Friday, September 19, 2008

பாமரோசாபுல்


பாமரோசாபுல்

பாமரோசாபுல் என்பது சாதாரண கணம்புல் போன்று தான் இருக்கும். சுமார் 3 அடிஉயரம் வரை அதிக பக்கப் பயிர்களுடன் வளரும். இதன் ஆங்கிலப் பெயரும் குடும்பமும்-CYMPOBLGON SP.,GRAMINEAE. இது ஒரு வாசனைப்புல். இது எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கரிசல் மண்ணில் நன்கு வளரக்கூடியது. இது வளர்ச்சியைத் தாங்கி வளரும் பயிர். இது இரவையிலும் மானாவரையிலும் வளரக் கூடியது. தண்ணீர் வசதி இருந்தால் குறுகிய காலத்தில் நன்கு வளர்ந்து பூக்கள் தோன்றும். இதன் புல்லிலிருந்துவாசனை எண்ணெய் தயார் செய்யப் படுகிறது. அந்த வாசனை எண்ணெய வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. மேலும் இது பூஞ்சானைக் கொல்லியாக மிளகாயில் பழவாடல் நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

பாமரோசாபுல் பயிரிட நிலத்தை நன்கு உழுது சமப் படுத்தித் தொழு உரம் இட்டுத் தயார் நிலையில் வைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.100 க்குள் கிடைக்கும். விதைகளை நாற்றுப் பாத்தி அமைத்து நெருக்கமாகத் தூவி தண்ணீர்பாச்ச வேண்டும். நன்கு பராமரித்து 2 மாதம் வளர்ந்த அரை அடி உயரமுள்ள நாற்றுக்களை பண்படுத்திய நடவு வயலில் 1.5 அடிக்கு ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும். தண்ணீர் பாச்சி வரவேண்டும். மானாவாரியாக இருந்தால் மழை காலத்தில் நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழு உரம், 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிசத்து, 20 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை இட வேண்டும். 10 கிலோ துத்த நாக சல்பேட் கரைசலைச் செடிகளுக்கு தெளிப்பது எண்ணெய மகசூலை அதிகரிக்கிறது. ஒவ்வொரு அறுவடைக்குப்பின் 17 கிலோ யூரியாவை இடுவதால் இலை மகசூல் அதிகமாகக்கிடைக்கும்.

நட்ட ஆறுமாதம் கழித்து பூக்கும் தருணமே அறுவடை செய்ய ஏற்ற பருவம். இலைகளிலிருந்தும் பூங்கொத்துக்களிலிருந்தும் எண்ணெய் எடுக்கலாம். பின் வரும் மாங்களில் 3 மாத த்திற்கொருமுறை அறுவடை செய்யலாம். இந்தப்புல்லிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கென்றே பாயிலர்கள் தனி நபர்கள் வைத்துள்ளார்கள். அறுவடை செய்த இலைகள் ஒரு நாள் உலர்த்தி எண்ணெய் எடுக்கலாம். இந்தப் புல் 5 வருடங்களுக்குப் பின் கட்டைகளைத் தோண்டி எடுத்துவிட்டு மறுபடியும் நிலத்தை வழப்படுத்தி நாற்றுக்கள் மேலும் நடலாம். இந்தப் பயிர் செய்வதால் பின் தங்கிய மாவடமான தர்மபுரிக்கு ஏற்ற தொழிலாகத் தென்படுகிறது. ஆட்கள் கூலியும் குறைவே. அங்கு பாளையம் புதூர் மற்றும் அன்னசாகரம் ஆகிய ஊர்களில் எண்ணெய் எடுக்கும் பாயிலர்கள் தனி நபர்கள் அதிகமாக வைத்துள்ளார்கள். தற்போது ஒரு லிட்டர் எண்ணெய் ரூ.800-00 க்கு விற்கப் படுகிறது. அங்கு பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.

தென் மாவட்டங்களில் அதை அதிகமாப் பயிரிடுகிறார்கள்.சேலம், கோபி, தாளவாடி போன்ற இடங்களில் பயிர் செய்கிறார்கள். கோவை-துடியலுரைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆனைகட்டிக்கு அடுத்து 20 ஏக்கரில் பாமரோசபுல் வளர்த்தி சொந்தமாக பாயிலரும் வைத்து எண்ணெய் எடுத்துப் பார்த்தார் கூலி ஏற்றம் பில்லின் அவுட்புட் குறைவாகவே வந்துள்ளதாம். அதனால் அந்த ஏரியாவுக்குத் தகுந்த வெட்டிவேர் ஒரு ஏக்கர் போட்டுள்ளதாகச்சொன்னார். அவரது தொடர்பு எண்-9443076985.

இந்த பாமரோசாபுல் வளர்த்தி அனுபவம் பெற்றவர்கள் தங்களது கருத்துக்களை திரு.ஓசைசெல்லா அவர்களுக்குத் தெறிவிக்கலாம். தொடர்பு எண்-9994622423.

---------------------------------------------(தொடரும்)

No comments: