவ்வளவு வேணூண்ணு அடுத்த ரிஜிஸ்டருலே எழுதுகோனாறு.’ அவரு தேசிய அளவுலே மரநட்டதுக்காக துணைஜனாதிபதியிடம் பாராட்டப்பத்திரம் வாங்கியவரு. விவசாயிகொ வந்திட்டே இருந்தாங்கோ. அப்புறோ ஒரு பதினொரு மணிசுமாருக்கு சாமி பாட்டுப் பாடினாங்கோ. உள்ளிருந்த பேனரிலே ‘கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். மாதாந்திர கூட்டம் நாள் 6-2-2009’ அப்படீன்னு எழுதியிருந்தது.

அதக்கப்பறோ தலைவரு பேசினாரு. எல்லாத்தையும் வரவேற்றாருங்கோ. முக்கியம திரு.உலகநாதன் ஐ.எப்.எஸ். ஐயா, திரு பாலகிருஷ்ணன், நபார்டு வங்கி ஆலோசகரு, திரு.ராஜ்டேனியல், பேராதெனியா பல்கலைக்கழகம், கண்டி ஸ்ரீலங்கா, திரு.கலியபெருமாள் ரேஜ்சரு அப்பரோ ஆழியாறு சித்தா டாக்டர் திரு.திருமலைசாமியையும் ஆலிலேநெறஞ்சிருஞ்ச விவசாயிகள் எல்லாத்தையும் வரவேற்றாரு. அப்புறோ போன மாசம் 27ந்தேதி சில பண்ணைகளுக்கு சுற்றுலா 30 பேரு போயிட்டு வந்ததே சொன்னாறு. அப்போ தாடிக்கார விவசாயி பெரியவரு ‘ஏ நீங்க மட்டும் எங்களுக்கெல்ல சொல்லாமே போநீங்கோ’ அப்படீன்ணு கேட்டாரு. அப்போ தலைவரு வனவரிவாக்கம் 22 பைருக்குத்தா வேன் கொடுத்தாங்கோ அதனாலே அளவாப் போனோ என்றாரு. தலைவரு அவரு வலது கை மற்ற வேண்டியவங்கோ சிலரும் டாட்டாசுமா வண்டிலே போனது பெரியவருக்குத் தெறியாது. பண்ணையிலே பார்த்ததெல்லா வெளக்கினாறு. இதுமாதிரி இன்னும் போகோணுண்ணு சொன்னாறு.

அப்புறோ திரு. ராஜ்டேனியல் B.Sc (விலங்கியல்) அவுரு ‘ஒருகிணைந்த பண்ணைக்கு ஏற்ற ஆடு மற்றும் இதர சிறு பிராணிகள் வளர்ப்பு முறைகள்’ பற்றி நல்ல விளக்கம கிராமத்தாருக்குப் புறியும் படி பேசினாரு. நாட்டுக் கோழி அளவா வளக்கிறதுக்கு 15 அடிக்கு 30 அடி பந்தலு போட்டு சுற்றி 4 அடி சுவருவெச்சு பத்துக் கோழிக்கு ஒரு சேவல் வீத வளக்கணு, பந்தல்லே அவரக்காசெடி உடலா, சுற்றியும் அகத்தி மரம் வெக்கலாம், வெள்ளாடு நாலு பொட்டைக்கு ஒரு கெடா வீத கொடாப்பு வச்சு வளக்கலாண்ணு விளக்கமா மதியம் 1-30 மணிவரை சொன்னாரு.

அப்புரோ திரு.பாலகிருஷ்ணன், B.Sc.,BGL, CAIIB., அவரு நபார்டு வங்கி எப்படிக் கடன் கொடுக்கிறது, யார்யாருமூலமாணு மதிய உணவு எல்லோரும் சாப்பிட்ட பிற்பாடு விளக்கினாறு. ஆனா கொஞ்சம் பேரு சாப்பிட்ட ஒடனே போயிட்டாங்கோ. சாப்பாடு இலவசந்தாங்கோ. அவுரு போனு 9344536407. சந்தேகங்கள் சொல்வாரு. சுயஉதவிக்குழுக்கள் ஆண், பெண் இரண்டு குழுவுமே இருக்கலா 10 லிருந்து 20 பேர் வரை. அதன் நடப்பு முறை, ஆவணங்கள், கடன் பெருதல், திருப்பிக் கட்டுதல், குழு முன்னேற்றம், கடன் வாங்கியவர்கள் தொழில் செய்தல், லாபம், ஒற்றுமை, விழிப்புணர்வுகள் எல்லாம் விளக்கமாகச் சொன்னார்.

அப்புரோ ஆழியாறு மூலிகை நாற்றுப் பண்ணையிலிருந்து வந்த சித்தா டாக்டர் திரு.திருமலைசாமி அவரு ‘பொடுதலை’ அப்பிடீங்கிற மூலிகை செடியின் உபயோகம் பத்தி எல்லா விபரமும் விளக்கம சொன்னாருங்கோ. அதற்கு அடுத்து கலியபெருமாள் ரேஞ்சர் ‘ஆச்சான்’
அப்படீங்கிற ஒரு கெட்டியான மரத்தைப்பற்றி எப்படி வளக்கறது அது உபயோகத்தைப் பத்தியும் சொன்னாறுங்கோ.

பிற்பாடு தீத்திபாளையம் ஸ்ரீபழனியாண்டவர் மில்ஸ் நடத்துர திரு.சரவணன் என்பவரு வேப்பங்கொட்டை கிலோ ரூ.8-00 க்கு வாங்கி சுத்தஞ்செஞ்சு வேப்பெண்ணெய்யும், புண்ணாக்கு விலைக்குக் கொடுக்கராறு. அவரு போனு 984304949, 9442149491. அதக்கப்புரோ திரு. செல்வக்குமார் புதிசா ‘அப்சா80’ அபடீங்கிற பூச்சி மருந்தோட கூட துளி சொட்டுட்டா எல்லாச்செடியிலு நல்ல ஒட்டுமுனு முருங்கத்தழையை வெச்சு காட்டுனாருங்கோ.

அதுக்கடுத்து காரமடையிலிருந்து வந்த திருமதி.வசந்தி ஞானசேகர் M.Sc. (Hort) தோட்டகலை உதவி இயக்குனர் அவுங்கோ தேசிய மூங்கில் இயக்கம் மூலமாக மூங்கில் வளக்கரதுக்கு ஒரு எக்டருக்கு ரூ.8000-00 மானியமாக குடுப்பதாகவும், அதுக்கே சொட்டு நீர் போட 20,000-00 மானியம கொடுப்பதாகவும், ஒரு ஏக்கருலே மாதிரி மூங்கில் பண்ணை அமைக்க ரூ.5000-00 கொடுக்கப்படும் என்று கோவை மாவட்ட விவசாயகளைப் பேர் கொடுக்கச் சொன்னாருங்க, அவரு போனு 9487560154 ங்கோ.

கடசியா புஸ்பாகரன் பாரஸ்டரு ஒரு ஓசனை சொன்னாருங்கோ அதாவது இந்த சங்கத்துக்கூணு ஒரு நாற்றுப்பண்ணை வேணுமினு. உடனே தலைவரு அதுக்கெல்லா சங்கத்திலே பணமில்லை என்றாரு. அப்போ பெரியநாக்கன்பாளையத்திற்கு பக்கத்திலெ உள்ள ஒருத்துரு ஒரு ஏக்கர் நிலம் 3 வருசத்துக்கு சும்மா கொடுப்பதாகச் சொன்னாரு. தலைவரு நாத்து வளத்த பணவேணுமே என்றாரு. உடனே சுற்றுலாவிலே பார்த்த திரு.சுப்பையா விவசாயி ரூ.5000-00 கொடுப்பதாச் சொன்னாரு, பின் ஒரு அம்மா இரண்டாயிரம் கொடுப்பதாச் சொன்னாங்கோ. சரி அடுத்த மீட்டங்கிலே பாத்துக்கலாண்ணு தலைவரு சொல்லிட்டாரு. அப்படி ஒரு மத்திய நாத்துப் பண்ணை அமச்சா எல்லா வசயிகளுக்கு சலீசு விலைலே நாத்துக் கொடுக்கலாமுன்னு தலைவரு சொன்னாரு, அது போக மீதி காசிருந்தா சங்கத்துக்கு சேத்துக்கலாண்ணு சொன்னாரு. புஸ்பாகரன் பாரஸ்டரு அதுக்கு ஆலோசனை கொடுப்பதாகச் சொன்னாறு. அப்பத்தா தோணுச்சு 15 கட்டளையிலே 7 வது கட்டளை நெறவேறப்போகுதூண்ணு நெனச்சேன்.

திடீருனு டாக்டர் ராஜ்மோகன் வந்தாரு அவரு அரப்பியா நாடெல்லா அடிக்கடி போவாறு. வெளிநாட்டுலே பாலைவனத்திலீங் கூட கப்பல்லே மண்ணு கொண்டு வந்து போட்டு பசுமாயான மர வச்சு வளத்தராங்கோன்னு தன் அனுபவத்த கொஞ்ச சொன்னாறு. அப்புரோ தேசிய கீதம் மாலை 6 மணிக்கு எல்லாரும் பாடி கூட்டத்தை முடிச்சாங்கோ. அடுத்த கூட்டொ 6 ந்தேதி மறந்திடாதீங்கோ மத்தியானச்சாப்பாடு உண்டுங்கோ. எல்லாத்துக்கு வணக்கமுங்கோ.

---------------------------(விவசாயம் தொடருமுங்கோ)

Monday, February 2, 2009

பண்ணைச் சுற்றுலா.


கடந்த 27-1-2009 அன்று கோவை வனவிரிவாக்க மையமும், கோவைமாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கமும் இணைந்து ஒரு பண்ணைச் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். விவசாயிகள் சுமார் 25 பேர் தனி வாகனத்தில் கோவை-காந்திபுரத்திலிருந்து காலை 0900 மணிக்குப் புரப் பட்டோம். நானும் தான். சின்னியம்பாளையத்திலிருந்து இருகூர் சாலை வழியாக முதலில் அத்தப்பகவுண்டன் புதூரிலுள்ள கனக்கன் தோட்டம் சென்றோம். அந்தப் பண்ணையின் உரிமையாளர் திரு ஆர்.சுப்பையன் மற்றும் அவரது மகன் குழந்தைவேலு B.Sc, எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவருக்கு அங்கு 20 ஏக்கர் நிலம் தண்ணீர் வசதியுடன் உள்ளது. அவரது பெரிய களத்தில் பச்சைப் பசேல் என்று அரப்பு இலை காயவைத்தால் போன்று இலைகள் காய்ந்து கொண்டிருந்தது. பண்ணையார் அதைப்பற்றிக் கூறினார். அவை குதிரை மசால் செடியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் காயப் போட்டிருப்பதாகச் சொன்னார். பின் அந்த செடி வெட்டும் மோட்டாரால் இயங்கும் சக்கரம் போன்ற இயந்திரத்தைக் காண்பித்து விளக்கினார். வெட்டிய இலைகளை எப்படி காய வைத்து பேக்கிங் செய்வது என்ற இயந்திரத்தையும் காண்பித்தார். பின் அந்த மூட்டைகளை வெவ்வேறு மாநிலங்களுக்கு -விலை இவரே நிர்ணையம் செய்து - அனுப்புவது பற்றிக் கூறினார். பின் அஸ்சாமிலிருந்து வந்த பெண்களும், ஆண்களும் தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு மணிக்கணக்குத்தான் கூலி கொடுக்கிரார். ஒரு மணிக்குப் பத்து ரூபாய். தேங்காய் மட்டையுடன் ஒரு கட்டிங் மெசின் மூலம் எழிதில் இயக்கி வெட்டி இரண்டாகப் போடுகிறார்கள். பின் சிறிது காய்த பின் எழிதாக கொப்பறைத் தேங்காய் எடுத்து அதற்கென அமைக்கப்பட்ட வெண் கூடாரங்களில் காயவைத்து எண்ணை எடுக்க அனுப்புகிறார்கள். பின் தென்னை மரங்களில் இழநீர் அதிகம் பிடிக்க தென்னை மரத்தைச் சுற்றி 5 அடி இடை வெளி விட்டு 4 குழிகள் தோண்டி அதில் மண்புழு உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சியுள்ளார். நன்றாகக் காய் பிடித்துள்ளது. பின் தென்னை மரம் ஏறுவதற்கு அவரே ஏணிகள் துண்டு துண்டுகளாக இணைத்து 50 அடி உயர்ம் வரை ஏறி தேங்காய் எழிதில் போட வடிவமைத்துள்ளார். பின் எல்லோரையும் அமரவைத்துத் தேநீர் கொடுத்து அவரது தொழில் நுட்பங்களை விவரித்துச் சொன்னார். கீரை வகைகளை விளைவித்து நல்ல லாபம் எடுக்கலாம் என்றார். இவர் விளைவிக்கும் எந்தப் பொருளுக்கும் இடைத் தரகர் கிடையாது. இவரே நேரடி விற்பனை செய்கிறார். பின் இனிதே 12.15 மணிக்கு விடைபற்றோம். அவரது தொல்பேசி எண்-0422-2627072 அலைபேசி எண்-0936-3228039


