Friday, December 3, 2010

வேளாண் பலகலையில் சாக்லேட் தயாரிக்க பயிற்சி.



சாக்லேட் மற்றும் மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி 
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் 7,8 ம் தேதிகளில்
நடக்கிறது. இது குறித்து, வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள  
அறிக்கை-
சாகலேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் 
தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் பயிறுசி வகுப்பு,
வேளாண் பல்கலையில் வரும் 7 மற்றும் 8 ம் 
தேதிகளில் நடக்கிறது. பயிற்சியின்போது, 
கொக்கோ மிட்டாய், பருப்பு மிட்டாய் மற்றும் 
சர்க்கரை மிட்டாய் வகைகளை எளிய முறையில் 
தயாரிப்பதறிகான தொழில்நுட்ப பயிற்சி 
அளிக்கப்படுகிறது, பயிற்சிக்கான 
கட்டணம் 1,000 ரூபாய். 

இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்,
பல்கலைக்கு நேரில் வந்து பயிற்சி கட்டணத்தை 
செலுத்தி  பெயர் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 
பயிற்சிக்கான கட்டணத் தொகையை, ‘டீன், வேளாண்மை 
இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ 
என்ற பெயரில் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் 
வங்கியில் செலுத்தும் வகையில் வரைவோலை எடுத்து, 
‘பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின் சார் 
தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, 
கோவை-  641003 என்றி முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பெயர் பதிவு செய்ய வரும் 6ம் தேதி கடைசி நாள்

விபரங்களுக்கு, 0422- 6611340, 6611268 என்ற எண்களில் 
தொடர்பு கொள்ளலாம்.

---------------------------------(தொடரும்)

No comments: