Saturday, December 20, 2008

விதையில்லா மூங்கில் சாகுபடி











விதையில்லா மூங்கில் சாகுபடி.

மூங்கிலில் இருந்து விதை சரிவர எல்லாக் காலங்களிலும் கிடைக்காததாலும், தரமான தாய்மூங்கிலை ஒத்த கன்றுகளை உற்பத்தி செய்வதற்கும், விதையில்லா மூங்கில் சாகுபடி முறை பயன் படுத்தப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளைக் கையாண்டு விதையில்லாமல் மூங்கிலை உறப்த்தி செய்யலாம்.

1. களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
2. பக்கக்கிளைகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
3. வேருடன் கொண்ட களிகளைப் பயன்படுத்தல்.
4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
5. களிகளை அதற்றி நடும் முறை.
6. திசுமுறை வளர்ப்பு.

1. களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்ந்த களிகளை வெட்டி, பின் பக்க கிளைகளை அகற்றி மணற்பாங்கான பள்ளப் பாத்திகளில் வைத்து மூடி நீர் பாச்சுதல் வேண்டும். இதற்குப் போதிய நிழல் கொடுத்தல் வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஒவ்வொரு கணுவில் இருந்தும் வேர் தோன்றி புதிய தண்டுகள் தோன்றும். இதன் பிறகு, கணுவையும் நாம் வெட்டியெடுத்து, பாலித்தீன் பைகளில் நட்டு 3 அல்லது 4 மாதங்கள் வளர்த்த பிறகு நடவு வயலுக்கு எடுத்துச் செல்ல லாம். இவ்வாறு அல்லாமல் மூங்கில் களிகளை2 அல்லது 3 கணுக்கள் கொண்ட தண்டுகளாக வெட்டி இதில் 100 மில்லி 200ppmIBA என்ற வேர் ஊக்கியை நிரப்பி நாற்றங்காலில் நட்டு நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

2. பக்கக்கிளைகளைப் பயன் படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.

களிகளில் உள்ள பக்கக்கிளைகளை வெட்டி ஒரு கணு கொண்டுள்ள துண்டுகளாக மாற்றி, மேல்பாகம் மெழுகு கொண்டு பூசி, பாலித்தீன் பைகளில் கீழ்பாதியில் மண் மற்றும் 2; 1 என்ற விகிதத்தில் பாதியில் மணல் நிரப்பி மிஸ்ட் சேம்பரில் வைத்துப் பராமரித்து நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வளர்ந்த நாற்றினை வெளியே எடுத்து தற்காலிக நாழலில் வைத்து 2 மாதங்களுக்குப்பிறகு வெட்ட வெளியில் வைத்து வளர்ந்த 6 மாத கன்றுகளை வயலில் நடலாம்.

3. வேருடன் கொண்ட களிகளைப் பயன் படுத்துதல்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்ந்த களிகளை அடிபாகத்திலிருந்து ஒன்று அல்லதுஇரண்டு கணுக்களை விட்டு வெட்டியெடுத்த பிறகு வேருடன் தோண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு தோண்டிய களிகளில்வேர் பாகத்தை 2% பெவிஸ்டின் கரைசலில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின் களிகளில் வெட்டுப் பட்ட மேல்பாகத்தில் போடோ பேஸ்ட் மூலம் மூடி மழைகாலங்களில் இதனை நடவு வயலில் நடலாம்.

4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்கள உற்பத்தி செய்யலாம்.

ஒராண்டு வளர்ந்த களிகள் அல்லது பக்கக்கிளைகளை வளைத்து மண்ணில் புதைத்து நீர் ஊற்ற வேண்டும். 3 அல்லது 4 வாரங்களில் வேர் மற்றும் தண்டுகள் கணுக்களில் தோன்றும். இவ்வாறு தோன்றிய பின் இவற்றை தாய் மரத்திலிருந்து வெட்டியெடுத்து ஒவ்வொரு கணுவினையும் வெட்டி பாலிதீன் பைகளில் நட்டு நாற்றுக்களை உற்பத்தி செய்து நடலாம்.

5. களிகளை அகற்றி நடுதல் முறை.

ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வளர்ந்த தரமான கன்றுகளை எடுத்து இவற்றில் உள்ள 4-6 களிகளைப் பிரித்து வேருடன் நட்டு நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடவு வயலில் நடலாம். இவ்வாறு நடவு செய்வதன் மூலம் தரமான தாய் கன்றுகளை நாற்றங்காலிலேயே பராமரித்து அதிக நாற்றுக்கள் உற்பத்தி செய்யலாம்.

6. திசுமுறை வளர்ப்பு.

மூங்கில் மரக்கன்றுகளைத் தரமான தாய் மூங்கில் மரத்தின் தண்டுகளின் நுனிப்பாகங்களைக் கொண்டு 4 முதல் 8 மாதங்களில் ஆயிரக்கணக்கான நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தயாரிக்கப்படும் நாற்றுக்கள் மிகுந்த வீரியத்துடனும் நல்ல வளர்ச்சியுடனும் வளரும். மேலும் பூச்சி மற்றும் பூஞ்சான நோய்கள்தாக்காத கன்றாக இருக்கும் கன்றுகள் சிறியதாக இருப்பதால் எடுத்துச் செல்லும் செலவு குறையும்.

மேலே கூறப்பட்டுள்ள விதையில்லா மூங்கில் தயார் செய்யும் போது, தாய்மரத்தின் வயது தெருந்து
கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் தாய்மரம் பூத்தால் அதிலிருந்து தயாருக்கப்பட்ட நாற்றுக்களும் பூத்துவிடும்.

எனவே தரமான மூங்கில் நாற்றுக்களைத் தயாரித்து அதன் மூலம் வாளிப்பான மூங்கில் காடுகளை வளர்த்து அதிக லாபம் பெறுவதோடு வளமான வாழ்வினைப் பெறுவோம்.

(குறிப்பு- கோவை மாவட்டத்தில் மூங்கில் நாற்றுக்கள் கிடைக்குமிடம்- ஈடன் நர்ஸரி கார்டன்ஸ், தமிழ்நாடு ஆரசு உரிம எண்: 760/CBE/98
23 /15 கருபாயம்மாள் தோட்டம், வெள்ளிபாளையம் ரோடு, மேட்டுப்பாளையம்-641 301, போன் 04254 226493, ராஜரத்தினம் BSc., 94860 94670.)மற்றும் தஞ்சாவூர், காடையூர் திருச்சி ஆகிய ஊர்களிலும் கிடைக்கும்.

--------------------------------( மூங்கில் தொடரும் )

Sunday, December 14, 2008

தேசிய மூங்கில் இயக்கம்.




தேசிய மூங்கில் இயக்கம்.
( National Bamboo Mission )

தமிழ் நாடு அரசு, தோட்டக்கலைத்துறை, உதவி இயக்குநர் காரமடை அவர்களால் 12-12-2008 அன்று ஒரு நாள் கருத்தரங்கு மூங்கில் சாகுபடி பற்றி மேட்டுப் பாளையத்தில் நடைபெற்றது. அதில் அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘தேசிய மூங்கில் இயக்கம்’ (National Bamboo Mission) பற்றி விளக்கியிருந்தார். அதன் விபரம் பின்வருமாறு.

இந்தியாவில் நிலவி வரும் ஒழுங்கற்ற சந்தை நிலவரத்தையும் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை (Value Added Products) தயாறிக்கும் தொழில் நுட்ப பற்றாக் குறையினையும் நிவர்த்தி செயவதற்காக இந்திய திட்டக் குழுவின் பரிந்துறையின் படி தேசிய மூங்கில் குழு உருவாக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசால் ரூபாய் 568.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நோக்கம் :-
தகுதியான வனமல்லாத பகுதிகளில் அதிக அளவில் மூங்கில் காடுகளை உருவாக்குதல்.

சரியான விற்பனை சந்தைகளை உருவாக்குதல் :-
மூங்கில் உற்பத்தியாளர்களை ஒன்று சேர்த்து மூங்கில் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அளவை அதிகப்படுத்துதல்.

கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் மூங்கில் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாயப்பை அதிகப்படுத்துதல்.

மூங்கில் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.
மூங்கில் 47 பங்கு கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து 35 பங்கு ஆக்ஸிஜனை வெளி விடுகிறது. ஒரு வருடத்தில் ஒரு ஏக்கர் மூங்கில் 12.7 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்கிறது.

மூங்கில் காடுகள் 5-6 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை மகசூலைத் தருகின்றன. இதனால் பொருளாதார ரீதியாக மற்ற மரங்களை விட அதிக வருமானத்தை மிக க்குறைந்த காலத்திலேயே மூங்கில் ஈட்டித் தருகின்றது. சீரிய சாகுபடி முறைகளை மேற்கொண்டு மூங்கில் சாகுபடி செய்தால் 6 வது ஆண்டில் இருந்து வருடந்தோறும் ஏக்கருக்கு ரூ.20,000 மிதல் ரூ.30,000 வரை லாபம் ஈட்டலாம்.

தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் அரசு வழங்கும் உதவிகள் :-

1. வனமல்லாத பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் ஒரு எக்டர் மூங்கில் சாகுபடி செய்ய ஆகும் செலவில் 50 சத மானியத்தை, முதல் வருடம் ரூ.4000-00 ம் இரண்டாம் ஒருடம் ரூ.4000-00 என மொத்தம் ரூ.8000-00 மானியமாக வழங்கப்படுகிறது. இரண்டாம் வருடம் 90 சத செடிகள் உயிருடன் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 4 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

2. மூங்கில் பயிருக்கு சொட்டு நீர் பாசனம் ( Drip Irrigation System ) அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.20,000-00 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 4 எக்டர் வரை சொட்டு நீர் பாசனம் அமைக்க இம்மானியம் வழங்கப்படுகிறது.

3. மூங்கில் சாகுபடி குறித்த பயிற்சிகள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்களைக்கொண்டு வழங்கப்படுகிறது.

4. மூங்கில் சாகுபடி செய்யும் விவசாயிகளைக்கு ஒருகிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் எக்டருக்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.200-00 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

5. செயல் விளக்க மூங்கில் தோட்டம்- அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 0.5 எக்டர் செயல் விளக்க மூங்கில் தோட்டம் அமைக்க ரூ.5000-00 மானியம் வழங்ப்படுகிறது.

இதைப்பற்றி பயிருட ஆர்வம் உள்ளவர்கள் அந்தந்த தோட்டக் கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

--------------------------------( மூங்கில் தொடரும் )

Thursday, December 11, 2008

மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்




மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்.

மூங்கில் விதை இனப்பெருக்க முறையில் நன்கு வீரியமுள்ள முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மூங்கிலின் விதையின் முளைப்புத்திறன் அவை பூக்கின்ற தன்மையைப் பொறுத்தே மாறுபடுகிறது. பொமுவாக 30-35 வருட வயதுடைய மூங்கில்கள் ஒட்டு மொத்தமாக நன்கு பூத்துக் குலுங்கிய பின்பு முழுவதும் இறந்துவிடும். அதனால் விதை மூலம் உற்பத்தி செய்வது குறைந்து விடுகிறது.

விதைகள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்புதான் அறுவடை செய்ய வேண்டும். சேகரித்த விதைகளின் மேற்புரத்தோல் நன்கு பழுப்பு நிறமாகவும் கடினமாகவும் இருந்தால் அவைகள் விதைகளின் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. நன்கு முற்றிய விதைகளைக் கொண்ட பூங்கொத்தை சாய்ந்தோ அல்லது மரத்தை கை மூலம் உலுக்கியோ புதிதாக கீழே விழும் விதைகளைச் சேகரிக்க வேண்டும். சரியாக முறைப்படுத்தப்பட்ட விதை தொழில்நுட்பங்களை கையாளுவதால் நல்ல தரமான விதைகளைப் பெறலாம்.

விதைசுத்திகரிப்பு

கதிரிலிருந்து விதைமணிகைப் பிரித்தெடுக்க அவற்றைத் தரையில் அடித்தோ அல்லது கைகளில் தேய்த்தோ சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூற்றி, தேவையற்ற்ற பொருட்களை தவிர்த்து பின்பு சேகரித்த விதைகளை மட்டும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவி பிறகு நன்கு முக்கிய விதைகளையும் பொக்கு விதைகளையும் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். நன்கு முதிர்ச்சி அடையாத விதைகளை தண்ணீரில் மேல் மிதக்கும். விதைகளைப் பெரிய விரிப்பின் மேலோ அல்லது வெள்ளை நிறப் பாலித்தின் விருப்பு மேல் பரப்பி நன்கு சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் காயவைக்க வேண்டும். பின்பு விதையின் ஈரப்பதம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அதனுடைய ஈரப்பதத்தைக் குறைத்து சேமிக்க வேண்டும். விதைகளை காயவைக்கும் போது 4-5 முறை நன்கு கிளறி விட வேண்டும். அவ்வாறு செய்வதால் சீரான முறையில் விதைகளின் முளைப்புத் திறனை பாதிக்காமல் சேகரிக்கலாம்.

விதை நேர்த்தி.

மூங்கில் விதைகளை 100 பிபிஎம் ஜிப்ரலிக் அமிலத்தில் சுமார் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு நன்கு உலர்த்தி விதைத்தால் விதையின் வீரியம் மற்றும் முளைப்புத்திறன் சுமார் 30 சதம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூங்கில் விதையுடன் அஸோஸ்பைரில்லம் நுண்ணூட்டக்கலவை ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் என்ற அளவில் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு விதை மூலம் பூசும் கலவையைக் கொண்டு விதை முலாம் செய்து அவற்றை சுமார் 16 மணி நேரம் இருட்டறையில் வைத்திருந்து விதைத்தால் விதையின் முளைப்புத்திறன் விதைமுலாம் பீசப்படாத விதையைக் காட்டிலும் சுமார் 21 சதம் அதிகரிதுக் காணப்படுவதோடு நாற்றங்காலில் நல்ல வளமான நாற்றுக்களைப் பெறலாம்.

விதை சேமிப்பு.

மூங்கில் விதைகளை சாதாரண அறை வெப்ப நிலையில் கால்சியம் குளோரைடு கரைசலில் சேமித்து வைத்தால் அதனுடைய மூளைப்பு மற்றும் வீரியம் பாதுகா க்கப்படும். மேலும் டை-சோடியம் ஹைடரஜன் பாஸ்பேட் (10-4 அ) அடர்த்தியுள்ள கரைசலில் ஊறவைத்து உலரவைப்பதைக் காட்டிலும் சிறந்த முறையாகும்.

பொதுவாக விதையின் முளைப்புத்திறன் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே, விதைகளின் முளைப்புத் திறனை 60 நாட்களுக்கு மேல் நீடிக்க மணல் நிறப்பப்பட்ட கோணிப் பைகளில் சேர்த்து வைக்க வேண்டும்.

மூங்கில் விதையை ஆஸ்டர்னேரியா, ஆஸ்பர்சில்லஸ் செர்க்கோஸ்போரா, பெனிசிலியம் மற்றும் சூபாமாப்சிஸ் போன்ற பூன்சான்கள் விதையைத் தாக்கும் வாய்ப்புள்ளது.. எனவே, விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தற்போது ட்ரைகோடர்மாவிர்டி (4 கிராம், கிலோ) மற்றும் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் (10) கிராம், கிலோ) என்ற எதிர் உயிர் பூஞ்சானம் மற்றும் எதிர் உயிர் பாக்டீரியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செயவதனால் விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப் படுத்தி நல்ல தரமான நாற்றுக்களைப் பெறலாம். பொதுவாக சேகரித்த மரவிதைகளை சில நாட்கறுக்குள் பயன் படுத்தாவிட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, அதிகளவு தரமான மரவிதைகள் கிடைக்க விதைகளை மரத்திலிருந்து குறிப்பிட்ட காலத்தில் சேகரித்துப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் தகுந்த முறையில் சேகரித்து வைத்தல் மிகவும் அவசியமாகும்.


------------------------------- (மூங்கில் தொடரும்)

Wednesday, December 3, 2008

தாவரக் கள்.

தாவரக் கள்.

தமிழ்நாட்டில் பனைமரங்களும், தென்னை மரங்களும் அதிக அளவில் உள்ளன. இந்த இரு மரங்களிலிருந்து பாளையிலிருந்து அறுத்தவுடன் ஒரு திரவம் வரும் அதை ஒரு சிறு சொப்புப் பானை கொண்டு தினமும் காலை மாலை சேகறிப்பது தான் பதநீர். அந்த பதநீர் சேகறிக்கும் பானையில் உட்புரம் சுண்ணாம்பு பூசி எடுப்பது பதநீர், சுண்ணாம்பு பூசாவிட்டால் கிடைப்பது கள். கள் நாட்படவைத்திருந்தால் போதையுண்டாகும். பதநீரைக் காச்சி பதத்துடன் எடுத்து குழிகளிலோ, அச்சுக்களிலோ வார்த்து காய்ந்த பின் எடுத்தால் அது வெல்லம். இனி கள் பற்றி மாநில விவசாய அணி செயலாளர் தாத்தூர் திரு.சுப்பிரமணியம் மற்றும் மாநில துணைத்தலைவர் திரு.பாலசுப்பிரமணியம் இருவரும் கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்கக் கோருவதற்கான காரணங்களை கீழே காண்போம்.

1.கள் தமிழ்நாட்டின் சுதேசி பானம்.

2.சங்க காலத்தில் உணவின் ஒரு பகுதியாக கள் இருந்து வந்துள்ளது. இதை யாரும் தவராக எடுத்துக் கொள்ள வில்லை. சங்க இலக்கியங்களே இதற்குச்சான்று.

3. கள்ளும் கரும்புச்சாறும் ஏறத்தாழ ஒன்றுதான். காலை மாலை என இரு வேளை இறக்கும் கள் போதை தராது. புளித்துப் போனால் தான் போதை இருக்கும். புளித்த கரும்புச் சாற்றிலும் இதே போதை இருக்கும். புளிக்காத கள் ஒரு சத்தான உணவு என்பது மகாத்மா காந்தி போன்ற மகான்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று.

4. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதி நூல்களில் மட்டுமே கள்ளுண்ணாமை வலியுருத்தப் பட்டுள்ளது.

5. சுதந்திர இந்தியாவில் மது விலக்கை அமல்படுத்த முடியாத காரணத்தால், குஜராத் மாநிலத்தைத் தவிர இந்தியா எங்கிலும் மது விலக்குக் கைவிடப்பட்டது.

6. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மது விலக்கு இல்லை. கள், சாராயம் மற்றும் அயல் நாட்டு மது வகைகளும் அங்கே விற்கப்பட்டு வருகின்றன.

7. தமிழ்நாட்டில் கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடிய அயல் நாட்டு இந்தியத் தயாறிப்பு(IMFL) மது வகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுதேசி தயாறிப்பான கள்ளுக்குத் தடை விதித்துள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது அரசு கொண்டுள்ள விரோதப் போக்காகும்.

8. உலக அளவில் சுதேசி மதுவிற்குத்தடையும் விதேசி மதுவிற்கு அனுமதியும் கொடுத்திருப்பது எங்கும் இருக்க முடியாது. தமிழ் நாட்டைத் தவிர.

9. கள் உணவு ஊட்டத்திற்கான (Nutritional) சத்துக்களைக் கொண்டுள்ள ஒரு இயற்கையான பானம். சில நேரங்களில் மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் நலத்திற்குத் தீங்கு தராது. பக்க விளைவு இராது. இதில் போதைக்குக் காரணமான ஆல்க்ஹாலின் அளவி குறைவு. அதே நேரத்தில் (IMFL) மதுவில் போதை ஊட்டும் ஆல்கஹாலைத் தவிர எதுவும் இல்லை.

10. கள்ளை விட (IMFL) கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடியது என்பது விஞ்ஞானிகளாலும் மருத்துவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அனைத்து மக்களுக்கும் இது தெரியும்.

11. தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு உண்மையல் மக்கள் நலனில் அக்கறை இருந்திருக்குமேயானால் (IMFL) மதுவிற்குத் தடை விதித்திருக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

12. சட்டம் என்பது கெடுதி விளைவிக்கக்கூடியது. குறைவான கெடுதி விளைவிக்கக் கூடியதே சட்டமாக இயற்றப்படவேண்டும்.
(LAW IS AN EVIL, LESSER EVIL WILL BE ENACTED AS LAW)

சட்டத்திற்கான இந்த வரையறைப்படி பார்த்தால் கள்ளுக்குத் தடை விதித்திருக்க க்கூடாது.(IMFL) க்கு மட்டும் அனுமதி தந்திருக்கக்கூடாது.

13. தென்னை, பனை மரங்களை வைத்திருப்பவர்களும், மரம் ஏறுபவர்களிம் பல லட்சம் பேர்கள், இவர்களால் ஒன்றுபட்டு ஆட்சியாளர்களைக் கவனிக்க முடியாது அதே நேரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே
‘டாஸ்மார்க்’ நிறுவனத்திற்கு(IMFL) மது தயாரித்துக் கொடுக்கிறார்கள். அவர்களால் ஆட்சியாளர்களைக் கவனிக்கும் விதத்தில் கவனிக்க முடிகிறது. இதன் மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை கை மாறுவதாக மக்களிடையே பேசப்படுகிறது.

14. கவனிக்கும் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், கவனிக்காத மறுகண்ணுக்குச் சுண்ணாம்பு என்பதில் நியாமும் இல்லை. நடுவு நிலைமையும் இல்லை.

15. இதில் ஆட்சியாளர்கள் நேற்றும் ஆதாயம் பெற்றார்கள். இன்றும் பெற்று வருகிறார்கள். நாளையும் பெறுவார்கள். தலைமை மட்டும் மாறி இருக்கும். ஆட்சி நிரந்தரமானது அன்று. ஆனால் சுரண்டல் நிரந்தனமானது. விழிப்புணர்வு இல்லாதவரை இந்த நிலை மாறாது. மக்களின் மனச்சாடசிக்கும் இது தெரியும்.

16. தமிழ்நாட்டில் குடிப்போர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி இருக்கலாம். இவர்களில் கூடுதலான விலை கொண்ட வெளிநாட்டு மதுவை வாங்கிக் குடிக்கும் பொருளாதாரத் தகுதி 25 லட்சம் பேர்களுக்கு மட்டுமே இருக்கும். மீதி 75 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கும் கீழாக வாழும் எளிய மக்களே ஆவார்கள். இவர்கள் குடிப்பதற்கு செலவிட்டது போக குட்ம்பச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாத தால் பல குடும்பங்கள் சொல்லண்ணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. இதன் காரணமாக இன்றைய நடைமுறையில் பரவலாகக் குடும்ப
ப் பெண்களும் கூடக் கள் வரவுக்கு எதிர்புத் தெரிவிக்க மாட்டார்.

17. இன்று தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளிலெல்லாம் அயல் நாட்டு மதுக்கடைகளைத் திறந்து ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அரசே நேரடியான சுரண்டலில் புகுந்து விளையாடுகிறது. மக்கள் ஆடுகளாக இருந்துவிடக்கூடாது. ஆட்சியாளர்கள் ஓநாய்களாக மாறிவிடக்கூடாது.

18. கள்ளுக்கு அனுமதி இருந்தால் கிராமப் பணம் வெளியே போகாது. சிலருடைய கைகளில் செல்வம் குவிவது குறையும். கிராமப் பொருளாதாரம் மேம்படும்.

19. தென்னை பனை விவசாயிகளின் வருமானம் ஒரளவு கூடும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புப் பெருகும். களையாகக்கருதி வேகமாக வெட்டப்பட்டு வரும் ‘காமதேனு’ ‘கற்பகத்தரு’ என்று சொல்லப்பட்ட பனை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் ’ஈரியோ பைட்’ பூச்சி தாக்குதலில் இருந்து தப்பும், மொத்தத்தில் தென்னை, பனை மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கையாகும் இது.

இது போன்று மேலும் பல கருத்துக்கள் வெளியிட்டார்கள். நன்றி விவசாய அணிக்கு.

Friday, November 28, 2008

மூங்கில்.




மூங்கில்.

மூங்கில் ஒரு மரவகைப் புல். இது தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படும். உலகளவில் 1250 வகைகள்உள்ளன. இந்தியாவில் 23 ரகத்தில் 125 பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் மொத்த மூங்கில் காடு பரப்பளவு10.03 மில்லியன் ஹெக்டர் ஆகும். இது12.8 சதவிகிதம் தான். அதிகமாக மூங்கில்கள் வளரும் இடங்கள் அஸ்சாம், மணிப்பூர், மேகாலையா, மீசோராம், நாகாலேண்டு, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாட்டில் மேற்கு மலைத்தொடர், சேர்வராயன் மலை, கொள்ளி மலை, கொடைக்கானல், சிறுவாணி, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, கிழக்கு மலைத்தொடர்ச்சி போன்ற இடங்கள். உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது வியாபார நோக்குடன் தரிசு நிலங்களிலும் சம வெளிகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

மூங்கில்களில் முள்ளில்லா மூங்கில், (பேம்புசா டுல்டா, பேம்புசா நியுடன்ஸ், பேம்புசா பல்கோவா) மூள் உள்ள மூங்கில் என்று இரு வகையாகப் பிறிக்கலாம். தற்போது முள் இல்லாத மூங்கில் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறது. முக்கியமாக இருப்பது முள் மூங்கில், கல்மூங்கில், பச்சைமூங்கில், தட்டைமூங்கில், வல்காரிஸ் மூங்கில், சாப்பாட்டு மூங்கில், பெருமூங்கில், புத்தர் தொந்தி மூங்கில் போன்றவை. நடக்கும் மூங்கில் என்ற வகையுண்டு. நன்றாகத் தண்ணீர் தேவை. இதன் தூர் பக்கவாட்டில் பரவிக்கொண்டே போகும். வேகமான வளர்ச்சியுடையது. மூங்கில்களை நாற்றாக இருக்கும் பொழுது யாராலும் அதன் இனம் கண்டு சொல்ல முடியாது. பெரிதாகும் போது அதன் இலைகள், தோகை-மட்டை-கணு இடைவெளி, கணுவில் தோன்றும் வட்டங்கள் இவை கொண்டு அதன் இனத்தைக் கண்டு பிடிக்கலாம்.

கல் மூங்கில் தட்டை மூங்கில் இவை இரண்டும் 20 வருடத்திலிருந்து 60 வருடங்களில் பூக்கள் பூத்து, முதிர்ந்து, விதையாகி (மூங்கில் நெல்) அந்த மூங்கில் புதர் அத்துடன் காய்ந்து அழிந்து விடும். இதுவரை மூங்கில் இந்த ஆண்டில் தான் பூக்கும் என்று உறுதியாகக்கண்டு பிடிக்கவில்லை. பூக்காத மூங்கில்களும் உள்ளன. மூங்கில் 150 அடி உயரம் வரையில் வளரும். ஒரே நாளில் 3 மீட்டர் வளர்க்கூடிய மூங்கில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது.

மூங்கில் வடிகால் வசதி உள்ள மண் வகைகளில் வளர்க்கலாம். மூங்கிலுக்கு ஏற்ற மண் இரகங்கள் வண்டல் மண், படுகை நிலங்கள் மற்றும் இதர நிலங்களாகிய சரளை மண், கண்மாய் கரை மண், ஓடை மண், வண்டல் மண் கலந்த களிமண் பூமி மற்றும் மணற்பாங்கான நிலங்களுக்கு ஏற்றது. மழையளவு-1270 மி.மீ.-6350 மி.மீ., வெப்பளவு-உயர்ந்தளவு 42 டிகிரி முதல் 45 டிகிரி சென்டிகிரேடு வரை.

சூரிய ஒளி அதிகமாகவும் மற்றும் மழை நன்கு பெய்யும் இடங்களில் மூங்கிலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மழை குறைவாக உள்ள பகுதிகளில் நீர் பாச்சுவதின் மூலம் கூட மூங்கிலை வளர்க்கலாம். மூங்கில் மேட்டுப் பகுதிகளிலும் மற்றும் மலைச்சரிவுகளிலும் நன்கு வளரக்கூடியது. பாறை அடியில் ஆகாது, களிமண் ஆகாது, சட்டு இருக்க க்கூடாது. உவர்மண் ஆகாது.களர் மண் ஆகாது. உப்புத்தண்ணீரில் வளரும், சப்பைத்தண்ணீரில் வளராது, 5 அடி ஆழ செம்மண்ணாக இருந்தால் நன்கு வளரும்.

மூங்கில் நாற்றுத்தயார் செய்ய இரு வகையுண்டு. ஒன்று விதை மூலம் நாற்றுத்தயார் செய்து நடுதல். மற்றது விதையில்லாமல் மூங்கிலை உற்பத்தி செய்யலாம்.

1.களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.-----------------------
2. பக்கக்கிளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.--------------------
3. வேறுடன் கொண்ட களிகளைப் பயன்படுத்தல்.
4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.----------------------
5. களிகளை அகற்றி நடும் முறை. -----------------------
6. திசுமுறை வளர்ப்பு. (அடுத்த கட்டுரையில் விளகம் அளிக்கப்படும்)

மூங்கில் உபயோகம் தற்போது அதிகமாக உள்ளது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் சைனா முதலிடம் வகிக்கிறது, அதற்கு அடுத்து இந்தியாதான். மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் முடையப் படுகிறது. கைவினைப் பருள்கள் செய்கிறார்கள். மூங்கிலிலிருந்து தரமான வெண்மையான கிழியாத பேப்பர் செய்யப்படுகிறது. நாள்பட ஆனாலும் பேப்பர் பழுப்பு நிறமாக மாறாது. புல்லாங்குழல், மோர்சிங், போன்ற இசைக்கருவிகள், பலவிதமான பாய்கள், ஆண்கள் அணியும் சட்டைகள், ஊதுபத்திக் குச்சிகள், மூங்கில் பிளைவுட், வீட்டு உட்புற அழகு சாதனங்கள், ஊருகாய், சல்லடை, மூங்கில் தொட்டி, ஏணிகள் ஆகியவை செய்யப்பயன்படுகிறது. ஒருவிதமான இரண்டரை வருடமான மூங்கில் குறுத்திலிருந்து சாப்பாடு செய்யப்படுகிறது, மலைவாழ் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மூங்கில் சூப் நட்சத்திர ஓட்டல்களில் விற்கப் படுகிறது. கிராமங்களில் வீடுகட்டப் களிகள் பயன் படுகிறது. கட்டிட வேலைக்கு முட்டுக்கள் கொடுக்கப் பயன்படுகிறது. மூங்கில் மண் அறிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு இடையில் ஊடுபயிர்கள் கூட வளர்க்கப்படுகிறது. மூங்கில் நட்ட 3 ஆண்டுகளிலிருந்து லாட வடிவில் களிகளை வெட்டி விற்கலாம். பின் இரண்டுஆண்டுக்கு ஒருமுறை வெட்டிக் கொண்டே இருக்கலாம். மூங்கில் இலை கால்நடைகளுக்குத் திவனமாக் பயன்படுகிறது, மூலிகையாகவும் பயன்படுகிறது. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்
தொடரும்

Friday, September 19, 2008

பாமரோசாபுல்


பாமரோசாபுல்

பாமரோசாபுல் என்பது சாதாரண கணம்புல் போன்று தான் இருக்கும். சுமார் 3 அடிஉயரம் வரை அதிக பக்கப் பயிர்களுடன் வளரும். இதன் ஆங்கிலப் பெயரும் குடும்பமும்-CYMPOBLGON SP.,GRAMINEAE. இது ஒரு வாசனைப்புல். இது எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கரிசல் மண்ணில் நன்கு வளரக்கூடியது. இது வளர்ச்சியைத் தாங்கி வளரும் பயிர். இது இரவையிலும் மானாவரையிலும் வளரக் கூடியது. தண்ணீர் வசதி இருந்தால் குறுகிய காலத்தில் நன்கு வளர்ந்து பூக்கள் தோன்றும். இதன் புல்லிலிருந்துவாசனை எண்ணெய் தயார் செய்யப் படுகிறது. அந்த வாசனை எண்ணெய வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. மேலும் இது பூஞ்சானைக் கொல்லியாக மிளகாயில் பழவாடல் நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

பாமரோசாபுல் பயிரிட நிலத்தை நன்கு உழுது சமப் படுத்தித் தொழு உரம் இட்டுத் தயார் நிலையில் வைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.100 க்குள் கிடைக்கும். விதைகளை நாற்றுப் பாத்தி அமைத்து நெருக்கமாகத் தூவி தண்ணீர்பாச்ச வேண்டும். நன்கு பராமரித்து 2 மாதம் வளர்ந்த அரை அடி உயரமுள்ள நாற்றுக்களை பண்படுத்திய நடவு வயலில் 1.5 அடிக்கு ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும். தண்ணீர் பாச்சி வரவேண்டும். மானாவாரியாக இருந்தால் மழை காலத்தில் நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழு உரம், 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிசத்து, 20 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை இட வேண்டும். 10 கிலோ துத்த நாக சல்பேட் கரைசலைச் செடிகளுக்கு தெளிப்பது எண்ணெய மகசூலை அதிகரிக்கிறது. ஒவ்வொரு அறுவடைக்குப்பின் 17 கிலோ யூரியாவை இடுவதால் இலை மகசூல் அதிகமாகக்கிடைக்கும்.

நட்ட ஆறுமாதம் கழித்து பூக்கும் தருணமே அறுவடை செய்ய ஏற்ற பருவம். இலைகளிலிருந்தும் பூங்கொத்துக்களிலிருந்தும் எண்ணெய் எடுக்கலாம். பின் வரும் மாங்களில் 3 மாத த்திற்கொருமுறை அறுவடை செய்யலாம். இந்தப்புல்லிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கென்றே பாயிலர்கள் தனி நபர்கள் வைத்துள்ளார்கள். அறுவடை செய்த இலைகள் ஒரு நாள் உலர்த்தி எண்ணெய் எடுக்கலாம். இந்தப் புல் 5 வருடங்களுக்குப் பின் கட்டைகளைத் தோண்டி எடுத்துவிட்டு மறுபடியும் நிலத்தை வழப்படுத்தி நாற்றுக்கள் மேலும் நடலாம். இந்தப் பயிர் செய்வதால் பின் தங்கிய மாவடமான தர்மபுரிக்கு ஏற்ற தொழிலாகத் தென்படுகிறது. ஆட்கள் கூலியும் குறைவே. அங்கு பாளையம் புதூர் மற்றும் அன்னசாகரம் ஆகிய ஊர்களில் எண்ணெய் எடுக்கும் பாயிலர்கள் தனி நபர்கள் அதிகமாக வைத்துள்ளார்கள். தற்போது ஒரு லிட்டர் எண்ணெய் ரூ.800-00 க்கு விற்கப் படுகிறது. அங்கு பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.

