Thursday, October 29, 2009

வேளாண் தேசிய மாநாடு

கோவையில் வேளாண் தேசிய மாநாடு.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்
வரும் நவம்பரில் 6,7,8 ஆகிய தேதிகளில் வேளாண்மை
அறிவியல் நிலையங்கிளின் தேசிய மாநாடு நடக்கவுள்ளது.

முதல் நாள் நிகழ்சியில் தமிழக முதல்வர் கலந்து
கொளிகிறார். மத்திய வேளாண் மற்றும் நுகர்வோர்
நலம், உணவு மற்றும் பொது வினையோக அமைச்சர்
திரு சரத்பவார் வேளாண் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள்
பங்கேற்கின்றனர். மாநாட்டில் வேளாண் அறிவியல் நிலைய
விஞ்ஞானிகளின் அனுபவங்கள்,வெற்றிக் கதைகள், சிறப்பு
தொழில் நுட்ப பறிமாற்றம் குறித்த கருத்துப் பறிமாற்றம்
நடைபெறும்.

வேளாண் பல்கலை துணைவேந்தர் திரு முருகேசபூபதி
மேலும் கூறியதாவது-

தேசிய அளவில் 569 வேளாண் அறிவியல் நிலையங்கள்
இயங்கி வருகின்றன. அதில் 30, தமிழகத்தில் உள்ளன
இதில் 14, கோவை வேளாண் பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ளது. தேசிய அளவிலான 569 வேளாண் அறிவியல்
நிலையங்களின் சார்பில் விஞ்ஞானிகள் இம்மாநாட்டில்
பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் துவக்கவிழாவில், தலை
சிறந்த வேளாண் அறிவியல் நலையங்களுக்கான விருதுகள்
வழங்கப்படும். பல்கலை வளாகத்தில் 150 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழவர் இல்லம் திறந்து
வைக்கப்படும்.



------------------------(விவசாயம் தொடரும்)

No comments: