Thursday, May 14, 2009

ஒரு இரங்கல் செய்தி.





எனது மனைவி சாரதாமணி 10-5-2009 அன்று மாலை 3-40 மணியளவில் இயற்கை எய்து விட்டாள் என்று வருத்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி.
உங்கள் அன்பன்
குப்புசமி.க.பொ.
கோவை-641037.
9487283644.

9 comments:

தங்க முகுந்தன் said...

வணக்கம் ஐயா!

செய்தியைக் கண்ணுற்றதும் ஆழ்ந்த கவலையடைந்தேன்! எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களோடு நேரடியாகப் பேசுவதற்கு தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டேன் - பதில் இல்லை. மன்னிக்கவும்.

குழலி / Kuzhali said...

மிக வருத்தமான செய்தி, என் ஆழ்ந்த அனுதாபங்கள்

kuppusamy said...

திரு தங்க முகுந்தன் அவர்களுக்கு திரு குழலி அவர்களிக்கும் எனது நன்றிகள். தங்கமுகுந்தன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டீர்கள் மன நிம்மதி அடைந்தேன். நன்றி.

தங்க முகுந்தன் said...

தங்களின் பின்னூட்டக் கருத்தை இப்போதுதான் பார்த்தேன்!
நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டீர்கள்.
பின்னர் நானும் தங்களுடன் பேசினேன். நீங்கள் ஒரு முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்ற வகையில் எனது மனவருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
உங்களுக்குத் தெரியாததா? எமது மக்கள் அங்கே படுகொலை செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்திய ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டேன்! அவர்களும் அமெரிக்கக் கடற்படையினரும் பேசுகிறார்களாம்! அங்கே எல்லாம் முடிந்தபிறகு எதைச் செய்வது? என்ன செய்வது? மிகவும் மனவேதனையோடு இதைக் குறிப்பிடுகிறேன்! ஏதேனும் தவறாக நினைக்க வேண்டாம். மன்னிக்கவும். நாமே தேடிக்கொண்ட வினையை அனுபவிக்கிறோம்!

kuppusamy said...

அன்பு நண்பர் தங்க முகுந்தன் அவர்களுக்கு தங்களது பின்னூட்டத்தை இப்பொழுதுதான் பார்த்தேன். அதற்குள் தமிழர்படுகொலை நிறுத்தப்பட்டதாக செய்தி படித்தேன். இந்தியாவிலிருந்து இருவர் செல்கனிறனர். அவர்கள் நேரில் பார்த்தால் தான் அங்குள்ள தமிழர்களின் அவல நிலை புரியும். ஏதோ வகையில் தமிழர்களிக்கு அங்கு நன்மை நடந்தால் சரியே. உங்கள் வலையதளம் பார்த்தேன். நன்றாக உள்ளது. நன்றி.

Osai Chella said...

எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றுதான் தகவல் அறிந்தேன். நேரில் வருகிறேன். தங்கள் துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய எனது நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள்.

kuppusamy said...

மிக்க நன்றி ஓசைசெல்லா அவர்களே. வேதனையைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. சந்திப்போம் நேரில்.

nandhu said...

செய்தியைக் கண்ணுற்றதும் ஆழ்ந்த கவலையடைந்தேன்! எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

kuppusamy said...

அன்பர் ந்ந்துவுக்கு மிக்க நன்றி.