Thursday, June 14, 2012

உணவுப் பொருள் தயாரிப்பு பயிற்சி





உணவுப் பொருள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில்,, பப்பாளி மற்றும் தக்காளி மூலம், உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்த, இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிக்கை-
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பப்பாளி மற்றும் தக்காளி கொண்டு, உணவு தயாரிப்பது குறித்த , பயிற்சி முகாம், வரும் 18,19 ம் தேதி நடக்கிறது. கலவை பழரசபானங்கள், ஜாம் மற்றும் ஜெல்லி, சட்னி. சாஸ். ஊறுகனி (கேணடி) சீஸ் மற்றும் சூப், தொழில் துவங்க உரிமம் பெற்றுக் கொள்ளும் வழி முறைகள், வங்கிக் கடன் பெறும் முறைகள், பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய தகவல்கள் தெரிவிக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் 1000 ரூபாய் மட்டும் செலுத்தி, பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம், நேரில் பதிவு செய்ய முடியாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை, வரை ஓலை மூலம் முதன்மையர், வேளாண்மை இன்ஜினியரிங் கல்லூரி என்ற பெயரில், கோவையிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பெரத்தக்க வகையில்  எடுக்க வேண்டும். பின், பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம், தமிழ் நாடு வேளாண் பல்கலை, கோவை 641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும.

பதிவு செய்ய, இறுதி நாள், வரும் 18 ம்ம் தேதி. விபரங்களுக்கு, 0422 66611340, 66112268 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நன்றி-தினமலர்

------------------------------------------(தொடரும்)