Sunday, December 14, 2008

தேசிய மூங்கில் இயக்கம்.




தேசிய மூங்கில் இயக்கம்.
( National Bamboo Mission )

தமிழ் நாடு அரசு, தோட்டக்கலைத்துறை, உதவி இயக்குநர் காரமடை அவர்களால் 12-12-2008 அன்று ஒரு நாள் கருத்தரங்கு மூங்கில் சாகுபடி பற்றி மேட்டுப் பாளையத்தில் நடைபெற்றது. அதில் அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘தேசிய மூங்கில் இயக்கம்’ (National Bamboo Mission) பற்றி விளக்கியிருந்தார். அதன் விபரம் பின்வருமாறு.

இந்தியாவில் நிலவி வரும் ஒழுங்கற்ற சந்தை நிலவரத்தையும் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை (Value Added Products) தயாறிக்கும் தொழில் நுட்ப பற்றாக் குறையினையும் நிவர்த்தி செயவதற்காக இந்திய திட்டக் குழுவின் பரிந்துறையின் படி தேசிய மூங்கில் குழு உருவாக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசால் ரூபாய் 568.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நோக்கம் :-
தகுதியான வனமல்லாத பகுதிகளில் அதிக அளவில் மூங்கில் காடுகளை உருவாக்குதல்.

சரியான விற்பனை சந்தைகளை உருவாக்குதல் :-
மூங்கில் உற்பத்தியாளர்களை ஒன்று சேர்த்து மூங்கில் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அளவை அதிகப்படுத்துதல்.

கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் மூங்கில் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாயப்பை அதிகப்படுத்துதல்.

மூங்கில் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.
மூங்கில் 47 பங்கு கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து 35 பங்கு ஆக்ஸிஜனை வெளி விடுகிறது. ஒரு வருடத்தில் ஒரு ஏக்கர் மூங்கில் 12.7 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்கிறது.

மூங்கில் காடுகள் 5-6 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை மகசூலைத் தருகின்றன. இதனால் பொருளாதார ரீதியாக மற்ற மரங்களை விட அதிக வருமானத்தை மிக க்குறைந்த காலத்திலேயே மூங்கில் ஈட்டித் தருகின்றது. சீரிய சாகுபடி முறைகளை மேற்கொண்டு மூங்கில் சாகுபடி செய்தால் 6 வது ஆண்டில் இருந்து வருடந்தோறும் ஏக்கருக்கு ரூ.20,000 மிதல் ரூ.30,000 வரை லாபம் ஈட்டலாம்.

தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் அரசு வழங்கும் உதவிகள் :-

1. வனமல்லாத பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் ஒரு எக்டர் மூங்கில் சாகுபடி செய்ய ஆகும் செலவில் 50 சத மானியத்தை, முதல் வருடம் ரூ.4000-00 ம் இரண்டாம் ஒருடம் ரூ.4000-00 என மொத்தம் ரூ.8000-00 மானியமாக வழங்கப்படுகிறது. இரண்டாம் வருடம் 90 சத செடிகள் உயிருடன் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 4 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

2. மூங்கில் பயிருக்கு சொட்டு நீர் பாசனம் ( Drip Irrigation System ) அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.20,000-00 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 4 எக்டர் வரை சொட்டு நீர் பாசனம் அமைக்க இம்மானியம் வழங்கப்படுகிறது.

3. மூங்கில் சாகுபடி குறித்த பயிற்சிகள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்களைக்கொண்டு வழங்கப்படுகிறது.

4. மூங்கில் சாகுபடி செய்யும் விவசாயிகளைக்கு ஒருகிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் எக்டருக்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.200-00 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

5. செயல் விளக்க மூங்கில் தோட்டம்- அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 0.5 எக்டர் செயல் விளக்க மூங்கில் தோட்டம் அமைக்க ரூ.5000-00 மானியம் வழங்ப்படுகிறது.

இதைப்பற்றி பயிருட ஆர்வம் உள்ளவர்கள் அந்தந்த தோட்டக் கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

--------------------------------( மூங்கில் தொடரும் )

No comments: