Thursday, March 8, 2012
நட்சத்திர மரங்கள்.
நட்சத்திர மரங்கள்.
1. அஸ்வினி-----------------------------------எட்டி.
2. பரணி ----------------------------------- நெல்லி மரம்.
3. கார்த்திகை ------------------------------அத்திமரம்.
4. ரோகினி-----------------------------------நாவல் மரம்
5. மிருகசீரிடம்-------------------------------கரங்காலி.
6. திருவாதிரை--------------------சிவப்புகரிங்காலி.
7. புனர்பூசம்----------------------------------மூங்கில்.
8. பூசம்------------------------------------------அரசு.
9. ஆயில்யம்---------------------------------புன்னை.
10. மகம்-----------------------------------------ஆலமரம்.
11. பூரம்-------------------------------------------புரசமரம்.
12. உத்திரம்-----------------------------------இலந்தை.
13. அஸ்தம்-----------------------------------வில்வம்.
14. சுவாதி--------------------------------------மருதமரம்.
15. சித்திரை------------------------------------வில்வம்.
16. விசாகம்----------------------------------வினாமரம்.
17. அனுசம்-------------------------------------மகிழமரம்.
18. கேட்டை------------------------------------பராய்மரம்.
19. மூலம்---------------------------------------மராமரம்.
20. பூராடம்------------------------------------வஞ்சிமரம்.
21. உத்திராடம்--------------------------------பலாமரம்.
22. திருவோணம்-----------------------------எருக்கு.
23. அவிட்டம்------------------------------வன்னிமரம்.
24. சதயம்-------------------------------------கடம்புமரம்.
25. பூரட்டாதி------------------------------------மாமரம்.
26. உத்திரட்டாதி------------------------------வேம்பு.
27. ரேவதி-----------------------------------------இலுப்பை.
-------------------------------------------------------------------(தொடரும்)
Saturday, February 25, 2012
Thursday, February 23, 2012
Tuesday, February 21, 2012
மரம் வளர்போர் விழா 2012.
| IFGTB. |
மரம் வளர்ப்போர் விழா 2012.
இடம்:---------------; வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
--------------------------நிறுவனம்,
----------------------- கவுளி பிரவுன் ரோடு,
------------------------ ஆர்.எஸ்.புரம்,
------------------------ கோவை-641 002.
நாள் :----------------- 23-2-2012 ம், 24-2-2012 இரண்டு
-------------------------- நாட்கள்.
நேரம் :-------------- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
--------------------------கருத்தரங்குகள்
------------------------ தொடர்ந்து நடைபெரும்.
விவசாய அன்பர்களும், கோவையைப் பசுமையாக்கிக் கொண்டிருக்கும் சிறுதுளி பெருமக்களும், பசும்புலரி அன்பர்களும், பசுமை அமைப்புக்களும், கோவை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க அன்பர்களும் திரளாக வந்து இந்த ஆண்டின் மரம் வளர்ப்போர் விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடம் வேண்டிக் கொள்கிறோம். அனுமதி இலவசம்.
வெளியூர் அன்பர்களுக்குத் தங்கும் இட வசதி செய்து தரப்படும்.
மேலும் தொடர்புக்கு; 0422-2484100,2484171, 2484116 மற்றும்-9600333554.
---------------------------------------------------(தொடரும்)
Monday, November 21, 2011
மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி.
| TNAU. |
மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி.
தமிழ்நாடு வேளாண் பல்பலையில் மசாலாபொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி, வரும் 23,24ம் தேதிகளில் நடக்கிறது.
மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் மற்றும் பலவகை காய்கறி ஊறுகாய் தயாரிப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
நேரில் வர இயலாதவர்கள் பயிற்சிக் கட்டணத்தை வரைவோலை மூலம் முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி எனும் பெயரில், கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர் மற்றும், தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-641003 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள கடைசி நாள் நவ.22. கூடுதல் தகவல் பெற 0422-6611268 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------(தொடரும்)
Friday, November 18, 2011
தொழில் சார் மரம் வளர்ப்பு பயிலரங்கம்
| Dr..பார்த்தீபன். |
தொழில் சார் மரம் வளர்ப்பு பயிலரங்கம்.
மரம் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு தொழில்நுட்பம் குறித்து, ஒரு நாள் இலவச பயிலரங்கம். வரும் 29 ம் தேதி மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கிறது.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்த, தொழிற்சாலைக்குத் தேவையான மரங்கள், வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டு தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி முகாமை நடத்துகிறது. பயிற்சி முகாமில் மரக்கூழ் காகித மரங்கள் மற்றும் தீக்குச்சி மரங்கள் வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் வனக்கல்லூரி விஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளது.
இதில் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் பயிரிடப்படும் மரங்கள் வளர்ப்பு முறைகள், மண், உரம், நீர் மேலாண்மை, பூச்சி, நோய் கட்டுப்பாடு மற்றும் மரக் கழிவுகளில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படும். மரம் சார்ந்த ஒப்பந்த முறை சாகுபடி, மரம் சார்ந்த சந்தை விலை, இணையதள பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் தரப்படும்.
வரும் 29 ம் தேதி நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பெயரை, முதல்வர், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் என்ற முகவரிக்கு தபாலில், திட்ட அலுவலர் பார்த்திபனை போனில் 04254-271505, 222010, 94435 05844 ஆகிய எண்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, வனக்கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.
---------------------------------------------------------------------------(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)



