Tuesday, June 17, 2014

சுய தொழில் செய்ய விருப்பமா?

சுய தொழில்  செய்ய விருப்பமா? அவினாசிலிங்கம் வாங்க...

அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலையில் உள்ள தொடர் கல்வித் துறை சார்பில் ஆறு மாதகால சான்றிதழ் பயிற்சி, ஒரு வாரம் முதல் மூன்று மாதம் வரையிலான குறுகிய காலப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அப்பேரல் டிசைனிங், ஹெர்பல் பியூட்டி கேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் அண்ட் அக்கவுன்டிங் சாப்ட்வேர், வெப் பேஜ் டிசைனிங் ஆகியன குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.

ஒரு வாரம் முதல் மூன்று மாதம் வரை வழங்கப்படும் குறகிய காலப்பயிற்சியில், அடிப்படை கம்ப்யூட்டர், ஹேண்ட் எம்ப்ராய்டரி, மெஷின் எம்ப்ராய்டரி, ஆரி எம்ப்ராய்டரி, பூ கட்டும் பயிற்சி,சிகை அலங்காரம், கவரிங் நகைகள் தயாரித்தல், காகிதப் பைகள் தயாரிப்பு, புத்தகம் பைண்டிங், வீட்டு உபயோப் பொருட்கள் தயாரித்தல், மென்பொம்மைகள் தயாரித்தல், அடுமனை பதார்த்தங்கள் தயாரித்தல், பெண் அலங்காரம், உணவை பதப்படுத்துல், மசாலா பவுடர் தயாரித்தல், மெகந்தி மற்றும் சி புரோகிராமிங் ஆகியன குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தவறியவர்கள், இல்லத்தரசிகள், சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள், 0422 2449715 என்ற தொலைபேசி எண்ணிலும், முனைவர் வசந்தா, தொடர் கல்வித்துறை, அவினாசி லிங்கம் பல்கலை, மேட்டுப்பாளையம் ரோடு, கோவை என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி கோவை 'தின மலர்'  நாள் 18-6-2014.

-------------------------------------------------------------------------------(தொடரும்)

No comments: