Thursday, December 19, 2013

ஊறுகாய் தயாரித்தல்.



ஊறுகாய் தயாரிக்க ஆசையா?
வேளாண் பல்கலையில் பயிற்சி.

வேளாண் பல்கலை சார்பில், சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி நடக்க உள்ளது. வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறைக்கை;  வேளாண் பல்கலையில் மசாலாப்பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி டி., 26, 27 ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் மசாலா பொடிகள், தயார் நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்ப்பூ ஊறுகாய் பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய் மற்றும் வெங்காய ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்ட உள்ளன. இதில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.  பயிற்சி கட்டணமாக ரூ.1000 செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வர இயலாதவர்கள் பயிற்சிக் கட்டணத் தொகையை வரையோலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர் அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், என்ற பெயரில் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில்  பெறத்தக்க வகையில்  எடுத்து பேராசிரியர், மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்துஊர்-641 003 என்ற முகவரிக்கு, டிசம்பர் 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

நன்றி- தினமலர் நாள் 20-12-2013.

--------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, December 3, 2013

விவசாய மற்றும் தோட்டக்கலை விழா.


Inline image 1

TRADE INDIA FAIRS AND EXHIBITIONS PRIVATE LTD,
262, Ravindranath Lay Out, Venkatasamy Road,
New Sidhapudur, Coimbatore-641044. INDIA.
Phone:+91 422 2525197,
Mob: +91 93631 06848, +91 94881 75889
E-Mail: agrihorti2013@gmail.com
Web: www.agriandhortitech.com

Friday, November 29, 2013

தேசிய அளவிலான மரவிதை விஞ்ஞானமும் மரவளர்ப்புக்கலை கருத்தரங்கு.

For past two days (28th &29th) the Coimbatore IFGTB conducted NATIONAL WORKSHOP ON TREE SEED 
SCIENCE AND SILVICULTURE function. More than 100 participant from all states of India involved in this function. The Director N.KRISHNA KUMAR I.F.S. and his staff arranged food and shelter, conducted the workshop in a good manner and every body appreciated the good work done by them.

Here enclosing the speech of  S.K.SHANMUGHASUNDARA, I.F.S. (Retd. CCF) to day evening about
'Implications of seed bill on forestry seeds in India.'


----------------------------------------------------(தொடரும்)

Thursday, November 28, 2013

.IFGTB ல் படக்காட்சி திறப்பு விழா.

இன்று 28-11-2013 அன்று கோவை  .'IFGTB'     ல் மரவிதை விஞ்ஞானமும் மரவளர்ப்புக்கலை பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கு காலையில் தொடங்கிற்று. அப்போது தேனீர் இடைவைளைக்குப் பின் படக்காட்சி திறப்பு விழாவும் நடை பெற்றது  அதன் புகைப்படங்கள் சில பார்வைக்கு.





 மத்தியில் Dr.C..புவனேஸ்வரன்.



இடது பக்கம் Dr..ஆர்.அனந்தலச்சுமி.
இடது பக்கம் Dr..B.குருதேவ்சிங்.
வலது பக்கம் இயக்குனர் என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ்.



வலது பக்கம் டி.பி. ரகுநாத் ஐ.எப்.எஸ்.
-------------------------------------------------(தொடரும்)

Tuesday, November 26, 2013

லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.




 
வெள்ளாடு.
லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.

விவசாயிகளுக்கு அதிகம் வருவாய் ஈட்டித்தரும், கால்நடைகளில் வெள்ளாடும் ஒன்று. குறைந்த பராமரிப்பில், அதிக லாபம் ஈட்டடித்தரும் வெள்ளாடுகளை, வளர்ப்தற்க்கான பயிற்சி முகாம் ,கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது.

வெள்ளாடு வளரர்ப்பு, அதிகளவில் வருவாய் ஈட்டித் தரக்ககூடிய ஒன்று. ஒரு வெள்ளாடு ஐந்து மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட, குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. தோல், தலை, குடல் என ஆட்டின் அனைத்து உறுப்புகளும், இறைச்சிக் கடைகளுக்கு தேவைப்படுவதால், வெள்ளாடு அதிக அளவில் விற்கப்படும் கால்நடையாகக் கருதப்படுகிறது.

அதிக விலைவைத்து விற்கப்படும் வெள்ளாடுகள், விவசயிகளிடம் இருந்து குறைந்த வில்லைக்கே வாங்கப்படுகின்றன. இதைக் தடுக்கவும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ,விவசாயிகளுக்கான ஒருமாத கால பயிற்சி முகாம் நடத்துப்படுகிறது.

பயிற்சிமைய உதவி பேராசிரியர் சிவக்குமாரிடம் கேட்ட போது. ‘வெள்ளாடுகளை வளர்க்கும் விதம், தீவனம், தடுப்பூசி, விற்பனை வழிமுறைகள் குறித்து, பயிற்ற்சி அளிக்கப்படுகிறது.  ஆரோக்கியமாக, அதிகளவு தீவனம் போட்டு, வளர்க்கப்படும் வெள்ளாடுகளின் விலை மதிப்பு அறியாமல், விவசாயிகள் இடைத்தரகர்களை நம்பி, குறைந்த விலைக்கு விற்று ஏமாற்றம் அடைகின்றனர்.

ஒரு ஆட்டின் மொத்த எடையில், பாதி எடையளவு, சதைப்பகுதி, இதன் விலையை நிர்ணயித்து விற்றால் மட்டுமே, விவசாயிகள் லாபம் பெற முடியும். இதற்கு 1,000 ரூபாய் பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்என்றார்.

நன்றி தினமலர் நாள் 26-11-2013.

--------------------------------------------(தொடரும்)

Thursday, September 26, 2013

தேனி வளர்ப்பு பயிற்சி.

தேன் அடை.

வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில், தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. வரும் 7 ம் தேதி (7-10-2013) நடக்கும் முகாமில், தேனி இனங்களைக் கண்டறிதல், பெட்டிகளில் தேனீக்கள் வளர்ப்பு முறை மற்றும் நிர்வாகம், உணவு தரும் பயிர், மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களிம் விபரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும், நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடக்கும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும். விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பல்கலை, கோவை 641003 என்ற முகவரியிலும், 0422 6611214 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.
----------------------------------------------------------( தொடரும்.)

Friday, September 6, 2013

பாரம்பரிய விதைகள் திருவிழா



அன்பு சுந்தரானந்த சுவாமிகள்



பாரம்பரிய விதைகள் திருவிழா மற்றும் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி முகாம்.



நாள்- 20-10-2013 (ஞாயிறு)


நேரம்  காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை
.

இடம்  பார்சன் காம்ப்ளக்ஸ் எதிர்புறம் விஜயா பவுண்டரி தோட்டம்.

நஞ்சுண்டாபுரம் சாலை, இராமநாதபுரம், கோவை.




நிகழ்வன  கருத்து மற்றும் அதன் செயல் வளக்கம் தருவோர்-



தலைமை  உயர்திரு அன்பு சுந்தரானந்த சுவாமிகள் (B.Tech., TNAU) 9944691181.



முன்னிலை  உயர்திரு த.கோவிந்த ராஜுலு விஜயா பவண்டரி தோட்டம்.



இயற்கையை நேசித்து சிறப்புரையாற்றும் சிறப்புரையாளர்கள்.



இயற்கை காவலர் உயர்திரு கோ.நம்மாழ்வார் இயற்கை விவசாயபோராளி



உயர்திரு ந.மார்க்கண்டன் முன்னாள் துணைவேந்தர்- காந்தி கிராம கிராமியப்பல்கலைக்கழகம்.



உயர்திரு சிபி அரங்க்கோபால் சிபி ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனம்.



உயர்திரு முருகேசன் வனத்துறை விஞ்ஞானி. 9463801110.



உயர்திரு ஜெயராம், பாரம்பரிய விதைகள் மையம், மயிலாடுதுறை.-9443320954.



உயர்திரு நவநீத கிருஷ்ணன்  உ.வே. வல்லுனர் மேட்டுப்பாளையம் 9487850277.



உயர்திரு ராஜ ரத்தினம், ஈடன் நர்சரி கார்டன், மேட்டுப்பாளய்ம்-9486094670.



உயர்திருகர்னல் வில்லவன் கோதை அவர்கள் இயற்கை உரங்கள்-9442233876.



உயர்திரு திருமதி சாந்த ராமசாமி ஶ்ரீவத்ஸா இயற்கை வழி வேளாண் பொருட்கள் விற்பனை அகம் -9443321933.



உயர்திரு சண்முக சுந்தரம், சேலம், இயற்கை மருத்துவம். இயற்கை உணவு (சிறுதானியங்கள் சிங்கம்) 9600851111.



உயர்திருஓடிஆர் திருரெய்சன், ஓடிஆர் இயற்கை வழி வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம் -9791211979.



உயர்திரு APXN அ.சுரேஷ் குமார், பசுமை கோவை – தலைவர் (நகர்களின் நலம் – 100 குடியிருப்பு நல சங்கங்களின் ஊட்டமைப்பு) பாரம்பரிய விதைகள், கீரை விதைகள், ஆசோலா வளர்ப்பு பயிற்சி-9442843798.



உயர்திரு அன்பன் .ச.க.கண்ணப்பன், நட்பு –உணவு பூங்கா திட்டம், -9965151549.



மதியம் இயற்கை உணவு வழங்கப்படும். நுழைவுக்கட்டணம்.ரூ.150-00 மட்டும்.

 

பாரம்பரிய நெல் விதைகள் ஒரு விவசாயிக்கு 2 கிலோ இலவசமாக வழங்கப்படும் அதை அடுத்த ஆண்டு 4 கிலோ விதை நெல் திருப்பித் தரவேண்டும்.

தொடர்பு கொள்ள -99446 91181, 9965151549, 94428 43798.



----------------------------------------------------------(தொடரும்)