Saturday, December 20, 2008

விதையில்லா மூங்கில் சாகுபடி











விதையில்லா மூங்கில் சாகுபடி.

மூங்கிலில் இருந்து விதை சரிவர எல்லாக் காலங்களிலும் கிடைக்காததாலும், தரமான தாய்மூங்கிலை ஒத்த கன்றுகளை உற்பத்தி செய்வதற்கும், விதையில்லா மூங்கில் சாகுபடி முறை பயன் படுத்தப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளைக் கையாண்டு விதையில்லாமல் மூங்கிலை உறப்த்தி செய்யலாம்.

1. களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
2. பக்கக்கிளைகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
3. வேருடன் கொண்ட களிகளைப் பயன்படுத்தல்.
4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.
5. களிகளை அதற்றி நடும் முறை.
6. திசுமுறை வளர்ப்பு.

1. களிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்ந்த களிகளை வெட்டி, பின் பக்க கிளைகளை அகற்றி மணற்பாங்கான பள்ளப் பாத்திகளில் வைத்து மூடி நீர் பாச்சுதல் வேண்டும். இதற்குப் போதிய நிழல் கொடுத்தல் வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஒவ்வொரு கணுவில் இருந்தும் வேர் தோன்றி புதிய தண்டுகள் தோன்றும். இதன் பிறகு, கணுவையும் நாம் வெட்டியெடுத்து, பாலித்தீன் பைகளில் நட்டு 3 அல்லது 4 மாதங்கள் வளர்த்த பிறகு நடவு வயலுக்கு எடுத்துச் செல்ல லாம். இவ்வாறு அல்லாமல் மூங்கில் களிகளை2 அல்லது 3 கணுக்கள் கொண்ட தண்டுகளாக வெட்டி இதில் 100 மில்லி 200ppmIBA என்ற வேர் ஊக்கியை நிரப்பி நாற்றங்காலில் நட்டு நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

2. பக்கக்கிளைகளைப் பயன் படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்.

களிகளில் உள்ள பக்கக்கிளைகளை வெட்டி ஒரு கணு கொண்டுள்ள துண்டுகளாக மாற்றி, மேல்பாகம் மெழுகு கொண்டு பூசி, பாலித்தீன் பைகளில் கீழ்பாதியில் மண் மற்றும் 2; 1 என்ற விகிதத்தில் பாதியில் மணல் நிரப்பி மிஸ்ட் சேம்பரில் வைத்துப் பராமரித்து நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வளர்ந்த நாற்றினை வெளியே எடுத்து தற்காலிக நாழலில் வைத்து 2 மாதங்களுக்குப்பிறகு வெட்ட வெளியில் வைத்து வளர்ந்த 6 மாத கன்றுகளை வயலில் நடலாம்.

3. வேருடன் கொண்ட களிகளைப் பயன் படுத்துதல்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வளர்ந்த களிகளை அடிபாகத்திலிருந்து ஒன்று அல்லதுஇரண்டு கணுக்களை விட்டு வெட்டியெடுத்த பிறகு வேருடன் தோண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு தோண்டிய களிகளில்வேர் பாகத்தை 2% பெவிஸ்டின் கரைசலில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின் களிகளில் வெட்டுப் பட்ட மேல்பாகத்தில் போடோ பேஸ்ட் மூலம் மூடி மழைகாலங்களில் இதனை நடவு வயலில் நடலாம்.

4. பதியன் மூலம் மூங்கில் நாற்றுக்கள உற்பத்தி செய்யலாம்.

ஒராண்டு வளர்ந்த களிகள் அல்லது பக்கக்கிளைகளை வளைத்து மண்ணில் புதைத்து நீர் ஊற்ற வேண்டும். 3 அல்லது 4 வாரங்களில் வேர் மற்றும் தண்டுகள் கணுக்களில் தோன்றும். இவ்வாறு தோன்றிய பின் இவற்றை தாய் மரத்திலிருந்து வெட்டியெடுத்து ஒவ்வொரு கணுவினையும் வெட்டி பாலிதீன் பைகளில் நட்டு நாற்றுக்களை உற்பத்தி செய்து நடலாம்.

