Wednesday, November 18, 2009

பஞ்சகவ்யா.



பஞ்சகவ்யா தொடர்ச்சி

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை.

தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய தொழில் நுட்பத்தில் அனுபவம்
வாய்ந்த, இயற்கை வழிச்சாகுபடியாளர்களின் சீரிய செயல்
முறைகளின் அடிப்படையில், கீழ் காணும் மூலப்பொருட்
கள் மற்றும் உற்பத்தி முறைகளைக் கொண்டு பஞ்சகவ்யா
தயாரிக்கப்படுகிறது.

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க தேவையான பொருட்கள்.

பசுஞ்சாணம் ------------------------- 5.0 கிலோ

பசுவின் கோமையம் ------------------ 5.0 லி

பசும்பால் ---------------------------- 2.0 லி

தயிர் -------------------------------- 2.0 லி

நெய் -------------------------------- 1.0 லி

கரும்புச்சாறு ------------------------- 3.0 லி

தென்னை இளநீர் --------------------- 3.0 லி

வாழைப்பழம் ------------------------ 2.0 கிலோ


பசுஞ்சாணிஐந்து கிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு
லிட்டரைக் கலந்து, பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில்
நான்கு நாட்கள் வைத்து தினம் காலை மாலை இரு முறை
இதைப் பிசைந்து விட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற
பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண் பானை
அல்லது சிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி
யில் போட்டு நன்கு கரைத்து கலக்கி, கம்பி வலையால்
அல்லது நைலானாலான கொசுவலையை கொண்டு மூடி
நிழலில் வைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம்
காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட
வேண்டும். இது பிராணவாயுவை பயன் படுத்தி வாழும்
நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த
முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

பஞ்சகவ்யாவின் இயல்வேதிப் பண்புகளை ஆராய்ததில்
அதில் பயிருக்குத்தேவையான தழை, மணி, சாம்பல்
சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பயிர்
வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம்
மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் இருப்பது
கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யாவில் கரும்புச்சாறு
வெல்லம் ஆகியவை ஒரு பாகமாக சேர்ப்பதால்
அது அமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும்
நுண்ணுயிர்களான ஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ்
ஆகியவையும் பஞ்சகவயாவில் அதிகம் காணப்படு
கின்றன. லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங்
கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய்
எதிர்ப்புப் பொருடகளையும் உற்பத்தி செய்கிறது.
இப்பொருட்கள் நோய்க் கிருமிகளை எதிருக்கும் திறன்
பெற்றதோடு உயிர் வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல்
படுகிறது. இதோடு ஐசோபிரின் கூட்டுப் பொருட்களும்
பஞ்சகவ்யாவில் உள்ளன.

ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை உற்பத்தி செய்ய ஆகும்
செலவு சுமார் 35 முதல் 40 ரூபாய் ஆகும். மேலும்
விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளிலிருந்து
கிடைக்கும் பொருட்களிலிருந்து மிகப் பெரிய அளவில்
பஞ்சகவ்யாவை தயாரித்து பயன் பெற முடியும்.
பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகவ்யா தெளிக்கும்
முறையானது வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்க
ருக்கு பயிர்களுக்கு 3.5 லிடர்ரும், மரங்களுக்கு 4.7
லிட்டரும் ஒரு தடவை தெளிப்பதற்கு தேவைப்படும்
பஞ்ணகவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர்
தண்ணீருக்கு 30 மில்லி பச்ணகவ்யா) கலந்து 15-30
நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
பஞ்சகவ்யாவானது ஏராளமான நுண்ணூட்ட சத்துக்
களையும் வளர்ச்சியூக்கிகளையும், நுண்ணுயிர்களையும்
மற்றும் அங்கக தனிமங்களையும் கொண்டுள்ளது.
இதுவே தாவரங்களின் அதிகப்படியான வளர்ச்சியையும்
மகசுலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயர்களையும்,
மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாது
காத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, பூச்சி மற்றும்
நோய் கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் பெரும்
பங்கு வகிக்கிறது.


அடுத்து 'தசகவ்யா' தொடரும்.

2 comments:

விஜய் said...

பஞ்சகவ்யா பற்றிய தங்களது தெளிவான பதிவிற்கு நன்றிகள் கோடி.

விஜய்

kuppusamy said...

மிக்க நன்றி விஜய்.