Showing posts with label கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.. Show all posts
Showing posts with label கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.. Show all posts

Friday, August 28, 2015

கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.



கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.

1,101  காலி பணியிடம் நிரப்ப முடிவு.

கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர், கால்நட் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது, 725 கால்நடை பராமரிப்பு உதவியாளர், 294 கால்நடை ஆய்வாளர் பயிற்சி,  36 அலுவலக உதவியாளர், 24 கதிரியக்கர் (ரேடியோகிராபர்} உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

 மொத்தம், 1,101 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால்,
இதற்கு, 18 முதல் 30 வயதுக்கு உடபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கால்தடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ண்ணப்பிக்காலம். கதிரியக்கர், ஆய்வக உடனாள், ஆய்வுக்கூட தொழில்நுட்பர், மின்னாளர் போன்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பயிற்சி அனுபவமும், கட்டாயமாக தேவைப்படுகிறது. மேலும், கால்நடை ஆய்வாளர் பயிற்சி பணிக்கு விண்ணபிக்க பிளஸ் 2  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியார் மற்றும் கால்நடைப்பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையிலும், மற்ற பணிகளுக்கு எழுத்து தேரவு நடத்தப்பட்டு அதிக மதிபெண் பெறுபவரகள் இனச்சுழற்சி அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்த்திலுள்ள மண்டல இணைய இயக்குனர் அலுவலகம் மற்றும் கோட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில், 10 ரூபாய் செலுத்தி நேரிலோ, தபால் மூலமாகவோ, செப்., 15 வரை பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tn.gov.in    என்ற இணையதளத்தில் கட்டணமின்றி விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய விண்ணப்பங்களை இயக்குனர், கால்நட் பராமரிப்பு (ம)  மருத்துவ பணிகள், மத்திய அலுவலக கட்டிடம், பகுதி 2, டி.எம், எஸ். வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நன்றி கோவை தினமலர் நாள் 28-08-2015.