
பண்ணைச்சுற்றுலா-பெரியகொடிவேரி.கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (
IFGTB)" கடந்த மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் இரண்டாவது
நாள் ஒரு பண்ணைச் சுற்றுலா ஈரோடு மாவட்டம் பெரிய
கொடிவேரியில் உள்ள ஸ்ரீ முருகவேல் வேளாண்மைப்
பண்ணைக்கு சுமார் 35 விவசாயிகள், விஞ்ஞானிகளுடன்
கொங்கு என்.கொளந்தசாமி அழைத்துச் சென்றார்.
செவாலியர், டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி பல
வெகுமதிகள் பெற்றவர் 9443006666 மிக்க ஆர்வம்
உள்ளவர். அவரது உரவினர் குமாரசாமி மற்றும் பழனிசாமி
இருவரும் இவருக்குத் துணையாக உள்ளார்கள்.
பண்ணை ஆரம்ப வருடம் 1993, பண்ணையின் பரப்பளவு
230 ஏக்கர். தண்ணீர் பாசனம் ஏற்படுத்திய வருடம் 1998.
பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு 160 ஏக்கர். ஆரம்ப
கட்டத்தில் மஞ்ஞ்சள், மரவள்ளி, சோளம், வாழை, நெல்,
கரும்பு, ரோஸ்மேரி, பாம்ரோசா, சபேத்முசலி, கோசாப்
பழம், பாகல், புடல், பூசனி, புகையிலை மற்றும் எள்
ஆகியன பயிரிடப்பட்டன. திராச்சையும் நெல்லியும்
நீண்டகாலப்பயிர்களாக இருந்தன.
பெரிய கொடிவேரி அணைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில்
பம்பிங் செய்ய கட்டிடங்கள் அமைத்து 30 எச்.பி. உள்ள
5 சர்வீசுகள் பெற்றுள்ளார். அங்கிருந்து பண்ணைக்கு 12 அஙுகுல
எ.சி.சி. பைப் மூலம் 2000 மீட்டர் ஒன்றும் 1250 மீட்டர் பைப்
ஒன்றும் நிலத்தடியில் பதித்து பண்ணையில் உள்ள பெரிய
நீச்சல் குளம் போன்ற தொட்டிக்குக் கொண்டுவந்து அதிலிருந்து
தோட்டதுதிற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பண்ணைக்குள்
30 எச்.பி. ஒரு சர்வீசும் 10 எச்.பி. 5 சர்வீசும் அமைத்துள்ளார்.
எந்தக்காலத்திலும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை.
பயிர்கள் முக்கோண நடவுமுறை.
10'X 10' மலைவேம்பு 13 ஏக்கர்6000 கன்றுகள். 22 மாதங்கள்
13'X 13' மூங்கில் வல்காரீஸ் 5 ஏக்கர் 1400 கன்று. 18 மாதம்
15'X 15' மூங்கில் வல்காரீஸ் 8 ஏக்கர் 1600 கன்று. 6 மாதம்
5.5'X 5.5'யூகோலிப்டஸ்,லாரா.10 ஏக்கர் 16000 கன்று. 27 மாதம்
12'X 12' நாட்டு வாகை, பூவரசு 5 ஏக்கர் 800 கன்று. 18 மாதம்
8' X 8' மகாகணி, காயா. 2000 கன்று 14 மாதம்
5' பார் கரும்பு நிலத்தடி சொட்டு நீர். 22 ஏக்கர்
5' பார் கரும்பு சாதாரண முறைப்பாசனம்.10 ஏக்கர்.
----------பாப்புலர் மரம் 30 கன்று 6 வருடம்.
----------தென்னை. 3000 கன்றுகள் 105 வருடம்.
----------தென்னை பதிமுகம் ஊடுபயிர்.800 கன்றுகள் 2 வருடம்.
---------- சைமரூபா (சொர்கமரம்) 30 கன்று 6 வருடம்.
---------- சந்தனம். 6 கன்று. 2 வருடம்.
=====================================================
பயிர்கள் நேர் நடவு முறை.
15'X 15' குமழ் மூங்கிலுக்கு இடையில்.8 ஏக்கர் 1500 கன்று 6 மாதம்
5'X 5' குமிழ் தனியாக-----------அரை ஏக்கர்400 கன்று 14 மாதம்.
5'X 5' பென்சில் தனியாக-------அரை ஏக்கர் 400 கன்று 14 மாதம்.
6'X 6' பதிமுகம் தனியாக-----17 ஏக்கர் 17000 கன்று. 4 வருடம்.
5'X 5' சவுக்கு ஜுங்குலியான-----10 ஏக்கர் 18000 கன்று 27 மாதம்.
12'X 12' ஈட்டி---------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' சிசு----------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' செஞ்சந்தனம்-------------- 200 கன்று 18 மாதம்.
=========================================================
பண்ணைமுழுதும் ஒறே பசுமையாக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு
மட்டும் கிச்சிடிசம்பா நெல் பயிரிட்டுள்ளார். சர்கரை ஆலையிலிருந்து
உரம் டன் கணக்கில் வாங்கி மற்ற சாண உரங்களுடன் கலந்து நல்ல
கலப்புரமாக மாற்றி இடுகிறார். எல்லா மரங்களுக்கும் சொட்டு நீர்
பாசன முறைதான் பின்பற்றுகிறார். எல்லாமே வளமாக உள்ளன.
தென்னையில் பதிமுகம் மரம் நட்டதால் பதிமுக முட்கள் உள்ளே
செல்ல முடியாமல் தடையாக உள்ளன.
பார்க்கவேண்டிய மரப்பண்ணை. வாழ்க வழமுடன்.
------------------------(விவசாயம் தொடரும்)