தென் மாவட்டங்களில் அதை அதிகமாப் பயிரிடுகிறார்கள்.சேலம், கோபி, தாளவாடி போன்ற இடங்களில் பயிர் செய்கிறார்கள். கோவை-துடியலுரைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆனைகட்டிக்கு அடுத்து 20 ஏக்கரில் பாமரோசபுல் வளர்த்தி சொந்தமாக பாயிலரும் வைத்து எண்ணெய் எடுத்துப் பார்த்தார் கூலி ஏற்றம் பில்லின் அவுட்புட் குறைவாகவே வந்துள்ளதாம். அதனால் அந்த ஏரியாவுக்குத் தகுந்த வெட்டிவேர் ஒரு ஏக்கர் போட்டுள்ளதாகச்சொன்னார். அவரது தொடர்பு எண்-9443076985.

இந்த பாமரோசாபுல் வளர்த்தி அனுபவம் பெற்றவர்கள் தங்களது கருத்துக்களை திரு.ஓசைசெல்லா அவர்களுக்குத் தெறிவிக்கலாம். தொடர்பு எண்-9994622423.

---------------------------------------------(தொடரும்)

Monday, September 8, 2008

மூலிகையும், மரமும் வளர்ப்பு


நான் 6-3-2004 முதல் கோவை வன மரபியல் கோட்ட அலுவலகம் மற்றும் வன விரிவாக்க மையத்தின் மாதாந்திர கருத்தாய்வு பகிர்ந்து கொள்வதற்காக விவசாயிகள் ஒன்று கூடினர். அதில் நானும் அன்று முதல் கலந்து கருத்துக்களைக் கேட்டறிந்தேன். இந்த கூடுதல் ஒவ்வொரு மாதமும் 6ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் வரை நடந்து வந்தது. அப்போது பதிவு பெறாத சங்கமாக நடந்து வந்தது. அப்போது அதன் தலைவராக இருந்தவர் டாக்டர் திரு. சுகுமார் ராஜா. அப்போது ஏனோ தானோ என்று கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது டி.சி.எப். ஆக இர்ந்தவர் திரு. எஸ்.கே. சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ். துணை வன பாதுகாவலர் வன மரபியல் கோட்டம், கோவை. ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகை பற்றி சித்தா டாக்டர் திரு. திருமலைசாமி விளகமளிப்பார். டாக்டர் திரு. சுகுமார்ராஜாவும் நோய்பற்றிக் கூறுவார் அதை குணப்படுத்துதல் பற்றி விவறிப்பார். அப்போது அந்த கூட்டம் நடைபெருவது யாருக்கும் அதிகமாகத் தெறியாது. அந்தக் கூட்டம் சிறியதாகவே இருந்தது. அதில் விவசாயிகள் சிலபேர், மூலிகை உற்பத்தி செய்வோர் சிலர், நிறுவனங்களிலிருந்து ஒரு சிலரும் வந்தனர். ஆனால் நிரந்தரமான உறுப்பினர் யாரும் கிடையாது. பெயருக்கு மூலிகை வளர்ப்போர் சங்கம் என்று இருந்தது. பின் திரு.சண்முகசுந்தரம் அவரகள் 2006 ல் திருவண்ணாமலைக்கு மாறுதலில் சென்றார். அவர் செல்லும் போதுஇந்த மூலிகை வளர்ப்போர் சங்கம் தொடர்ந்து செயல்பட அடுத்து வரும் அதிகாரி அனுமதிப்பாறா என்பது தெறியாது அதனால் சங்கம் நிறைவு செய்யச்சொன்னார். பின் 6-6-2006 ல் நடந்த கூட்டத்தில் ஒரு சங்கம் ஏற்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அன்று கூடியிருந்தவர்கள் முடிவு செய்தார்கள். அதன் படி முறைப்படி தலைவராக கெ.தேவராஜன் அவர்களும் உபதலைவராக திரு. கெ.பி.குப்புசாமியும் செயலாளராக திரு.பி.வின்சென்ட் அவர்களும், உப செயலாளராக திருமதி. கண்ணம்மாள் ஜெகதீசன் அவர்களும், பொருளாளராக திரு. பாலசுப்பிரமணியம் அவர்களையும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தைப் பதிவு செய்யும் பணியை ஆடிட்டர் திரு.நாராயணசுவாமி அவர்களையும் (தற்போது கொள்கை பறப்புச்செயலாளர்) நியமிக்கப்பட்டது. அதற்கு அடுத்த கூட்டத்தில் சங்கத்தின் விதி முறைகள், சட்ட திட்டங்கள், விவசாயிகளும் மற்றவர்களும் பயன் அடைவது குறித்து விளக்கங்கள் அடங்கிய ‘பைலா’ உறுவாக்கி எல்லோரும் ஆமோதித்த பின் சங்கம் ‘கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்’ என்று பெயர் சூட்டப் பட்டது. தலைவர் வீட்டு முகவரியிலேயே பதிவு எண் 110/2006 எனப் பதிவு செய்யப் பட்டது. அதில் ஆண்டு சந்தா ரூ.120-00 என்றும் ஆயுள் சந்தா ரூ.1000-00 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.20-00 என்று முடிவு செய்து தொடங்கப்பட்டது.


அதன் பின் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 6 ந்தேதி துணை வன பாதுகாவலர் அலுவலகம் (முதல் மாடி) மரபியல் கோட்டம் பாரதியார் ரோடு, கோவை-641043 என்ற இடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளான திரு. வைகைமணிசங்கர், அவர்களும் திரு உலகநாதன் அவர்களும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். சிறப்புப் பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், மூலிகை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி அதிகாரிகள் சந்தைப் படுத்துவோர் என பல தரப்பட்ட வர்களைஅழைத்து சங்கக் கூட்டம் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. மூலிகைகளை இனம் காண ஆழியார் மூலிகைப் பண்ணை பார்வையிடப் பட்டது. இயற்கை வழி வேழாண்மை நடத்துவதையும் நேரில் பார்வையிடப்பட்டது. சங்க உறுப்பினர்கள் பல்வேறு பயிற்சிக்காக அனுப்ப ப்பட்டனர். அண்டை மாவட்டத்திலிருந்தும் அங்கத்தினர்கள் சேர்ந்தார்கள். தற்போது சுமார் 310 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது தான் பத்திரிக்கைகள் இச்சங்கத்தைப் பற்றி எழுதுகிறாகள். சென்ற மாதம் தமிழ்நாடு விவசாயபல்கலைக்கழகம் இரண்டு பிராஜக்ட் வெளியிட்டது. ஒன்று அக்ரோ பாரஸ்டரி மற்றோன்று கட்பிளவர் எக்ஸ்போர்ட் இதில் மரம் வளர்த்தி காகிதத் தொழிற்சாலைக்கு அனுப்ப நமது சங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.


சென்ற 6-9-2008 சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வரவேற்புறை திரு.எ.கெ.உலகநாதன் ஐ.எப்.எஸ். துணைவனப் பாதுகாவலர் வன மரபியல் கோட்டம் கோவை. முன்னிலை திரு.தியாகராஜன். எம்.ஏ. வன விரிவாக்க க்கோட்டம் கிருஷ்ணகிரி, சிறப்புரையாளர்கள் திரு.இருளாண்டி ஐ.எப்.எஸ். தலைமை வனப் பாதுகாவலர் வன விரிவாக்கம், சென்னை. மற்றும் திரு.எஸ்.கே. சண்முக சுந்தரம் ஐ.எப்.எஸ். துணை வனப் பாதுகாவலர், காடுவளர்ப்புத் திட்டம் திருவண்ணாமலை. அடுத்து மருத்துவ விளக்கவுரை டாக்டர் திரு.திருமலைசாமி, சித்த மருத்துவர் அய்யம்பனை மூலிகை பற்றிப் பேசினார்.

சென்ற ஆண்டு தனியார் நிலங்களிங் மரம் வளர்த்தல் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில் தகுதி பெற சிறு,குறு விவசாயியாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு தரிசு நிலச்சான்று, சிட்டா அடங்கல், எப்.எம்., பட்டாபுத்தகம் தேவை என்றனர் அதனால் விவசாயிகள் சான்று பெற அவதிப்பட்டனர். தன்னிடம் உள்ள சிறிய நிலத்தில் நெடுங்காலப் பயிரான மரத்தை நட விருப்பமில்லை. அதனால் ஆணைகளை மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தலைவர் திரு.தேவராஜன் திரு.இருளாண்டி தலைமை வனப் பாதுகாவலர் விரிவாக்கம் அவர்களிடம் கேட்டார் ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. பல்லடத்தைச் சேர்ந்த விவசாயி பத்தாயிரம் சந்தனமரம் நாற்றுக்கள் நட்டு 2 வருடம் ஆகிறது அதற்குப் பாதுகாப்புக் கேட்டார். அது 15 வது வருடத்தில் பலன் கிடைக்கும் என்றார். மற்றொருவர் விதைகள் கேட்டார் ஆனால் இங்கு விதைக் கிடங்கில் விதை 3 ஆண்டுகளாக சேகரிப்பதில்லை, இருப்பு இல்லை.


திரு.சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ். அவர்கள் பேசும் போது கேட்ட கேள்விகளுக்கு சங்கத் தலைவர் திரு.தேவராஜ் பதில் கூற முடியவில்லை. அந்தக் கேள்விகள்-

1. இந்த சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை என்ன நடவடிக்ககை எடுக்கப்பட்டது?

2. இதுவரை சங்கத்திற்கு நிதி ஒதுக்கப் படவில்லை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?

3. வங்கிகளுக்கு நிதி உதவி கேட்டு எந்த பிராஜக்ட் அனுப்பவில்லை ஏன்?

4. வங்கிகளிடம் கடன் பெறுவது திருப்பிக் கட்டுவது குறித்த பிராஜக்ட்டுகள் எங்கே?

5. தொழில் நுட்ப திறமையாளர்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ளதா?

6. கூட்டம் வனத்துறை அலுவகத்தில் நடத்தப்படுவதை தவிர்த்திருகலாமே ஏன்?

7. சங்கத்திற்கு மத்திய நர்சரி ஏன் ஏற்படுத்தவில்லை?

8. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு மார்கட் வசதி ஏன் ஏற்படுத்தவில்லை?

9. சங்கம் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுக்கள் ஏன் அளிக்கப் படவில்லை.

10. எத்தனை பிராஜக்டுகள் அனுப்ப ப்பட்டுள்ளன?

11. சங்கம் வனத்துறைக்கு என்ன செய்கிறது?

12.சங்கத்திற் கென்று வெப்சைட் தனியாக ஏன் ஏற்படுத்த வில்லை?

13. கலைக்டரிடம் சங்கம் பற்றி செயல் பாடு ஏன் தெறிவிக்க வில்லை? விவசாயிகள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள வில்லை?

14.உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ஏன் வழங்கப் படவில்லை?

15. சங்கத்திற்கென்று கம்யூட்டர், புரொஜகடர் ஏன் வாங்கவில்லை?

மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கூற இயலாது. இவை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும். இந்த வலைப் பதிவை பார்ப்பவர்கள் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெறிவிக்கலாம். (தொடரும்)

Sunday, September 7, 2008

காட்டாமணக்கில் பயோடீசல்.


காட்டாமணக்கில் பயோடீசல்.


காட்டாமணக்கு பல வகையான மண்ணில் வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய நீண்ட கால ஒரு எண்ணெய்வித்துப் பயிர். கச்சா எண்ணெய் குறைந்து வருவதால் மாற்று எண்ணெய் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுவரும் நிலையற்ற தன்மையால் எதிர்காலத்தில் தாவர எண்ணெயை அரிய பொருளாக கட்டாயம் பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்படும். டீசலால் சுற்றுப் புறம் மாசுபடுகிறது. டீசலுக்குப் பதிலாக ‘தாவர எண்ணெயும்’ (பயோ டீசல்) பெட்ரோலுக்குப் பதிலாக ‘எத்தனாலும்’ எரிபொருளாக மாறும். தாவர எண்ணெயை எரி பொருளாகப் பயன் படுத்த மத்திய அரசு ஊக்கப் படுத்தி வருகிறது. காட்டாமணுக்கு, புங்கன் வகைகளிலிருந்து பயோடீசலும் சர்க்கரைச்சத்து நிறைந்த உணவுப் பொருளிலிருந்து எத்தனாலும் உற்பத்தி செய்யலாம். பயோடீசலின் தேவை அதிகம் இருப்பதால் விவசாயிகள் காடாமணக்கு மற்றும் புங்கள் ஆகிய மர வகைகளை பயிர் செய்து பலன் பெறலாம். மரவகைப பயிர்களை பயிர் செய்ய மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

காட்டாமணக்குப் பயிரிட கட்டிங் மூலமும் விதை மூலமும் பயிர் செய்யலாம். நன்றாக உழுத நிலத்தில் 2 மீ. x 2 மீ இடைவெளியில் 30 x 30 x 30 செ.மீ. என்ற அளவில் குழிகளை எடுக்க வேண்டும். எடுக்கப் பட்ட குழிகளில் 2 கி. தொழு உரம் இட்டு அதனை மண்ணோடு கலந்து குழியை நிரப்பிய பின் நடவினை மேற்கொள்ள வேண்டும். தரமான நாற்று வேர் 45 செ.மீ. நீளமும், தண்டின் பருமன் 2 செ.மீ. இருப்பது அவசியம். பருவமழை காலத்தில் நடவினை மேற்கொள்ளலாம். நடவு செய்த 6 வது மாதத்தில் முதல் கவாத்து 1.5 அடி உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். பின் 2 முறை ஒரு வருடத்திற்குள் செய்ய வேண்டும். அப்போதுதான் பக்கக் கிழைகள் அதிகமாக வளரும்.

காட்டாமணக்குக் கிடையில் ஊடு பயிராக பயிறு வகைகள், குதிரைவாளி, எள், கடலை போன்ற உயரம் குறைந்த ஊடுபயிர்களைச் பயிர் செய்யலாம். காட்டாமணக்கின் அடியில் நிலப்பொர்வை அமைக்க வேண்டும். அப்போது தான் ஈரப் பதம் விரைவில் உணராது. பயிர் பாது காப்பில் இலை,பூ பிணைப்பான், தண்டு காய் துளைப்பான் சாறு உரிஞ்சும் பூச்சிகள் சாம்பல் நோய், வேர் அழுகல் இவைகளைஅறிந்து எதிர்ப்பு மருந்து தெளிக்க வேண்டும். காட்டாமணக்கு 2 வது ஆண்டு முதல் 35 ஆண்டுகள் மகசூல் தரக்கூடிய பயிராகும். ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் பூ பூக்கும் பின் மூன்று மாதத்தில் காய்கள் விட்டு பின் பழுத்தபின் அறுவடை செய்ய வேண்டும். விதைகளில் 32 முதல் 35 சதவீதம் வரை எண்ணெய் சத்து இருக்கும். ஒரு ஏக்கரில் 1000 செடிகள் பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு1000 கிலோ முதல் 2000 கி. வரை எதிர் பார்க்கலாம். ஒரு ஏக்கர் நாற்றுகள் நட 250 கி. முதல் 300 கி. விதை தேவைப்படும். காட்டாமணக்கு செடிகளுக்கு இடையில் தேனீக்கள் பெட்டியை வைத்து பராமரிக்கலாம். விதையின் தன்மைக்கேற்ப டன் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை ஆண்டு வருமானம் கிடைக்கும். காட்டாமணக்கு வளர்க்க வங்கிக் கடனும் கிடைக்க சாத்தியமே.

மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய உயர் ரக காட்டமணக்கு வகைகளை டாக்டர் திரு பார்த்தீபன் அவர்கள் தனது ஆராயச்சியில் வெற்றி பெற்று கண்டு பிடித்துள்ளார். இதை அங்கீகாரத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த வகைப் பயிர் ஒரே வருடத்தில் பயனுக்கு வந்து விடும் மேலும் இரண்டு மாத த்திற்கு ஒரு முறை காய்கள் கொத்தாக காய்க்கின்றன நல்ல ஆதாயத்தைத் தருகின்றது. இந்த வகைகளை குளோனிங் முறையில் நாற்றுக்கள் தயார் செய்து விவசாயிகளுக்குக் கொடுத்தால் காட்டாமணக்கு மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள். அரசே பயோடீசல் தொழிற்சாலையையும் ஏற்படுத்தினால் நேரடிக் கொள்முதல் மூலம் இடைத்தரகர் இன்றி விவசாயிகள் நன்மை அடைவார்கள். எதிர் காலத்தில் பயோடீசல் உற்பத்தி விவசாய்களின் கையில் தான் உள்ளது. அரசு ஊக்குவிக்க வேண்டும். (தொடரும்)

Friday, August 22, 2008

காட்டாமணக்கு.




காட்டாமணக்கு.

காட்டாமணக்கு என்பது “JATROPHA CURCAS” . இதன் தாயகம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா. பின் அங்கிருந்து ஆப்பிருக்கா, லேட்டின் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பரவிற்று. இந்தியாவிலும், போர்ச்சுகலிலும் 16 வது நூற்றாண்டில் இது பரவலாக பரவிற்று.மேலும் அந்தமான் தீவுகளிலும் உயிறுள்ள வேலியாகப் பயன் பட்டது. மணல் சரிவதையும், நில அறிப்பையும் இது கட்டுப் படுத்தியது.இது எல்லா வகை மண் வகைகளிலும் வளரக்கூடியது.

காட்டாமணக்கு ஒரு குறு புதர் மரம். புதர்வகை 170 ல் இதுவும் ஒன்று. கிரேக்க மொழியில் ‘JATOROS’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ‘JATROS’ என்றால் மருத்துவர். ‘TROPHE’ என்பது ‘NUTRITION’ என்பதாகும். அதனால் தாவரப் பயர் ‘JATROPH CURCAS’ என ஆயிற்று. இதன் குடும்பப்பெயர் ‘EYOGIRVACEAE’ ஆகும். இதன் தண்டுப் பகுதி மென்மையான சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் கைவிரித்தால் போன்று அகலமாக இருக்கும்.செடித் தண்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டால் அதிலிருந்து பால் போன்ற பசையுள்ள ஒரு திரவம் வரும். இது மருத்துவ குணமுடையது. பல் வலி எகுறு வலி ஏற்பட்டவர்கள் இதன் மென்மையான குச்சியால் பல் துலக்கினால் குணமடைவார் கள். இதன் கிளைகள் பக்கவாட்டில் அதிகரிக்கும். இதன் பூக்கள் சிறியதாக் கொத்துக் கொத்தாக இருக்கும். அதில் பெண் பூக்கள் குறைந்தும் ஆணபூக்கள் அதிகமாகவும் காணப்படும். பூக்களின் இதழ்கள் ஐந்தாக இருக்கும். பெண் பூக்கள் மத்தியில் குமிழ் போன்று இருக்கும். ஆண் பூக்களுக்கு மத்தியில் இறுதியாகப் பூ விறியும், அப்போது தான் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். ஆனால் தற்போது கோவை விவசாயக் கல்லூரியில் உள்ள விஞ்யானி திரு.எம். பரமாத்மா அவர்கள் பெண் பூகளை முதலில் அதிகமாக மலரச் செய்து ஆண் பூக்கள் அதன் பின் மலரச் செய்யும் ஆரய்ச்சியில் செயல் படுத்தி வெற்றியடைந்து தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை அதிகறிக்கச்செய்து குறுகிய காலத்தில் அதிக காய்களைத் தரும் காட்டாமணக்கு ரகங்களை உறவாக்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்களிடம் பாராட்டுதலையும் பெற்றுள்ளார். காய்கள் 3 அறைகளைக் கொண்டதாக இருக்கும், அவை முதலில் பச்சை நிறமாக இருந்து முதிறும் போது மஞ்சள் நிறத்தை அடையும், பின் இறுதியாக கருப்பாக மாறி சிறிது வெடித்து இருக்கும். இந்தக் காய்கள் மஞ்சளாக இருக்கும் போது அதைப் பறித்து விதைகள் எடுப்பது சிறந்தது என்று திரு எம. பரமாத்மா கூறினார். விதைகள் கெட்டியான ஓட்டுடன் கருப்பாக இருக்கும். நுனியில் கண் போன்ற வெள்ளை கருப்பொருள் இருக்கும். ---------(மேலும் தொடரும்)