அடுத்து சின்னக் குயிலி செல்லும் சாலையில் திரு. தாமோதரன் பாலேக்கர் முறைப்படி விவசாயம் செய்யும் சிறு பண்ணையைப் பார்வையிட்டோம். அவருக்கு அங்கு நாலு ஏக்கர் நிலம் உள்ளது. கிணறு தண்ணீர் வசதியுடன் மோட்டருடன் உள்ளது. ஒரு நாட்டு மாடும் கன்றும் வைத்துள்ளார். நாங்கள் சென்ற போது புதிதாக ஒரு வயலில் பாலேக்கர் முறைப்படி பயிறிட தயார் செய்து கொண்டிருந்தார். வாய்க்காலில் முழைதிதிருந்த 4 வகை செடிகளைக் காண்பித்தார். பின் தக்காளி, அவரை, ராகி, மக்காச்சோழம், துலுக்கமல்லிப்பூச் செடி பயிர்கள் வளர்ந்திருப்பதையும் அதன் கால்வாய்களில் மூடாக்காக கரும்பு சோகைகளை போட்டு அது எப்படி ஈரம் தாக்குப் பிடிக்கிறது என்பதைப் பற்றியும் அதில் எப்படி ஒவ்வொன்றாக மகசூல் கிடைக்கின்றது என்பது பற்றியும் கூறினார். பல தொழில்கள் செய்து கடன் பட்டு இறுதியாக பாலேக்கர் கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கு வாங்கிய புத்தகம் படி விவசாயம் செய்து கடன் அடைத்ததாகச் சொன்னார். பின் தண்ணீர் பாச்சும் போது அமுதக் கரைசலும் கலப்பது பற்றி விவறித்தார். அவரது நாட்டுமாட்டையும் கன்றையும் பார்த்தோம். பின் அங்கிருந்து விடை பெற்று பல்லடம் அருகேயுள்ள உத்தாண்டிபாளையம் 13.30 மணிக்கு அடைந்தோம்.

உத்தாண்டிபாளையத்தில் திரு.துரைசாமியின் சந்தன பண்ணைத்தோட்டம் (நாற்பது ஏக்கர்) அடைந்த போது பண்ணை வீட்டிலிருந்து அவர் குடும்பத்துடன் எங்களை அன்புடன் வரவேற்றார். சாப்பாட்டு நேரமாக இருப்பதால் முதலில் சாப்பிட்டுப் பின் பண்ணையைச் சுற்றிப் பார்க்கலாம் என்றார். முன் கூட்டியே சொல்லியிருந்த தால் எல்லோருக்கும் சைவ, அசைவ உணவு தயாராக வைத்திருந்தார்கள். ‘பப்பே’ முறையில் எல்லோரும் உணவறிந்தி பின் அமர்ந்து கலந்துறையாடி பத்தாயிரம் சந்தண மரங்களுக்கு மேல் உள்ள இரண்டாண்டு ஆன மரங்களைக் காண்பித்தார். இடையில் சப்போட்டா மரங்கள் காயுடன் காணப் பட்டன. எல்லாவற்றிக்கும் சொட்டு நீர் பாசன் முறை கையாண்டுள்ளார். வியாபாரிகள் சப்போட்டாவை கிலோ 3 ரூபாயிக்குப் பறித்துக் கொள்வதாகச் சொன்னார். பின் கொட்டகை முறையில் ஆடு வளர்பதையும் காண்பித்தார். ஜிம் செய்ய உப கிரணங்கள் அமைத்துள்ளதையும் காண்பித்தார். வேலி இரண்டு அடுக்கு முறையில் போட்டுள்ளார். எல்லாம் சுற்றிப் பார்த்துக் கழைத்து பண்ணை வீடு திரம்பி குளிர்பானம் அளித்ததை அறிந்தி துரைசாமியின் குடம்பதுதாறுடன் விடை பெற்று, நல்ல விருந்தோம்பலை அனுபவித்து 16.30 மணிக்கு மேல் அடுத்த பண்ணைக்குப் புரப்பட்டோம்.

சுல்தான் பேட்டைஅருகேயுள்ள அம்பாள் நர்சரி உரமையாளர் தோட்டத்தில் அமைந்திருந்த திறந்த வெளி பெரிய குளம் அமைத்துருந்ததைப் பார்த்தோம். ஒட்டு அத்தி, சப்போட்டா, புளி ஆகிய வயல்களைப் பார்வையிட்டோம். நர்சரியில் பல்வேறு நாற்றுக்களைப் பார்த்தோம் அதிகமாக தென்னம்பிள்ளை வகைகள் இருந்தன. மாலை ஆறு மணிக்குத் தேநீர் அருந்தி விடை பெற்று கோவை 19.00 மணிக்கு கோவை வந்தடைந்து அவரவர் வீடு சென்றோம். இந்த பண்ணைச் சுற்றுலாவில் ஒரு நல்ல அனுபவம் பெற்றோம்.


-----------------------------------------(விவசாயம் தொடரும்)