Wednesday, June 17, 2009

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.


ஒவ்வொரு மாதமும் 6 ந்தேதி துணை வன பாதுகாவலர் அலுவலகம், மரபியல் கோட்டம், பாரதிபார்க் ரோடு, கோவை 641043 வழாகத்திலும், 16 ந்தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை 641003 தொழில்நுட்ப பூங்கா எண்-4 ன் வழாகத்திலும் தொடர்ந்து கருத்தரங்குகளை வனத்துறை மற்றும் விரிவாக்க கல்வி இயக்கம், த.நா.வே.ப. இவர்களுடன் இணைந்து நடத்தி வருகின்றது.

இந்த மாதம் 6 ந்தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து திரு எஸ்.கே. சண்முகசுந்தரம், ஐ.எப்.எஸ்., துணைவனப்பாதுகாவலர் அவர்கள் சந்தன மர சாகுபடி பற்றியும் அதன் சட்ட திட்டங்களைப் பற்றி விபரமாக விளக்கம் அளித்தார். சந்தன மரம் வெட்டும் போது 20 சதம் அரசுக்கும், 80 சதம் மர சொந்தக்காரருக்கும் அளிக்கப்படும். ஆனால் வரும் காலத்தில் சட்டங்கள் மேலும் தளரலாம். ஆஸ்திரேலியாவில் ஒரு சந்தன மரத்திற்கு நான்கு பக்கத்திலும் அகத்தி மரம் வளர்க்கிறார்கள். 13 ஆண்டுகளில் முதிர்வடையும் மரங்களை வளர்க்கிறார்கள். இது போன்று மேலும் பல தகவல்களைச் சொன்னார்.

அடுத்து திரு.ஏ.ஜொசப் ரெக்ஸின், பி.எஸ்சி., இயக்குனர் TIST Tree Planting India (P) Ltd., அவர்கள் கார்பன் வணிகம் பற்றி விளக்கமாகச் சொன்னார். பின் திரு. மு.அ.அப்பன், நிறுவனர் இயற்கை வாழ்வு மையம், குலசேகரப்பட்டினம், தூத்துக் குடி அவர்கள் ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்ற இயற்கை உணவு பற்றி சிறப்பான விளக்கம் அளித்தார். அவரே உதாரணமாக சமைக்காத உணவு மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். பின் சித்த மருத்துவர் திரு.திருமலைசாமி அவர்கள் ஓரிதழ் தாமரை பற்றி விளக்கம் அளித்து அதன் மருத்துவ குணங்களை எடுத்துறைத்தார். மதிய உணவு சமைக்காத உணவு வகைகள்.
அவுல், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பேரிட்சை, தேங்காய், வெள்ளரி, கேரட் இயற்கை சூப் முதலியன மட்டும் கொடுக்கப் பட்டது.

பிற்பகல் வைத்தியர் நாதாநந்த சுவாமிகள் மூலிகைகள் எவ்வாறு வைத்தியத்தில் பயன் படுகின்றன என்று விளக்கங்கள் அளித்தார். பின் சித்த மருந்து தயாரிக்கும் தென் மாவட்ட அம்மையாரும் விளக்கத்துடன் மருந்துகளை விற்பனை செய்தார். அத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.

மூலிகை கருத்தரங்கு.
சென்ற 16-06-2009 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விரிவாக்க கல்வி இயக்கம் உதவியுடன் இச்சங்கம் மூலிகை கருத்தரங்கு தொழில் நுட்ப பூங்கா எண்-4 ல் காலை பத்து மணிக்கு மேல் தொடங்கிற்று. இச்சங்க தலைவர் தேவராஜன் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இலவசமா ஏற்பாடு செய்திருந்த பண்ணைச் சுற்றுலா பாண்டிச்சேரி ஏரோவில் சென்று வந்தது (13,14, 15-6-2009) பற்றி அனுபவங்களைச் சொன்னார். அளவாக 20 பேர் மட்டுமே சென்று வந்தனர். பின் திரு.கணேசன், திருநெல்வேலி, மூலிகை ஏற்றுமதியாளர் அவர்கள் திருநெல்வேலி சென்னா, நித்தியகல்யணி, துளசி, சர்கரைத் துளசி, கண்வெளிக்கழங்கு, அஸ்வகந்தா, ஆர்கானிக் மஞ்சள் போன்றவைப் பற்றிக் கூறி அவை ஆர்கானிக்கில் விளைந்ததற்கான சான்றும் தேவை என்றார். ஒப்பந்த முறையில் சாகுபடிக்கு ஏற்றுக் கொள்வதாக க்கூறினார். பின் அதற்கு முனைவர் கே.இராஜாமணி பிஎச்டி, துறைத்தலைவர் வாசனை பயிர் மற்றும் மலைத்தோட்டத் துறை, TNAU., அவர்கள் அந்த மூலிகைகள் குறித்து விளக்கம் அளித்து, அதை விளைவிப்பது பற்றிக் கூறி, ஆர்கானிக் சான்று பெருவது பற்றிக் கூறினார். கே.ஸ்ரீதர்புதூர் அமுதம் இயற்கை உணவகம் அமைத்திருப்பது பற்றிக் கூறி அவர் இயற்கை சூப் அளித்தார். திருமதி கண்ணம்மாள் ஜெகதீசன் அவர்கள் அஸ்வகந்தா சூப் மற்றும் டீ கொடுத்தார். மதிய உணவுக்குப்பின் சுற்றுலா சென்றவர்கள் பயனடைந்ததைப் பற்றிக் கூறினார்கள். டாக்டர் சித்திரா அவர்கள் பல்கலைகழகத்தில் மூலிகைக் குடி நீர் தயார் செய்து வெற்றியடைந்தது பற்றிக் கூறினார். பதிமுகம் துண்டுப்பவுடர் .5 கிராம் திப்பிலி காய், வேர் பவுடர் .5 கிராம் ஒரு லிட்டர் குடி நீரில் அரை மணி நேரம் வைத்திருந்தால் நல்ல குடிநீர் தயார் என்று கூறினார் விலை மிகவும் குறைவு. பின் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. இது 4 வது கருத்தாய்வுக் கூட்டம்.
-----------------------------------------------(தொடரும்)