5. களிகளை அகற்றி நடுதல் முறை.

ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வளர்ந்த தரமான கன்றுகளை எடுத்து இவற்றில் உள்ள 4-6 களிகளைப் பிரித்து வேருடன் நட்டு நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடவு வயலில் நடலாம். இவ்வாறு நடவு செய்வதன் மூலம் தரமான தாய் கன்றுகளை நாற்றங்காலிலேயே பராமரித்து அதிக நாற்றுக்கள் உற்பத்தி செய்யலாம்.

6. திசுமுறை வளர்ப்பு.

மூங்கில் மரக்கன்றுகளைத் தரமான தாய் மூங்கில் மரத்தின் தண்டுகளின் நுனிப்பாகங்களைக் கொண்டு 4 முதல் 8 மாதங்களில் ஆயிரக்கணக்கான நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தயாரிக்கப்படும் நாற்றுக்கள் மிகுந்த வீரியத்துடனும் நல்ல வளர்ச்சியுடனும் வளரும். மேலும் பூச்சி மற்றும் பூஞ்சான நோய்கள்தாக்காத கன்றாக இருக்கும் கன்றுகள் சிறியதாக இருப்பதால் எடுத்துச் செல்லும் செலவு குறையும்.

மேலே கூறப்பட்டுள்ள விதையில்லா மூங்கில் தயார் செய்யும் போது, தாய்மரத்தின் வயது தெருந்து
கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் தாய்மரம் பூத்தால் அதிலிருந்து தயாருக்கப்பட்ட நாற்றுக்களும் பூத்துவிடும்.

எனவே தரமான மூங்கில் நாற்றுக்களைத் தயாரித்து அதன் மூலம் வாளிப்பான மூங்கில் காடுகளை வளர்த்து அதிக லாபம் பெறுவதோடு வளமான வாழ்வினைப் பெறுவோம்.

(குறிப்பு- கோவை மாவட்டத்தில் மூங்கில் நாற்றுக்கள் கிடைக்குமிடம்- ஈடன் நர்ஸரி கார்டன்ஸ், தமிழ்நாடு ஆரசு உரிம எண்: 760/CBE/98
23 /15 கருபாயம்மாள் தோட்டம், வெள்ளிபாளையம் ரோடு, மேட்டுப்பாளையம்-641 301, போன் 04254 226493, ராஜரத்தினம் BSc., 94860 94670.)மற்றும் தஞ்சாவூர், காடையூர் திருச்சி ஆகிய ஊர்களிலும் கிடைக்கும்.

--------------------------------( மூங்கில் தொடரும் )

Sunday, December 14, 2008

தேசிய மூங்கில் இயக்கம்.




தேசிய மூங்கில் இயக்கம்.
( National Bamboo Mission )

தமிழ் நாடு அரசு, தோட்டக்கலைத்துறை, உதவி இயக்குநர் காரமடை அவர்களால் 12-12-2008 அன்று ஒரு நாள் கருத்தரங்கு மூங்கில் சாகுபடி பற்றி மேட்டுப் பாளையத்தில் நடைபெற்றது. அதில் அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘தேசிய மூங்கில் இயக்கம்’ (National Bamboo Mission) பற்றி விளக்கியிருந்தார். அதன் விபரம் பின்வருமாறு.

இந்தியாவில் நிலவி வரும் ஒழுங்கற்ற சந்தை நிலவரத்தையும் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை (Value Added Products) தயாறிக்கும் தொழில் நுட்ப பற்றாக் குறையினையும் நிவர்த்தி செயவதற்காக இந்திய திட்டக் குழுவின் பரிந்துறையின் படி தேசிய மூங்கில் குழு உருவாக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசால் ரூபாய் 568.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நோக்கம் :-
தகுதியான வனமல்லாத பகுதிகளில் அதிக அளவில் மூங்கில் காடுகளை உருவாக்குதல்.

சரியான விற்பனை சந்தைகளை உருவாக்குதல் :-
மூங்கில் உற்பத்தியாளர்களை ஒன்று சேர்த்து மூங்கில் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அளவை அதிகப்படுத்துதல்.

கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் மூங்கில் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாயப்பை அதிகப்படுத்துதல்.

மூங்கில் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.
மூங்கில் 47 பங்கு கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து 35 பங்கு ஆக்ஸிஜனை வெளி விடுகிறது. ஒரு வருடத்தில் ஒரு ஏக்கர் மூங்கில் 12.7 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்கிறது.

மூங்கில் காடுகள் 5-6 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை மகசூலைத் தருகின்றன. இதனால் பொருளாதார ரீதியாக மற்ற மரங்களை விட அதிக வருமானத்தை மிக க்குறைந்த காலத்திலேயே மூங்கில் ஈட்டித் தருகின்றது. சீரிய சாகுபடி முறைகளை மேற்கொண்டு மூங்கில் சாகுபடி செய்தால் 6 வது ஆண்டில் இருந்து வருடந்தோறும் ஏக்கருக்கு ரூ.20,000 மிதல் ரூ.30,000 வரை லாபம் ஈட்டலாம்.

தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் அரசு வழங்கும் உதவிகள் :-

1. வனமல்லாத பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் ஒரு எக்டர் மூங்கில் சாகுபடி செய்ய ஆகும் செலவில் 50 சத மானியத்தை, முதல் வருடம் ரூ.4000-00 ம் இரண்டாம் ஒருடம் ரூ.4000-00 என மொத்தம் ரூ.8000-00 மானியமாக வழங்கப்படுகிறது. இரண்டாம் வருடம் 90 சத செடிகள் உயிருடன் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 4 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

2. மூங்கில் பயிருக்கு சொட்டு நீர் பாசனம் ( Drip Irrigation System ) அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.20,000-00 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 4 எக்டர் வரை சொட்டு நீர் பாசனம் அமைக்க இம்மானியம் வழங்கப்படுகிறது.

3. மூங்கில் சாகுபடி குறித்த பயிற்சிகள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்களைக்கொண்டு வழங்கப்படுகிறது.

4. மூங்கில் சாகுபடி செய்யும் விவசாயிகளைக்கு ஒருகிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் எக்டருக்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.200-00 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

5. செயல் விளக்க மூங்கில் தோட்டம்- அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 0.5 எக்டர் செயல் விளக்க மூங்கில் தோட்டம் அமைக்க ரூ.5000-00 மானியம் வழங்ப்படுகிறது.

இதைப்பற்றி பயிருட ஆர்வம் உள்ளவர்கள் அந்தந்த தோட்டக் கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

--------------------------------( மூங்கில் தொடரும் )

Thursday, December 11, 2008

மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்




மூங்கில்விதை நேர்த்தி, சேமிப்பு முறைகள்.

மூங்கில் விதை இனப்பெருக்க முறையில் நன்கு வீரியமுள்ள முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மூங்கிலின் விதையின் முளைப்புத்திறன் அவை பூக்கின்ற தன்மையைப் பொறுத்தே மாறுபடுகிறது. பொமுவாக 30-35 வருட வயதுடைய மூங்கில்கள் ஒட்டு மொத்தமாக நன்கு பூத்துக் குலுங்கிய பின்பு முழுவதும் இறந்துவிடும். அதனால் விதை மூலம் உற்பத்தி செய்வது குறைந்து விடுகிறது.

விதைகள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்புதான் அறுவடை செய்ய வேண்டும். சேகரித்த விதைகளின் மேற்புரத்தோல் நன்கு பழுப்பு நிறமாகவும் கடினமாகவும் இருந்தால் அவைகள் விதைகளின் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. நன்கு முற்றிய விதைகளைக் கொண்ட பூங்கொத்தை சாய்ந்தோ அல்லது மரத்தை கை மூலம் உலுக்கியோ புதிதாக கீழே விழும் விதைகளைச் சேகரிக்க வேண்டும். சரியாக முறைப்படுத்தப்பட்ட விதை தொழில்நுட்பங்களை கையாளுவதால் நல்ல தரமான விதைகளைப் பெறலாம்.

விதைசுத்திகரிப்பு

கதிரிலிருந்து விதைமணிகைப் பிரித்தெடுக்க அவற்றைத் தரையில் அடித்தோ அல்லது கைகளில் தேய்த்தோ சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூற்றி, தேவையற்ற்ற பொருட்களை தவிர்த்து பின்பு சேகரித்த விதைகளை மட்டும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவி பிறகு நன்கு முக்கிய விதைகளையும் பொக்கு விதைகளையும் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். நன்கு முதிர்ச்சி அடையாத விதைகளை தண்ணீரில் மேல் மிதக்கும். விதைகளைப் பெரிய விரிப்பின் மேலோ அல்லது வெள்ளை நிறப் பாலித்தின் விருப்பு மேல் பரப்பி நன்கு சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் காயவைக்க வேண்டும். பின்பு விதையின் ஈரப்பதம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அதனுடைய ஈரப்பதத்தைக் குறைத்து சேமிக்க வேண்டும். விதைகளை காயவைக்கும் போது 4-5 முறை நன்கு கிளறி விட வேண்டும். அவ்வாறு செய்வதால் சீரான முறையில் விதைகளின் முளைப்புத் திறனை பாதிக்காமல் சேகரிக்கலாம்.

விதை நேர்த்தி.

மூங்கில் விதைகளை 100 பிபிஎம் ஜிப்ரலிக் அமிலத்தில் சுமார் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு நன்கு உலர்த்தி விதைத்தால் விதையின் வீரியம் மற்றும் முளைப்புத்திறன் சுமார் 30 சதம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூங்கில் விதையுடன் அஸோஸ்பைரில்லம் நுண்ணூட்டக்கலவை ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் என்ற அளவில் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு விதை மூலம் பூசும் கலவையைக் கொண்டு விதை முலாம் செய்து அவற்றை சுமார் 16 மணி நேரம் இருட்டறையில் வைத்திருந்து விதைத்தால் விதையின் முளைப்புத்திறன் விதைமுலாம் பீசப்படாத விதையைக் காட்டிலும் சுமார் 21 சதம் அதிகரிதுக் காணப்படுவதோடு நாற்றங்காலில் நல்ல வளமான நாற்றுக்களைப் பெறலாம்.

விதை சேமிப்பு.

மூங்கில் விதைகளை சாதாரண அறை வெப்ப நிலையில் கால்சியம் குளோரைடு கரைசலில் சேமித்து வைத்தால் அதனுடைய மூளைப்பு மற்றும் வீரியம் பாதுகா க்கப்படும். மேலும் டை-சோடியம் ஹைடரஜன் பாஸ்பேட் (10-4 அ) அடர்த்தியுள்ள கரைசலில் ஊறவைத்து உலரவைப்பதைக் காட்டிலும் சிறந்த முறையாகும்.

பொதுவாக விதையின் முளைப்புத்திறன் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே, விதைகளின் முளைப்புத் திறனை 60 நாட்களுக்கு மேல் நீடிக்க மணல் நிறப்பப்பட்ட கோணிப் பைகளில் சேர்த்து வைக்க வேண்டும்.

மூங்கில் விதையை ஆஸ்டர்னேரியா, ஆஸ்பர்சில்லஸ் செர்க்கோஸ்போரா, பெனிசிலியம் மற்றும் சூபாமாப்சிஸ் போன்ற பூன்சான்கள் விதையைத் தாக்கும் வாய்ப்புள்ளது.. எனவே, விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தற்போது ட்ரைகோடர்மாவிர்டி (4 கிராம், கிலோ) மற்றும் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் (10) கிராம், கிலோ) என்ற எதிர் உயிர் பூஞ்சானம் மற்றும் எதிர் உயிர் பாக்டீரியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செயவதனால் விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப் படுத்தி நல்ல தரமான நாற்றுக்களைப் பெறலாம். பொதுவாக சேகரித்த மரவிதைகளை சில நாட்கறுக்குள் பயன் படுத்தாவிட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, அதிகளவு தரமான மரவிதைகள் கிடைக்க விதைகளை மரத்திலிருந்து குறிப்பிட்ட காலத்தில் சேகரித்துப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் தகுந்த முறையில் சேகரித்து வைத்தல் மிகவும் அவசியமாகும்.


------------------------------- (மூங்கில் தொடரும்)

Wednesday, December 3, 2008

தாவரக் கள்.

தாவரக் கள்.

தமிழ்நாட்டில் பனைமரங்களும், தென்னை மரங்களும் அதிக அளவில் உள்ளன. இந்த இரு மரங்களிலிருந்து பாளையிலிருந்து அறுத்தவுடன் ஒரு திரவம் வரும் அதை ஒரு சிறு சொப்புப் பானை கொண்டு தினமும் காலை மாலை சேகறிப்பது தான் பதநீர். அந்த பதநீர் சேகறிக்கும் பானையில் உட்புரம் சுண்ணாம்பு பூசி எடுப்பது பதநீர், சுண்ணாம்பு பூசாவிட்டால் கிடைப்பது கள். கள் நாட்படவைத்திருந்தால் போதையுண்டாகும். பதநீரைக் காச்சி பதத்துடன் எடுத்து குழிகளிலோ, அச்சுக்களிலோ வார்த்து காய்ந்த பின் எடுத்தால் அது வெல்லம். இனி கள் பற்றி மாநில விவசாய அணி செயலாளர் தாத்தூர் திரு.சுப்பிரமணியம் மற்றும் மாநில துணைத்தலைவர் திரு.பாலசுப்பிரமணியம் இருவரும் கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்கக் கோருவதற்கான காரணங்களை கீழே காண்போம்.

1.கள் தமிழ்நாட்டின் சுதேசி பானம்.

2.சங்க காலத்தில் உணவின் ஒரு பகுதியாக கள் இருந்து வந்துள்ளது. இதை யாரும் தவராக எடுத்துக் கொள்ள வில்லை. சங்க இலக்கியங்களே இதற்குச்சான்று.

3. கள்ளும் கரும்புச்சாறும் ஏறத்தாழ ஒன்றுதான். காலை மாலை என இரு வேளை இறக்கும் கள் போதை தராது. புளித்துப் போனால் தான் போதை இருக்கும். புளித்த கரும்புச் சாற்றிலும் இதே போதை இருக்கும். புளிக்காத கள் ஒரு சத்தான உணவு என்பது மகாத்மா காந்தி போன்ற மகான்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று.

4. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதி நூல்களில் மட்டுமே கள்ளுண்ணாமை வலியுருத்தப் பட்டுள்ளது.

5. சுதந்திர இந்தியாவில் மது விலக்கை அமல்படுத்த முடியாத காரணத்தால், குஜராத் மாநிலத்தைத் தவிர இந்தியா எங்கிலும் மது விலக்குக் கைவிடப்பட்டது.

6. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மது விலக்கு இல்லை. கள், சாராயம் மற்றும் அயல் நாட்டு மது வகைகளும் அங்கே விற்கப்பட்டு வருகின்றன.

7. தமிழ்நாட்டில் கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடிய அயல் நாட்டு இந்தியத் தயாறிப்பு(IMFL) மது வகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுதேசி தயாறிப்பான கள்ளுக்குத் தடை விதித்துள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது அரசு கொண்டுள்ள விரோதப் போக்காகும்.

8. உலக அளவில் சுதேசி மதுவிற்குத்தடையும் விதேசி மதுவிற்கு அனுமதியும் கொடுத்திருப்பது எங்கும் இருக்க முடியாது. தமிழ் நாட்டைத் தவிர.

9. கள் உணவு ஊட்டத்திற்கான (Nutritional) சத்துக்களைக் கொண்டுள்ள ஒரு இயற்கையான பானம். சில நேரங்களில் மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் நலத்திற்குத் தீங்கு தராது. பக்க விளைவு இராது. இதில் போதைக்குக் காரணமான ஆல்க்ஹாலின் அளவி குறைவு. அதே நேரத்தில் (IMFL) மதுவில் போதை ஊட்டும் ஆல்கஹாலைத் தவிர எதுவும் இல்லை.

10. கள்ளை விட (IMFL) கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடியது என்பது விஞ்ஞானிகளாலும் மருத்துவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அனைத்து மக்களுக்கும் இது தெரியும்.

11. தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு உண்மையல் மக்கள் நலனில் அக்கறை இருந்திருக்குமேயானால் (IMFL) மதுவிற்குத் தடை விதித்திருக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

12. சட்டம் என்பது கெடுதி விளைவிக்கக்கூடியது. குறைவான கெடுதி விளைவிக்கக் கூடியதே சட்டமாக இயற்றப்படவேண்டும்.
(LAW IS AN EVIL, LESSER EVIL WILL BE ENACTED AS LAW)

சட்டத்திற்கான இந்த வரையறைப்படி பார்த்தால் கள்ளுக்குத் தடை விதித்திருக்க க்கூடாது.(IMFL) க்கு மட்டும் அனுமதி தந்திருக்கக்கூடாது.

13. தென்னை, பனை மரங்களை வைத்திருப்பவர்களும், மரம் ஏறுபவர்களிம் பல லட்சம் பேர்கள், இவர்களால் ஒன்றுபட்டு ஆட்சியாளர்களைக் கவனிக்க முடியாது அதே நேரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே
‘டாஸ்மார்க்’ நிறுவனத்திற்கு(IMFL) மது தயாரித்துக் கொடுக்கிறார்கள். அவர்களால் ஆட்சியாளர்களைக் கவனிக்கும் விதத்தில் கவனிக்க முடிகிறது. இதன் மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை கை மாறுவதாக மக்களிடையே பேசப்படுகிறது.

14. கவனிக்கும் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், கவனிக்காத மறுகண்ணுக்குச் சுண்ணாம்பு என்பதில் நியாமும் இல்லை. நடுவு நிலைமையும் இல்லை.

15. இதில் ஆட்சியாளர்கள் நேற்றும் ஆதாயம் பெற்றார்கள். இன்றும் பெற்று வருகிறார்கள். நாளையும் பெறுவார்கள். தலைமை மட்டும் மாறி இருக்கும். ஆட்சி நிரந்தரமானது அன்று. ஆனால் சுரண்டல் நிரந்தனமானது. விழிப்புணர்வு இல்லாதவரை இந்த நிலை மாறாது. மக்களின் மனச்சாடசிக்கும் இது தெரியும்.

16. தமிழ்நாட்டில் குடிப்போர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி இருக்கலாம். இவர்களில் கூடுதலான விலை கொண்ட வெளிநாட்டு மதுவை வாங்கிக் குடிக்கும் பொருளாதாரத் தகுதி 25 லட்சம் பேர்களுக்கு மட்டுமே இருக்கும். மீதி 75 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கும் கீழாக வாழும் எளிய மக்களே ஆவார்கள். இவர்கள் குடிப்பதற்கு செலவிட்டது போக குட்ம்பச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாத தால் பல குடும்பங்கள் சொல்லண்ணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. இதன் காரணமாக இன்றைய நடைமுறையில் பரவலாகக் குடும்ப
ப் பெண்களும் கூடக் கள் வரவுக்கு எதிர்புத் தெரிவிக்க மாட்டார்.

17. இன்று தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளிலெல்லாம் அயல் நாட்டு மதுக்கடைகளைத் திறந்து ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அரசே நேரடியான சுரண்டலில் புகுந்து விளையாடுகிறது. மக்கள் ஆடுகளாக இருந்துவிடக்கூடாது. ஆட்சியாளர்கள் ஓநாய்களாக மாறிவிடக்கூடாது.

18. கள்ளுக்கு அனுமதி இருந்தால் கிராமப் பணம் வெளியே போகாது. சிலருடைய கைகளில் செல்வம் குவிவது குறையும். கிராமப் பொருளாதாரம் மேம்படும்.

19. தென்னை பனை விவசாயிகளின் வருமானம் ஒரளவு கூடும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புப் பெருகும். களையாகக்கருதி வேகமாக வெட்டப்பட்டு வரும் ‘காமதேனு’ ‘கற்பகத்தரு’ என்று சொல்லப்பட்ட பனை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் ’ஈரியோ பைட்’ பூச்சி தாக்குதலில் இருந்து தப்பும், மொத்தத்தில் தென்னை, பனை மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கையாகும் இது.

இது போன்று மேலும் பல கருத்துக்கள் வெளியிட்டார்கள். நன்றி விவசாய அணிக்கு.