Monday, October 12, 2015

1863, பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

1,863 பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

அரசு துறைகளில் 'குரூப்-2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களைக்கு, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்  பாலசுப்ரமணியன் கூறியதாவது.

டி.என்.பி.எஸ். சி குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10 க்கு மேற்பட்ட துறைகளில் , 1863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27 ல் தேர்வு நடக்கும்.

தேர்வு எழுத விரும்புவோர், 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே, நவ., 11 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, நவ., 13 க்குள் செலுத்தலாம். தமிழக முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும்.

பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வுக்கான தகுதி விவரங்களை,http://www.tnpscexams.net/  மற்றும்  http://www.tnpscexams.in/  என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- கோவை தினமலர் நாள் 13-10-2015.


No comments: