Monday, October 12, 2015

1863, பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

1,863 பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

அரசு துறைகளில் 'குரூப்-2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களைக்கு, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்  பாலசுப்ரமணியன் கூறியதாவது.

டி.என்.பி.எஸ். சி குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10 க்கு மேற்பட்ட துறைகளில் , 1863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27 ல் தேர்வு நடக்கும்.

தேர்வு எழுத விரும்புவோர், 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே, நவ., 11 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, நவ., 13 க்குள் செலுத்தலாம். தமிழக முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும்.

பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வுக்கான தகுதி விவரங்களை,http://www.tnpscexams.net/  மற்றும்  http://www.tnpscexams.in/  என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- கோவை தினமலர் நாள் 13-10-2015.


Thursday, October 1, 2015

ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி.


ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி


ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி அக்., 7 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.

அவனாசிலிங்கம் ஜன் சிக்சன் சன்ஸ்தானில், ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர, அக., 7 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு அல்லதுஉ அதற்கு மேல் படித்த ஆண்களுக்கு, டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட் பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி.,  அல்லது அதற்குமேல் படித்த ஆண்களுக்கு, சி.என்.சி., லேத் ஆப்ரேட்டர், டூல், டை மேக்கிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறு மாதம் கொண்ட பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்ப்ப்படும், பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்புக்கான ஏற்பாடு செய்து தரப்படும். வெளியூரில் வசிப்போருக்கு தொழிற்சாலையில் தங்கும் இடம் வளங்கப்படும்.

விண்ணப்பமாக வெள்ளைத் தாளில் பெயர், கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிறதகவல்கள் இருப்பின் அவற்றை குறிப்பிட்டு, ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டிய, சுய முகவரியிட்ட இரு உறைகள் இனைத்து, 'இயக்குனர், அவினாசிலிங்கம்
ஐன்சிக்சன் சன்ஸ்தான், அவிநாசி ரோடு, கோவை-43' என்ற முகவரிக்கு, அக்., 7 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களைக்கு, 0422 2448858 என்ற போன் எண்ணிலும், www.avinashilingamjss.com  என்ற வலைதள முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.

கோவை, தினமலர் நாள்- 30-09-2015. நன்றி.

--------------------------------------------------------------------------(தொடரும்)