Tuesday, October 13, 2009

உயர்தர மரக்கன்று உற்பத்தி

-------------------------------(பயிற்சிமுடித்து நிழற்படம்)
உயர்தர மரக்கன்று உற்பத்தி.’

கோயம்புத்தூர், இரத்தினசபாபதிபுரம்,
கௌலிபிரௌன் சாலை அருகே
வனவளாகத்தில் ‘வனமரபியல் மற்றும்
மரப்பெருக்கு நிருவனம்’ (I.F.G.T.B.)
சுமார் 30 விவசாயிகளுக்கு மேல்
உயர்தர மரக்கன்று உற்பத்தி செய்வது
பற்றித் தொழில் நுட்பங்கள் மற்றும் பல
தகவல்கள் சென்ற 8-10-2009 மற்றும்
9-10-2009 தேதிகளில் விஞ்ஞானி
கள் வகுப்பறை விளக்கமும்,
கலந்துறையாடலும் செயல்முறை விளக்கமும்,


மரப்பண்ணை சுற்றுலாவும் சிறப்பாக அளித்
தார்கள். இந்த பயிற்சியின் இன்றி
யமையாயது குழுப்புகைப்படத்துடன் சான்றிதழும்
அளித்தது விவசாயிகளின் வாழ்வில் மறக்க
முடியாத ஒன்று. மேலும் இந்த நிறுவனத்தின்
இயக்குனர் திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ்.
அவர்கள் இந்தப் பயிற்சிக்கு மிகவும்
உருதுணையாக இருந்து பல அறிவுறைகள்
அளித்தார்கள். இந்த நிறுவனம் காரமடை
அருகே ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளது.
அதில் பல அறிய செயல்களையும் ஆராய்ச்
சிகளையும் செய்து விவசாயிகள் பலரையும்
தன்வயம் (I.F.G.T.B.பக்கம்) இழுக்கும்
என்பதில் ஐய்யமில்லை.
திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ். அவர்
கள் இந்த 2 நாட்கள் பயிற்சிக்கு தலைமை
யேற்றுத் தொடங்கிவைத்து ஆற்றிய உரையில்
சில துளிகள்.

நமது நாட்டின் பரப்பளவில் 23 சதவீதமே
வனங்களைத் தாங்கியுள்ளது. அவ்வனங்க
ளும் கால்நடை மேய்ப்பு, மரம்
வெட்டுதல், வேட்டையாடுதல், காட்டுத்தீ
போன்ற பல்வெறு விதமான இன்னல்
களுக்கிடையே வளர்ந்து வருகின்றன.
இத்தகைய காரணங்களால் நமது காடு
களின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு
ஒரு எக்டேரில் 2.1 கனமீட்டருடன் ஒப்பிடும்
பொழுது இது மிகவும் குறைந்த தாகும்.
இத்தகைய காடுகளிலிருந்து நமது தேவை
களைப் பூர்த்தி செய்வதாயிருந்தால்
அவை மேலும் நலிவடைய நேரும்.

இயற்கையான காடுகளில் இருந்து நமது
தேவைகளைக் குறைக்க ஒரு வழி வன
மரத்தோட்டங்கள் ஏற்படுத்துவதே யாகும்.
இத்தகைய தோட்டங்களை விவசாயம்
செய்ய இயலாது தரிசு நிலங்களில் உருவாக்க
இயலும். நீர் பற்றாக் குறை, ஆள் பற்றாக்குறை,
குறைந்து வரும் உற்பத்தித் திறன் மற்றும்
வருமானம் போன்று பல இன்னல்களை
விவசாயம் சந்தித்துவரும் வேளையில்
விவசாய நிலங்களிடையே மரவளர்ப்பு பெரும்
பெருமளவில் உதவக்கூடும். இவ்வாறு வனத்
தோட்டங்கள் மற்றும் விவசாய நிங்களிலே
மரவளர்ப்பு போன்ற திட்டங்கள் செயல்
பட முக்கியத் தேவை தரமான நாற்றுக்களே.
மரபுத்திறன், செயல் திறன் மற்றும் தோற்றம்
இவற்றில் சிறந்து விளங்கும் மரக்கன்றுகளை
வளர்ப்பதன் மூலம் நமது மரவளர்ப்பில்
உற்பத்தித் திறனை ஆண்டு ஒன்றுக்கு
ஒரு எக்டேரில் இருபதிலிருந்து மூப்பது கன
மீட்டர் வரை உயர்த்த இயலும். இத்தகைய
தோட்டங்கள் பெருகினாலே நமது நாட்டின்
மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்களின்
தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். மேலும்
இதனால் மரம் சார்ந்த தொழிற்சாலைகளும்
நன்கு இயங்க இயலும். இத்தகைய
தோட்டங்கள் கிராமப்புரங்களில் அமைவ
தால் ஊரக வளர்ச்சிக்கும் உதவும். மேலும்
நமது நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடு
கள் அமைய வேண்டும் என்ற கொள்கையை
அடையவும் வழிகோலும்.

இவ்வாறு வனத்தோட்டங்களின் மற்றும்
விவசாய நிலங்களிலுள்ள மரப்பயிர்
சாகுபடியின் உற்பத்தித்திறனை பெருக்கும்
நோக்கதுதுடன் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் கோவையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு 70 தலைப்பில் ஆராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன. ஆராய்ச்சியன் முடிவுகள்
சிறந்தவை கிராம மக்களுக்குச் சென்றடாய
வேண்டும் என்று கூறினார்.
--------------------------------(தொடரும்.)

No comments: