Friday, August 7, 2009

கோலியஸ்.


முன்னுறை -: கோலியஸ் என்பது ஒரு மருந்துப் பயிர். இதை மருந்துக்கூர்கன் என்று தமிழில் சொல்வர். கோலியஸ் ஓமவள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைச் செடி. இது நெருக்கமான இலைகளில் தடிமனான இலைகளுடன் சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இச்செடியானது நுனிக்கொழுந்தைக் கிள்ளி நட்டு வளர்க்கப்படுவதால் ஆணிவேர் உண்டாவதில்லை. அடிக்கணுவிலிருந்து பக்க வேர்களே உண்டாகின்றன. பழுப்பு நிற வேர்களிலிருந்து ஒல்லியான கேரட் வடிவத்தில் 1 அடி நீளம் வரை கிழங்குகள் உருவாகின்றன. ஒரு செடியிலிருந்து அரைக் கிலோ முதல் ஒரு கிலோ வரை பச்சைக் கிழங்குகள் கிடைக்கின்றன. இதன் மருத்துவ குணம் -இரத்த அழுத்தத்தை சீர் செய்து இதயப் பழுவைக் குறைக்கின்றன. இது ஆஸ்த்மா, புற்று நோய், கிளாக்கோமா நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் முக்கிய மூலப்பொருளாகச் செயல்படுகிறது. தற்போது ஒரு கிலோ பச்சைக் கிழங்கின் விலை ரூ.10-00 க்கு மேல் விற்கப்படுகிறது. இதன் சாகுமடி குறித்துக் கீழே காண்போம்.

மண்வளம் -: கோலியஸ் கிழங்குச் செடிவளர பொலபொலப் பான மண் அவசியம். பொலபொலப்பான செம்மண், வண்டல்மண், வண்டல் சேர்ந்த குறுமண், சத்து நிறைந்த சரளமண் ஏற்றவை. தண்ணீர் தேங்கும் கரிசல் பூமி, களி நிலங்கள் வேண்டாம். களர் மண்ணும் கூடாது. கோலியஸ் வேர்கள் மெல்லியானவை தண்ணீர் தேங்கினால் தாங்காது. ஆகவே வடிகால் வசதியுள்ள நிலமாக வேண்டும். நீர் வடியாத இடத்திலோ நீரைப்பிடித்துக் கொள்ளும் சொதசொதப்பான மண்ணிலோ நட்டால் இளம் வேர்கள் மூச்சிவிட முடியாமல் அழுகிப்போகும். செடி வாடிப்போகும்.

கோலியஸ் கடல் மட்டத்திற்கு 3000 அடி வரை உள்ள இடங்களில் வளர்கிறது. சூரிய வெளிச்சம் நன்கு படக்கூடிய காற்றுள்ள மலைச் சரிவுகளிலும் நடலாம். மான வாரியாகப் பயிரிட்டால் பயிர்காலமான ஆறு மாத்ததிற்குள் சுமார் 100-120 செ.மீ. மழை தேவை. அதனைப் பிடித்துவைத் திருக்கக் கூடிய மண்ணும் தேவை. நிழல்கள் உள்ள இடத்தில் இதை நடக்கூடாது.

மண்ணின் கார அமில நிலை பிச் 8.00 - 7.00 க்குள் உள்ள இடங்களிங் இதன் மகசூல் திறன் அதிகமாகக்

காணப்படுகிறது. அதாவது கிழங்குகள் நன்கு பருக்கின்றன. கிழங்ககளின் எடையும் அதிகமாக இருக்கிறது. கத்திரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்களிலும் வாழையிலும் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம். ஆகவே அப்பயிர்களிக்குப் பின்பு உடநடியாக கோலியஸ் பயிரிட வேண்டாம். நிலத்தை உழுது நன்கு காயவிட்டு, நிறைய எரு அடித்து கலந்து விட்டு, நூற்புழுத் தடுக்கும் பயிர்களைப் பயிரிட்டு, அதற்கடுத்து கோலியஸ் பயிரிடுவதே பாதுகாப்பானது. சோளத்திற்குப் பின்பு கோலியஸ் பயிரிட்டாலும் மஞ்சள் பயிரிட்டாலும், கிழங்கு மகசூல் அதிகரிக்கிறது என்பது உண்மை.

நிலத்தை உழுது எரு இட்டுப் பண்படுத்தல் :- நிலத்தை புழுதிபட உழவு செய்யவும். நடவுக்கு ஒரு மாத காலத்திற்கு மூன்பாகவே ஏக்கருக்கு 7 டன் தொழு எருவைச் சிதறி விட்டு உழவு செய்யவும். ஈரமான மண்ணில் நுண்ணுயிர்கள் எருவைச் சாப்பிட்டுப் பெருகும். அந்நிலத்தில் பயிர்கள் நட்டவுடன் துளிர்க்கும். துரிதமாய் வளரும். களை விதைகள் முழைத்திருந்தால் அதனையும் உழுது காய விட்டு பார் போட்டால் அப்புறம் அதிக களை முளைக்காது. அக்களைச் செடிகளும் மண்ணோடு மக்கி நுண்ணூட்டங்களை பயிருக்குக் கொடுக்கும்.

பாத்திகள் அமைத்தல் -: கோலியஸ் மண்ணுக்குக் கீழ்தான் கிழங்குகள் உண்டாகின்றன. மண் இருகாமல் இருக்க 15 அடிக்கு 30 அடி நீளவாக்கில் 2 அடி இடைவெளியில் கலப்பையிலோ, டிராக்டரினாலோ மண்வெட்டியாலே பார்கள் அமைக்க வேண்டும்.

நடவு இடைவெளி -: வளமான எருவிடாத நிலங்களுக்கு பாருக்குப்பார் 2 அடி X செடிக்குச்செடி 1.5 அடி. அவ்வாறு ஏக்கருக்கு 14500 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த எருவிட்ட நிலங்களிக்கு பார் 2 அடி X செடிக்கு செடி 1.25 அவ்வாறு ஒரு ஏக்கருக்கு 17000 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த சரளை மண்ணுக்கு பாருக்குப் பார் 1.75 X செடிக்குச்செடி 1.25 அடி ஆக ஒரு ஏக்கருக்கு 20,000 கன்றுகள் தேவைப்படும்.

நடவுக்கு ஏற்ற கொழுந்து -: முற்றிய பின் கொழுந்து இளம் பச்சை நிறத்திலிருந்து கரும் பச்சை நிறத்திற்கு மாறி தண்டு பகுதி கெட்டியாயிருக்கும். அதன் நுனிக் கொழுந்தை சுமார் 10 செ.மீ.நீளம் விட்டு 3 - 4 கணுக்கள் இருக்கும். அந்தக் கணுவில் ஜோடி இலைகள் இருக்கும். அதை வெட்டி எடுக்கும் போது புது பிளேடால் வெட்டி சேகரிக்க வேண்டும்.

நீர் பாச்சல் -: பாத்திப் பார்களில் தண்ணீர் விட்டு கொழுந்துகளை தகுந்த இடைவெளியில் நட வேண்டும். பின் 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாச்ச வேண்டும். 40 நாட்களி வரை வாரம் ஒரு தடவை பாசனம், 40 நாட்களிக்குப்பின் 10 நாட்களுக்கு ஒரு தடவை, அறுவடைக்கு 10 நாள இருக்கும் போதே பாசனத்தை நிறுத்த வேண்டும். செடி வாடும் போது நீர் பாச்ச வேண்டும்.

களையெடுத்தல் -: கோலியஸ் நடவு நட்ட 15 - 20 நாடகளில் முதல் களையை வேர்களுக்குப் படாமல் சுரண்டி எடுக்கவேண்டும். தாமதித்தால் கிளை வேர்கள் படர்ந்து வெட்டுப் பட நேரிடும். இரண்டாவது களை கைக்களை சிறந்தது. கதிர் அரிவாளால் தரைமட்டத்தில் அறுத்து எடுப்பது நன்று. 40 நாட்களுக்குள் இரண்டாம் களை எடுத்து மண் அணைத்து விட வேண்டும். தாமதித்தால் வேர்கள் படர்ந்து விடும். 50 நாட்களுக்கு மேலாகி விட்டால் களை எடுக்கக் கூடாது. 60 நாடகளுக்கு மேல் அனாவசியமாக பாத்திக்குள் நடக்கக் கூடாது.

உரம் இடல் -: நட்ட 50 நாளிலும், 100 வது நாளிலும், 150 வது நாளிலும் பார் மேட்டில் இரண்டு வரிசைக்கு நடுவே உரம் இட வேண்டும். உரங்களை நீரில் கரைத்து விடும் முறை. 200 லிட்டர் டிரமில் வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ, கடலைப் புண்ணாக்கு 10 கிலோ மற்றும் டெஎபி 10 கிலோ, 3-4 நாட்கள் ஊரவைத்து பாசன நீறுடன் கலந்து பாச்ச வேண்டும். நுண்ணுயிர் உரம் 50 நாட்களிக்குள் இட வேண்டும்.

நோய்தாக்குதல் -: வேர்முடிச்சு நூற்புழு வேர்களில் உள்ள செல்களைத் தாக்குவதால் வேர் அழுகல் நோய் காரணிகள் புகுந்து தாக்கு கின்றன. பார்களில் செண்டு மல்லி, கொத்து மல்லி பயிரிட்டால் அதன் வேரோடு உரசிச் செல்லும் நீர் பாய்ந்தாலே நூற்புழு கட்டுப் படுத்தலாம். வேர் அழுகல் நோயிக்கு ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோ டெர்மாவிர்டியுடன் 200 கிலோ மண்புழு உரத்தையும் கலந்து தூருக்குத்தூர் வைத்து மண் அணைத்து 25-50 நாட்களில் 2 தடவையிட்டு நீர் பாச்சினால் கட்டுப்படும்.

அறுவடை -: கோலியஸ் கொழுந்து நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பே நீர்பாச்சல் நிறுத்த வேண்டும். தரைக்கு மேல் உள்ள தண்டு பகுதிகளை அறுத்து பாத்திக்கு வெளியே பொண்டு வந்து விட வேண்டும். ஆட்களை வைத்து மண் வெட்டியால் வெட்டி பொறுக்கு சேகரிக்க வேண்டும். மகசூல் ஒரு ஏக்கருக்கு 7-10 டன் கிடைக்க வாய்ப் புள்ளது. தற்போது பச்சைக் கிழங்கின் விலை ரூபாய் 10-00 க்குப் போய்கிறது. இது பயிரிட மான்யமும் உண்டு ஒப்பந்த சாகுபடியும் உண்டு.

ஒப்பந்த சாகுபடி முறையில் கோலியஸ் மூலிகைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த நிறுவனம்-

எம்.ஜி.பி.மார்கெட்டிங் சென்டர்ஸ்,

469, மகாலச்சுமி காம்ளெக்ஸ்,

அண்ணாபுரம்,

5 ரோடு, சேலம்-4.

போன்-0427-2447143.

செல்-9842717201 அலுவலகம்.

ஜி.பழனிவேல் பி.எஸ்.சி.,

செல்- 98427 44232.

மேலே உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டுகிறேன்.

--------------------------------------------------(தொடரும்)