Monday, September 8, 2008

மூலிகையும், மரமும் வளர்ப்பு


நான் 6-3-2004 முதல் கோவை வன மரபியல் கோட்ட அலுவலகம் மற்றும் வன விரிவாக்க மையத்தின் மாதாந்திர கருத்தாய்வு பகிர்ந்து கொள்வதற்காக விவசாயிகள் ஒன்று கூடினர். அதில் நானும் அன்று முதல் கலந்து கருத்துக்களைக் கேட்டறிந்தேன். இந்த கூடுதல் ஒவ்வொரு மாதமும் 6ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் வரை நடந்து வந்தது. அப்போது பதிவு பெறாத சங்கமாக நடந்து வந்தது. அப்போது அதன் தலைவராக இருந்தவர் டாக்டர் திரு. சுகுமார் ராஜா. அப்போது ஏனோ தானோ என்று கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது டி.சி.எப். ஆக இர்ந்தவர் திரு. எஸ்.கே. சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ். துணை வன பாதுகாவலர் வன மரபியல் கோட்டம், கோவை. ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகை பற்றி சித்தா டாக்டர் திரு. திருமலைசாமி விளகமளிப்பார். டாக்டர் திரு. சுகுமார்ராஜாவும் நோய்பற்றிக் கூறுவார் அதை குணப்படுத்துதல் பற்றி விவறிப்பார். அப்போது அந்த கூட்டம் நடைபெருவது யாருக்கும் அதிகமாகத் தெறியாது. அந்தக் கூட்டம் சிறியதாகவே இருந்தது. அதில் விவசாயிகள் சிலபேர், மூலிகை உற்பத்தி செய்வோர் சிலர், நிறுவனங்களிலிருந்து ஒரு சிலரும் வந்தனர். ஆனால் நிரந்தரமான உறுப்பினர் யாரும் கிடையாது. பெயருக்கு மூலிகை வளர்ப்போர் சங்கம் என்று இருந்தது. பின் திரு.சண்முகசுந்தரம் அவரகள் 2006 ல் திருவண்ணாமலைக்கு மாறுதலில் சென்றார். அவர் செல்லும் போதுஇந்த மூலிகை வளர்ப்போர் சங்கம் தொடர்ந்து செயல்பட அடுத்து வரும் அதிகாரி அனுமதிப்பாறா என்பது தெறியாது அதனால் சங்கம் நிறைவு செய்யச்சொன்னார். பின் 6-6-2006 ல் நடந்த கூட்டத்தில் ஒரு சங்கம் ஏற்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அன்று கூடியிருந்தவர்கள் முடிவு செய்தார்கள். அதன் படி முறைப்படி தலைவராக கெ.தேவராஜன் அவர்களும் உபதலைவராக திரு. கெ.பி.குப்புசாமியும் செயலாளராக திரு.பி.வின்சென்ட் அவர்களும், உப செயலாளராக திருமதி. கண்ணம்மாள் ஜெகதீசன் அவர்களும், பொருளாளராக திரு. பாலசுப்பிரமணியம் அவர்களையும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தைப் பதிவு செய்யும் பணியை ஆடிட்டர் திரு.நாராயணசுவாமி அவர்களையும் (தற்போது கொள்கை பறப்புச்செயலாளர்) நியமிக்கப்பட்டது. அதற்கு அடுத்த கூட்டத்தில் சங்கத்தின் விதி முறைகள், சட்ட திட்டங்கள், விவசாயிகளும் மற்றவர்களும் பயன் அடைவது குறித்து விளக்கங்கள் அடங்கிய ‘பைலா’ உறுவாக்கி எல்லோரும் ஆமோதித்த பின் சங்கம் ‘கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்’ என்று பெயர் சூட்டப் பட்டது. தலைவர் வீட்டு முகவரியிலேயே பதிவு எண் 110/2006 எனப் பதிவு செய்யப் பட்டது. அதில் ஆண்டு சந்தா ரூ.120-00 என்றும் ஆயுள் சந்தா ரூ.1000-00 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.20-00 என்று முடிவு செய்து தொடங்கப்பட்டது.


அதன் பின் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 6 ந்தேதி துணை வன பாதுகாவலர் அலுவலகம் (முதல் மாடி) மரபியல் கோட்டம் பாரதியார் ரோடு, கோவை-641043 என்ற இடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளான திரு. வைகைமணிசங்கர், அவர்களும் திரு உலகநாதன் அவர்களும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். சிறப்புப் பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், மூலிகை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி அதிகாரிகள் சந்தைப் படுத்துவோர் என பல தரப்பட்ட வர்களைஅழைத்து சங்கக் கூட்டம் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. மூலிகைகளை இனம் காண ஆழியார் மூலிகைப் பண்ணை பார்வையிடப் பட்டது. இயற்கை வழி வேழாண்மை நடத்துவதையும் நேரில் பார்வையிடப்பட்டது. சங்க உறுப்பினர்கள் பல்வேறு பயிற்சிக்காக அனுப்ப ப்பட்டனர். அண்டை மாவட்டத்திலிருந்தும் அங்கத்தினர்கள் சேர்ந்தார்கள். தற்போது சுமார் 310 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது தான் பத்திரிக்கைகள் இச்சங்கத்தைப் பற்றி எழுதுகிறாகள். சென்ற மாதம் தமிழ்நாடு விவசாயபல்கலைக்கழகம் இரண்டு பிராஜக்ட் வெளியிட்டது. ஒன்று அக்ரோ பாரஸ்டரி மற்றோன்று கட்பிளவர் எக்ஸ்போர்ட் இதில் மரம் வளர்த்தி காகிதத் தொழிற்சாலைக்கு அனுப்ப நமது சங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.


சென்ற 6-9-2008 சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வரவேற்புறை திரு.எ.கெ.உலகநாதன் ஐ.எப்.எஸ். துணைவனப் பாதுகாவலர் வன மரபியல் கோட்டம் கோவை. முன்னிலை திரு.தியாகராஜன். எம்.ஏ. வன விரிவாக்க க்கோட்டம் கிருஷ்ணகிரி, சிறப்புரையாளர்கள் திரு.இருளாண்டி ஐ.எப்.எஸ். தலைமை வனப் பாதுகாவலர் வன விரிவாக்கம், சென்னை. மற்றும் திரு.எஸ்.கே. சண்முக சுந்தரம் ஐ.எப்.எஸ். துணை வனப் பாதுகாவலர், காடுவளர்ப்புத் திட்டம் திருவண்ணாமலை. அடுத்து மருத்துவ விளக்கவுரை டாக்டர் திரு.திருமலைசாமி, சித்த மருத்துவர் அய்யம்பனை மூலிகை பற்றிப் பேசினார்.

சென்ற ஆண்டு தனியார் நிலங்களிங் மரம் வளர்த்தல் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில் தகுதி பெற சிறு,குறு விவசாயியாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு தரிசு நிலச்சான்று, சிட்டா அடங்கல், எப்.எம்., பட்டாபுத்தகம் தேவை என்றனர் அதனால் விவசாயிகள் சான்று பெற அவதிப்பட்டனர். தன்னிடம் உள்ள சிறிய நிலத்தில் நெடுங்காலப் பயிரான மரத்தை நட விருப்பமில்லை. அதனால் ஆணைகளை மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தலைவர் திரு.தேவராஜன் திரு.இருளாண்டி தலைமை வனப் பாதுகாவலர் விரிவாக்கம் அவர்களிடம் கேட்டார் ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. பல்லடத்தைச் சேர்ந்த விவசாயி பத்தாயிரம் சந்தனமரம் நாற்றுக்கள் நட்டு 2 வருடம் ஆகிறது அதற்குப் பாதுகாப்புக் கேட்டார். அது 15 வது வருடத்தில் பலன் கிடைக்கும் என்றார். மற்றொருவர் விதைகள் கேட்டார் ஆனால் இங்கு விதைக் கிடங்கில் விதை 3 ஆண்டுகளாக சேகரிப்பதில்லை, இருப்பு இல்லை.


திரு.சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ். அவர்கள் பேசும் போது கேட்ட கேள்விகளுக்கு சங்கத் தலைவர் திரு.தேவராஜ் பதில் கூற முடியவில்லை. அந்தக் கேள்விகள்-

1. இந்த சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை என்ன நடவடிக்ககை எடுக்கப்பட்டது?

2. இதுவரை சங்கத்திற்கு நிதி ஒதுக்கப் படவில்லை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?

3. வங்கிகளுக்கு நிதி உதவி கேட்டு எந்த பிராஜக்ட் அனுப்பவில்லை ஏன்?

4. வங்கிகளிடம் கடன் பெறுவது திருப்பிக் கட்டுவது குறித்த பிராஜக்ட்டுகள் எங்கே?

5. தொழில் நுட்ப திறமையாளர்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ளதா?

6. கூட்டம் வனத்துறை அலுவகத்தில் நடத்தப்படுவதை தவிர்த்திருகலாமே ஏன்?

7. சங்கத்திற்கு மத்திய நர்சரி ஏன் ஏற்படுத்தவில்லை?

8. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு மார்கட் வசதி ஏன் ஏற்படுத்தவில்லை?

9. சங்கம் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுக்கள் ஏன் அளிக்கப் படவில்லை.

10. எத்தனை பிராஜக்டுகள் அனுப்ப ப்பட்டுள்ளன?

11. சங்கம் வனத்துறைக்கு என்ன செய்கிறது?

12.சங்கத்திற் கென்று வெப்சைட் தனியாக ஏன் ஏற்படுத்த வில்லை?

13. கலைக்டரிடம் சங்கம் பற்றி செயல் பாடு ஏன் தெறிவிக்க வில்லை? விவசாயிகள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள வில்லை?

14.உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ஏன் வழங்கப் படவில்லை?

15. சங்கத்திற்கென்று கம்யூட்டர், புரொஜகடர் ஏன் வாங்கவில்லை?

மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கூற இயலாது. இவை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும். இந்த வலைப் பதிவை பார்ப்பவர்கள் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெறிவிக்கலாம். (தொடரும்)

No comments: