Thursday, March 19, 2009

மரம் ஒரு தகவல்


தொழிற்சாலைக்கு மரம் தேவையா?

“மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையம், வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வேளைண்மை ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்து, ‘தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேளாண் மரங்கள் வளர்ப்பு’ பற்றி வனக்கல்லூரியில் வரும் 20, 21 தேதிகளில் இரண்டு நாள் இலவசப் பயிலரங்கம் நடத்துகிறது. இதில் மரக்கூழ்காகித, தீக்குச்சி மரங்கள் வளர்ப்பு, அதன் பயன்கள் மற்றும் பயறிசிகள், இக்கல்லூரி வஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் மரங்கள் வளர்ப்பு முறை, உரங்கள், நீர் நிர்வாகம், மண்ணின் தன்மை, பூச்சி நோய் கட்டுப்படுத்தல் பற்றி பயிற்சி அளிக்கப்படுகின்றன. மேலும் மரம் சார்ந்த ஒப்பந்த முறை சாகுபடி பற்றியும், சந்தை விலைபற்றியும் விளக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, கரூர் நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகளிக்கு, இத்திட்டத்தின் மூலம் மாதிரிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டங்களும் தெரியப்படுத்தப்படும்.

எனவே, இப்பயிற்ணி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் பெயரை வனக்கல்லூரி முதல்வரையோ திட்ட அலுவலர் டாக்டர் திரு பார்த்ததூபன் அவர்களையோ தொல்பேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முனைவர் டாக்டர் திரு பார்த்தீபன், திட்ட அலுவலர் மற்றும் இணைப் பேராசிரியர் ( வனவியல்) மர இனப்பெருக்கவியல் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301, போன் 04254 -222398,222010, மொபைல் போன்: 94435 05844 என்ற விலாசத்திற்கு தொடர்பு கொள்ளவும்.”

இது விவசாய நண்பர்களுக்கான தகவல் அறிவிப்பு.

Friday, March 13, 2009

தகவல் மையம்.

மருந்துப்பயிர்கள் தகவல் தொடர்பு மையம்.

நேர்முகப்பயிற்சி.
தமிழ் நாட்டில் உள்ள மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு நேர்முகப் பயிற்சி அளித்தல்.

மருந்து பயிர்கள் சாகுபடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
மருந்துப் பயிர்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல்.

ஒப்பந்த சாகுபடியை ஊக்குவித்தல்.

மருந்துப்பயிர்களில் ஒப்பந்த சாகுபடி முறையை ஊக்குவிக்க, மூலிகைப் பயிர்கள் பயிரிடுபவர்கள், விற்பனை மற்றும் கொள்முதல் செய்பவர்கள், பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களுக்கிடையேயான நேர்முக பரிவர்த்தனையை ஏற்படுத்துதல்.

மூலிகை சாகுபடி கணக்கீடு.

தமிழ் நாட்டில் மருந்துப் பயிர்கள் வகை வாரியாக சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியை கணக்கீடு செய்தல்.

மூலிகை சாகுபடி மேம்பாடு.

மருந்துப்பயிர்கள் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டு வரும் தன்னார்வு அமைப்புகள், விவசாய குழுமங்கள், மூலிகைப் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவைகளை ஒருங்கிணைந்து மூலிகைப் பயிர்களின் சாகுபடியை மேம்படுத்துதல்.

தகவல் தொடர்பு மையம்.

மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகளுக்கு மருந்துப்பயிர்கள் சம்பந்தமான சந்தேகங்களை நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் நிவர்த்தி செய்தல்.

வெளியீடுகள்.

மருந்துப்பயிர்கள் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் குருந்தகடுகள் ஆகியவற்றை வெளியிடுதல்.
--------------------------------------------------------------

விருவாக்க கல்வி இயக்கம்.
தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக் கழகம்.
கோயமுத்தூர் -641003.
போன்-0422 6470425, 6611365, 6611284.
----------------------------------------------------------------------
-----------------------------------------(விவசாயம் தொடரும்)

Tuesday, March 3, 2009

மரம் வளர்ப்போர் விழா.



இடம்: வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம்,
கவுளி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை-2.

நிகழ்ச்சி நிரல்
7-3-2009 சனிக்கிழமை காலை 9 மணி.
மரம் குறித்த தகவல் மையம் திறப்பு விழா.
திரு.ஜெகதீஷ் கிஷ்வான், டைரக்டர் ஜெனரல் ICFRE புதுடெல்லி.
காலை 11.15 மரம் வளர்ப்போர் விழா துவக்கம்.
தலைமை-முனைவர் N. கிருஷ்ணகுமார், இயக்குனர் IFGTB கோவை.

புத்தகங்கள்வெளியீடு: முனைவர் C.K.ஸ்ரீதரன் IFS
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சென்னை.

11.45 - 13.45 வரை கருத்தரங்கு - 1
‘தொழிலகங்களுக்கு தேவையான மரப்பயிர்கள் வளர்ப்பு முறைகளும் மேலாண்மையும்’

தலைமை: முனைவர். குமாரவேலு IFS
முன்னாள் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சென்னை.

பகல் 14.00 மணி உணவு இடைவேளை பின்
கருத்தரங்கு-2

‘ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் பயிர் நோய் மேலாண்மை’
தலைமை-திரு.ஜாபரி IFS, இயக்குனர், தமிழ்நாடு வன அகாடமி.
மாலை 17.30 க்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவு.


8-3-2009 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 பகல் 12.00 வரை.
கருத்தரங்கு-3.
‘தொழில்களுக்கும் தொழிலகங்களுக்கும் தேவையான பண்ணைக் காடுகள்’
தலைமை: திரு.V.இருளாண்டி IFS தலைமை வன பாதுகாவலர், வன விரிவாக்கம், சென்னை.

மதியம் 12.30 - 13.30 வரை கருத்தரங்கு-4
‘தரமான நாற்றுகள் உற்பத்திக்குத் தேவையான விதை நேர்த்தியும் நாற்றுப் பண்ணை தொழில் நுட்பமும்’

தலைமை: முனைவர் N. கிருஷ்ணகுமார், IFS. இயக்குனர், IFGTB.

13.30 - 14.30 வரை மதிய உணவு இடைவேளை.

பகல் 14.00 முதல் 15.45 வரை கருத்தரங்கு-5.
‘பண்ணைகாடு வளர்ப்பில் விவசாயிகளின் அனுபவங்கள்’
தலைமை: திரு. K.சிதம்பரம் தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி)
திரு. K.தேவராஜன், தலைவர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘விவசாயிகளின் அனுபவங்கள்.’
திரு.மது இராமகிருஷ்ணன், பொருளாளர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘வேளாண் பண்ணைக்காடுகள்’
திரு.நாராயணசுவாமி, கொளைகை பரப்புச் செயலாளர், மரம் வளர்ப்போர் சங்கம். கோவை.
‘பண்ணை முறையில் புதிய நிர்வாக வாய்ப்புகள்’ பற்றிப் பேசுவார்கள்
17.00 மணிக்கு நிறைவு விழா.
அனைத்து விவசாயிகளையும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.