Friday, January 18, 2013

வெள்ளாடு பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.




வெள்ளாடு.


வெள்ளாடு பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.

கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு வளர்ப்பு, மற்றும் வெண் பன்றி வளர்ப்பு என்ற இரண்டு சுய வேலை வாய்ப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

கிராம்ப்புற மக்களின் வருவாயை உயர்த்தவும், தொழில் முனைவோரது மேம்பாட்டிற்காகவும், இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.  பயிற்சிகாலம் ஒரு மாதமும், பயிற்று மொழி தமிழிலும் இருக்கும்.



ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் இந்த மையத்தை, நேரிலோ அல்லது 0422-2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர் தேதி 17--1--2013.

-----------------------------------------------------------------(தொடரும்)

No comments: