Sunday, February 22, 2009

காட்டாமணக்கு பயிற்சி


விவசாய அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

வரும் 26-02-2009 வியாளக்கிழமையன்று வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள உயரி எரிபருள் சிறப்பு மையத்தில், ‘காட்டாமணக்கு சாகுபடி மற்றும் பயோடீசல் உற்பத்தி’ குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. இதற்கு 150 விவசாயிகள் மட்டுமே தேர்வு செய்ய இருப்பதால் ஆர்வமுள்ள விசாயிகள் தங்கள் வருகையை முன் கூட்டியே கடிதம் மூலம் ‘ பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம், வேளாண் பறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர்-641003, தொலைபேசி- 0422 6611376’ என்ற முகவரியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செயுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(குறிப்பு- பயிற்சியின் போது மதிய உணவு, கையேடு, போக்குவரத்துச் செலவுகள் இலவசமாக வழங்கப்படும்.)

No comments: